கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Wednesday 9 January 2013

கருத்துள்ள ஜெபம்

எலியா என்பவன் நம்மைப்போலப்பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்றுவருஷமும் ஆறுமாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை -(யாக்கோபு 5:17).

மார்ட்டின் லூத்தர் அதிகாலை 4-6 மணி வரை ஜெபிக்கும் பழக்கமுடையவர். இதைக் குறித்து அவர் கூறும்போது, 'நான்அதிகாலை ஜெபம் செய்யாவிட்டால் அந்நாளை என் வாழ்வில் இழந்து விட்டதாக உணருகிறேன்' என்றார். ஒருமுறை அவருடைய வாழ்வில் நடைபெற்ற வேடிக்கையான சம்பவம் மூலம் இன்னும் கருத்தாய் ஜெபிக்கும் பழக்கத்தை கற்றுக் கொண்டார். ஒரு நாள் அவர் மதிய உணவு சாப்பிட்டு கொண்டிருக்கும்போது அவரது வளர்ப்பு நாய் அருகில் வந்து படுத்துக் கொண்டது. சாப்பாட்டின் நடுவில் எசேத்சையாக தனது நாயைப் பார்த்தார். அது அவர் தட்டிலிருந்து வறுத்த கறியையே உற்றுப்பர்த்து கொண்டிருந்தது.
.
அதன் கவனத்தை திருப்பும் வண்ணமாக அதன் காதை இழுத்தார். உடம்பை தட்டினார். ஆனால் அதன பார்வையெல்லாம், ஏக்கமெல்லாம், நோக்கமெல்லாம், குறியெல்லாம் அந்த வறுத்த கறியின் மீதே இருந்தது. என்ன செய்தாலும் அதன் கவனம் திரும்பவில்லை. உடனே அவர் அந்த கறித்துண்டை எடுத்து நாய்க்கு போட்டார். அதை போட்டவுடன் அது வாலை ஆட்டிக்கொண்டு குதித்தெழுந்து மகிழ்ச்சியோடு அதை சாப்பிட்டது. மார்டின் லூத்தர் இதை தனது டைரியில் எழுதும்போது 'என்னுடைய நாயைப்போல என் நினைவெல்லாம், ஏக்கமெல்லாம், நோக்கமெல்லாம், குறியெல்லாம், பார்வையெல்லாம் நான் ஜெபிக்கும் காரியத்தின் மீது ஒருமுகப்படுத்தி ஜெபிப்பேனானால் நான் ஜெபிக்கிற எல்லா ஜெபங்களுக்கும் பதில் கிடைப்பது நிச்சயம் என கண்டு கொண்டேன்' என எழுதி முடித்தார்;.
.
பிரியமானவர்களே, நாம் ஒவ்வொருவரும் ஜெபிக்கிறவர்கள்தான். ஆனால் நம்முடைய ஜெபம் எப்படிப்பட்டதாய் இருக்கிறது என சிந்தித்து பார்க்க வேண்டும். நாம் ஜெபிக்கும் காரியத்திற்கான பதிலை தேவனிடமிருந்து பெற்றுக் கொள்வோம் என்ற விசுவாசம் நம்மிடம உண்டா,? அல்லது சாதகமற்ற சூழ்நிலைகளை கண்டும் முழு நம்பிக்கையை தேவன் மேல் வைக்க கூடாத அளவிற்கு நம்மை வழிவிலகச் செய்யும் மனித நம்பிக்கைகளை கண்டும் ஜெபத்திலே பின்னடைகிறோமா? மாறாக நமது நோக்கம், நினைவு, ஏக்கம், பார்வையெல்லாம் தேவன் மேல் மாத்திரம்வைத்து, ஜெபத்திலே உறுதியாய் தரித்திருப்போமானால் தேவனிடமிருந்து நிச்சயமாய் பதிலை பெற்று கொள்வோம்.
மார்டின் லூத்தர் நான் அதிகாலையில் ஜெபிக்காவிட்டால் அந்த நாளை இழந்து விட்டதை போல உணருகிறேன் என்றார். நம்மைக் குறித்தும் நம் ஜெபத்தைக் குறித்தும் என்ன சொல்லுவோம்? ஜெபிக்காமல் நிர்விசாரமாயிருந்தும் ஐயோ ஜெபிக்கவில்லையே என்று உணர்வற்றிருக்கிறோமா? அல்லது ஜெபித்தும் விசுவாசமில்லாமல் கடமைக்காக ஜெபிக்கிறோமா? சிந்திப்போம்.
.
'எலியா என்பவன் நம்மைப்போலப்பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்றுவருஷமும் ஆறுமாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை' என்று வேதம் கூறுகிறது. எலியா தீர்க்கதரிசி நம்மைப் போல சாதாரண மனிதனாக இருந்த போதிலும், அவர் ஜெபித்தபோது, மூன்றுவருஷமும் ஆறுமாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை என்று பார்க்கிறோம். அவர் பக்கம் பக்கமாக ஜெபிக்கவில்லை. அவருடைய ஜெபம் சுருக்கமாக இருந்தாலும், அதை கருத்தாக ஜெபித்தார். தேவன் அந்த ஜெபத்தை கேட்டு பதில் கொடுத்தார்.
.
'அந்திப்பலி செலுத்தும் நேரத்திலே, தீர்க்கதரிசியாகிய எலியா வந்து: ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலிலே நீர் தேவன் என்றும், நான் உம்முடைய ஊழியக்காரன் என்றும், நான் இந்தக் காரியங்களையெல்லாம் உம்முடைய வார்த்தையின்படியே செய்தேன் என்றும் இன்றைக்கு விளங்கப்பண்ணும். கர்த்தாவே, நீர் தேவனாகிய கர்த்தர் என்றும், தேவரீர் தங்கள் இருதயத்தை மறுபடியும் திருப்பினீர் என்றும் இந்த ஜனங்கள் அறியும்படிக்கு, என்னைக் கேட்டருளும், என்னைக் கேட்டருளும் என்றான்' (1 இராஜாக்கள் 18:36-37).
.
பாகாலின் நானூற்று ஐம்பது தீர்க்கதரிசிகளுக்கு முன்பாக ஒரே மனிதனாக எலியா தீர்க்கதரிசி கர்த்தரே தேவன் என்பதை நிரூபிக்கும்படி ஒரு சிறிய ஜெபத்தைத்தான் செய்தார். ஆனால் அது கருத்துள்ள ஜெபமாக இருந்தது. அவர் அப்படி ஜெபித்து முடித்தவுடன் 'அப்பொழுது: கர்த்தரிடத்தில் இருந்து அக்கினி இறங்கி, அந்தச் சர்வாங்க தகனபலியையும், விறகுகளையும், கற்களையும், மண்ணையும் பட்சித்து, வாய்க்காலிலிருந்த தண்ணீரையும் நக்கிப்போட்டது' (38ம் வசனம்).
Related Posts Plugin for WordPress, Blogger...