கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Tuesday 4 September 2012

துர நோக்குடன் ஓடு

கர்த்தரால் மீட்க்கப்படவர்கள் திரும்பி ஆனந்தக்களிப்புடன் பாடி சீயோனுக்கு வருவார்கள்.( ஏசாயா 35 : 10 )

எவ்வளவுதான் விசுவாசம் இருந்தாலும் சில வேளைகளில் மனம் சோர்ந்து விடுகிறது தேவகரத்தின் வல்லமையை பலவிதங்களில் ருதித்த ஒருவர் தான் இப்படி மனம் நொந்து பேசினார். இதே நிலையில் நம்மில் பல பேர் இந்த ஆண்டின் இறுதிக்குள் நுழைந்திருக்கலாம் இது தவறு என்று சொல்ல வில்லை சோர்வுகள் சோதனைகள் வரத்தான் செய்யும் ஆனால் நாம் அவற்றில் முழ்கி அழிந்து போய்விடக்கூடாது. நமது சந்தோஷம் கெட்டுப்போக குறிப்பிட்ட பிரச்சனையிலும் பார்க்க நாம் அதை கண்ணோக்கும் விதமேதான் முக்கிய காரணம்.

ஒரு வனாந்தரப்பாதையில் தன் இராணுவத்தை வழிநடத்திக்கொண்டு சென்ற ஒரு சீன இளவரசனின் பழைய கதையுண்டு வழியில் எல்லோரும் தாகத்தால் களைத்துவிட ஒரு சிப்பாயோ மயங்கியே விட்டான். இளவரசன் நாற்புறமும் சிப்பாய்களை தண்ணீர்தேடி அனுப்பினான். எல்லோரும் மேலும் களைத்து திரும்பினார்கள். மலர்ந்த முகத்தடன் திரும்பிய இளவரசன் ² தண்ணீரை காணவில்லை சிதறிக்கிடந்த சில் முந்திரிப்பழங்களைக் கண்டேன். இத் திசையில் போனால் முந்திரிப்பழங்கள் தாகத்தையும் தீர்க்கும் பசியையும் போக்கும் ² என்று சொன்னதுதான் தாமதம் எல்லோரும் களைப்பையும் மறந்து வேகமாக கிளம்பினார்கள். வெகுதுரம் சென்று விட்டனர். ஒன்றையும் காணவில்லை சற்றுத்துரம்தான் என்று இளவரசன் முன்னே பாய்ந்து சென்றான். இறுதியில் திராட்சை மரங்கள் தெரிந்தன. புசித்துப்பெலனடைந்தாகள்.
Related Posts Plugin for WordPress, Blogger...