கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Wednesday 29 August 2012

நன்மைக்கே!

காட்டு ராஜா சிங்கத்தின் குகை வாசலில் ஏகப்பட்ட மிருகங்களின் கூட்டம். காட்டு ராஜா வேட்டையாடச் சென்றபோது, கால்விரலில் அடிபட்டு, விரல் துண்டாகி விட்டதென்று அறிந்து துக்கம் விசாரிக்கத்தான் காட்டுப் பிரஜைகளான மிருகங்கள் கூடியிருந்தன. ஒவ்வொரு மிருகமாக வரிசையில் நின்று, குகையின் உள்ளே சென்று சிங்க ராஜாவைப் பார்த்து விட்டுத் திரும்பின.

சிங்கராஜா காலில் பலமான கட்டுடன் கட்டிலில் படுத்துக் கிடந்தது. அருகே சிங்கராணி, வழியும் கண்ரும் சிந்திய மூக்குமாக அமர்ந்து இருந்தது.

ஒவ்வொரு மிருகமாக வரிசையாகச் சென்று கொண்டிருந்தபோது வரிசையின் இடையே வந்து புகுந்து கொண்ட குள்ளநரி, சிங்கராஜாவின் அருகே சென்றதும் பெருமூச்சு விட்டபடி "ஊம் நடப்பது எல்லாம் நன்மைக்கே" என்றது. சிங்கராஜாவுக்கு கடுங்கோபம் வந்துவிட்டது.

நமது காலிலுள்ள ஒரு விரலே போய்விட்டது. இந்தக் குள்ளநரி நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று கூறுகிறதே. "பிடி அதை அடைத்துவை, குகைச்சிறையில்!" எனக் கட்டளை இட்டது சிங்கராஜா.

சிப்பாய்க் குரங்குகள் பாய்ந்து, நரியைப் பிடித்து இழுத்துச் சென்றன.

தன்னம்பிக்கை


ஒருவரின் விலை உயர்ந்த சீருந்தை (கார்) ஒரு சிறுவன் வியப்புடன் பார்ப்பதை பார்த்தார். அந்த சிறுவனின் ஆசையை அறிந்து கொண்ட அவர் சிறுவனை உக்காரவைத்து கொஞ்ச தூரம் ஓட்டினார்.

உங்களின் வாகனம் மிக அருமையாக இருக்கிறது இ என்ன விலை என சிறுவன் கேட்டான். அவரோ தெரியவில்லை, இது என் சகோதரன் எனக்கு பரிசளித்தது என்றார் அந்த மனிதர்.

அப்படியா!! அவர் மிகவும் நல்லவர் என சிறுவன் சொல்ல, நீ என்ன  நினைக்கிறாய் என எனக்கு தெரியும். உனக்கும் என் சகோதரனைப்போல் ஒரு சகோதரன் வேண்டும் என நினைக்கிறாய் அல்லவா? என்றார். 

சிறுவன் சொன்னான். ‘இல்லை, நான் அந்த உங்களின் சகோதரனைப்போல் இருக்கவேண்டும் என நினைக்கிறேன்’ என்றான்.

அன்பானவர்களே! நாம் இந்த கதையிலிருந்து ஒரு உண்மையை கற்றுக்கொள்ள வேண்டும் நாம் பிறருக்கு பிரதி உபகாரம் பாராமல் உதவி செய்ய வேண்டும் அதை தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நம்மிடம் எதிர்பார்க்கின்றார். எனனில் அவரும் உலகில் இருந்த நாட்களில் அதை கடைபிடித்து தான் வாழ்ந்தார் வேதாகமம் இப்படியாக ஒரு வசனம் கூறுகின்றது உன் கையின் பிரயாசத்தை தண்ணீரின் ஆழத்திலே போடு அனே நாட்களுக்கு பிறகு அதன் பலனைக்காண்பாய் என்று எனவே பலனை எதிர்பார்த்து உதவிகளை செய்யாமல் கடவுள் நிச்சயமாக நாம் செய்யும் உதவிகளுக்கு பலன் தருவார் என்ற நம்பிக்கையோடு செய்யுங்கள் தேவன் நிச்சயமாக அவர் உங்களை அளவில்லாமல் ஆசீர்வதிப்பார். 

Monday 27 August 2012

முழுமையும் மன்னிக்கப்பட்டது

எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ. எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ. அவர்கள் பாக்கியவான்கள். ( ரோமர் 4:7 )

மகன் செய்த குற்றத்திற்க்காக அவனை ஒரு மணிநேரம் அறையிலே தனிமையில் இருத்திவிட்டார். தந்தையார். ஒரு மணிநேரம் கழித்ததும் ஒரு கடதாசி தாளுடன் அறையைவிட்டு வெளியில் வந்த மகன் நேராக தகப்பனிடம் சென்றான். அப்பா நான் செய்த தவறுகளையெல்லாம் இத்தாளிலேயே எழுதியுள்ளேன். நான் இனிமேல் இப்படியாகச் செய்யமாட்டேன். என்று மனம் வருந்தி கேட்டுக்கொண்டான். அத்தாளை வாங்கிய தந்தையார் அதில் உள்ளவற்றையெல்லாம் ஒரு இறப்பரினால் அழித்துவிட்டு மகனே எல்லாவற்றையும் நான் மன்னித்து விட்டேன். இனி நல்லவனாய் பொறுப்புள்ளவனாய் நடந்து கொள்வாய் என்று நம்புகிறேன் என்றார்.

எழுதப்பட்ட தாள் எவ்விதம் வெறுமையாக்கப்பட்டதோ அதுபோலவே கறைபடிந்த எமது பாவ வாழ்வும் இயேசுவின் இரத்தத்தினால் ஒரு வெள்ளை தாளைப்போல சுத்திகரிக்கப்படுகிறது. தீயவர் திருடர், கொடியவர், கொலைஞர் இப்படியாக எத்தனையோ பேரின் வாழ்வு தேவனால் தொடப்பட்டு மாற்றங்கள் கண்டிருக்கிறது. செய்த குற்றத்திற்க்காக துக்குத்தண்டனைக்கு காத்திருந்த எத்தனையோ பேரின் வாழ்வும்கூடää சிறச்சாலையில் வைத்து தேவனால் தொடப்பட்டுள்ளது. துக்கு தண்டனையால் அவர்களின் உயிர் உடலைவிட்டு பிரிந்து போனாலும், நித்திய நித்தியமாய் தேவனோடுகூட வாழும் சிலாக்கியத்தை அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். நாம் விரும்பி பாடுகிற "ஒ தேவனுக்கு மகிமை என்னை துக்கியெடுத்தார்". என்ற பாடலை பாடியவரும் ஒரு துக்கு தண்டனை கைதியாகும். அவர் இரட்சிக்கப்பட்ட பின்னர், துக்கு தண்டனைக்காக அவரை அழைத்துச்சென்ற போதே அவர் இப்பாடலை இயற்றிப் பாடியதாகக் கூறப்படுகிறது. அவர் சந்தோஷத்தோடே அக்கரையில் நான் நின்று அவரை என்றென்றும் பாடுவேன் என்று பாடிச் சென்றதாகக் கூறப்படுகின்றது.

தேவன் நமக்கு பாவத்திருந்து தரும் விடுதலை முற்றிலும் முழுமையானது. பாவத்தை வெறுத்து வெற்றியோடு வாழவே தேவன் எம்மை இரட்சித்திருக்கிறார். மாறாக பாவத்தைச் செய்து, செய்து மீண்டும் மீண்டும் மன்னிப்பு பெறவும் இரட்சிப்படையவுமல்ல என்பதை நாம் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும். தேவன் தரும் வெற்றியானது முற்றிலுமான முழுவதுமான வெற்றி. அதைப் பெற்றுக்கொண்டவர்கள் வாழ்வில் வீழ்ச்சிக்கு இடமேயில்லை. விழுந்தாலும் மீண்டும் வெற்றியோடு எழுந்து வெற்றி வாழ்வு வாழ்வார்கள். எனனில் அவர்கள் இப்பொழுது இயேசுவுக்குச் சொந்தமானவார்கள்.

எனவே அன்பான நண்பர்களே இறைவன் தருகின்ற இலவசமான இரட்சிப்பை பெற்று இறைவனுடைய அன்பில் வளர்ந்து அனேகருக்கு பிரியோஜனமாய் மாறுவோமாக..

இரட்சிக்கும் இயேசுவின் இரத்தம் ( படித்து சுவைத்தது )

அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாகஎண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும்கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். - (பிலிப்பியர் 2:6-8).

உலகில் அநேக மக்கள், இயேசுகிறிஸ்துவை ஒரு நல்ல போதகராக ஏற்றுக் கொள்கிறார்கள். அவருடையஎளிய சத்தியங்களை இதுவரை யாரும் போதிக்காத சத்தியம் என்பதையும் ஏற்று கொள்கிறார்கள். ஆனால்அவர் தேவன், தேவனுடைய குமாரன் என்ற சத்தியததை ஏற்க மறுத்து, தங்களுடைய பாவத்திற்காக தம் இரத்தத்தை சிந்தின இரட்சகர்தான் இயேசு என்ற சத்தியத்தையும், தாங்கள் இரட்சிப்படைய ஒரு இரட்சகர்உண்டு என்பதையும் ஏற்க மறுக்கிறார்கள்.

கிரேக்க தத்துவ ஞானிகளான சாக்ரடீஸ் 50 வருடங்களும், பிளாட்டோ 50 வருடங்களும், அரிஸ்டாட்டில் 40 வருடங்களும் போதித்தனர். அவர்கள் உலகிலேயே மிகப் பெரிய தத்துவ ஞானிகள் என்று அழைக்கப்பட்டனர்.ஏன் அவர்களிடம் கற்றறிந்த கமாலியேலினிடத்தில்தான் பவுல் அப்போஸ்தலன் கல்வி பயின்றார்(அப்போஸ்தலர் 22:3). ஆனால் இவர்கள் மூவரும் இணைந்து 140 வருடங்கள் போதித்த போதனைகளைவிட இயேசுகிறிஸ்துவின் மூன்றறை வருட போதனை உலகத்தையே ஒரு மாறுதலுக்கு கொண்டு வந்தது.உலகத்தையே அசைத்தது. அவர்கள் மூவர் சேர்ந்து செய்த போதனைகளை கடைபிடிப்பவர்களைவிடஇயேசுகிறிஸ்துவின போதனைகளை கடைபிடிப்பவர்களே அதிகம்!

இயேசுகிறிஸ்து எந்த ஓவியங்களையும் வரையவில்லை. ஆனால் அவருடைய போதனைகள், லியானார்டோ டாவின்சி, மைக்கேல் ஆஞ்சலோ, ராபீல் போன்ற தலைசிறந்த ஓவியர்களுக்கு அவருடைய ஓவியங்களை வரைவதற்கு ஒரு ஊன்றுகோலாய் இருந்தது.

இயேசுகிறிஸ்து ஒரு கவிதையையும் எழுதவில்லை. ஆனால், மில்டன், டான்டி போன்ற உலகப் புகழ் பெற்றகவிஞர்கள் அவரைக் குறித்து உன்னதமான கவிதைகளை இயற்றினார்கள். அவர் ஒரு பாடலையும்எழுதவில்லை, ஆனால் பீத்தோவன், ஹைடன் போன்ற புகழ்பெற்ற பாடலாசிரியர்கள் அவரைக்குறித்து,பாடல்களை அதிகமாய் இயற்றியும், அருமையான தங்களது இசையால் அவரை புகழ்ந்தும் அவரைசிறப்பித்தனர். இன்றளவும், அவரைக் குறித்த பாடல்கள் ஒவ்வொரு மொழிகளிலும் அதிகமாய் பாடப்பட்டுவருகிறது.

இப்படி உலகத்தின் தலைச்சிறந்த மனிதர்கள், எந்த துறைகளில் இருந்தாலும் நாசரேத்திலிருந்து வந்தசாதாரண தச்சனாகிய இயேசுகிறிஸ்துவை சுற்றியே தங்களது தாலந்துகளை படைத்தார்கள். ஏன்மற்றவர்களுக்கு இல்லாத அந்த சிறப்பு, மூன்றறை வருடங்கள் மாத்திரமே ஊழியம் செய்தஇயேசுகிறிஸ்துவுக்கு உண்டு என்றால், அவர் மாத்திரமே உலக மக்களுக்கு இரட்சிப்பைக் கொண்டு வந்தார். தத்துவங்களோ, வேதாந்தங்களோ, இசையோ, கவிதைகளோ சாதிக்க முடியாத ஆத்தும இரட்சிப்பைஇயேசுகிறிஸ்து மாத்திரமே கொடுக்க முடியும். இயேசுகிறிஸ்து மாத்திரமே நம் வாழ்விலுள்ள பாவத்தின் கட்டுகளை அறுத்தெறிய முடியும், அதற்காகவே அவர் அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம்,அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். அவர் சாதாரண தச்சன் அல்ல, வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தர். அவரே மனுஷரூபமாய் காணப்பட்டு,அடிமையின் ரூபமெடுத்து, நம்முடைய பாவங்களுக்காக பலியானார். அவருடைய இரத்தத்தினால் மாத்திரமே நமக்கு இரட்சிப்பு உண்டு.
வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த

இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டு பண்ணினார்என்ற எபிரேயர் 9:12 ம் வசனத்தில் பார்க்கிறோம். வெள்ளாட்டுக்கடா அல்லது இளங்காளையினுடையஇரத்தம் நமது பாவத்தை போக்காது. இயேசுகிறிஸ்து தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகாபரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.

ஆகையால் எந்த தத்துவ ஞானிகளும், எந்த மத வல்லுநர்களும் ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக்

கொள்ளாவிட்டாலும் இயேசுகிறிஸ்துவின் இரத்தம் அவர்களுக்காக சிந்தப்பட்டது. எந்த தலைசிறந்தகலைஞனாக இருக்கட்டும், எந்த தலைச்சிறந்த தலைவனாக இருக்கட்டும், அவர்களுடைய பாவங்களை போக்கும் ஒரே ஜீவாதார பலி இயேசுகிறிஸ்துவின் இரத்தமே. அதை ஏற்றுக் கொள்கிறவர்களுக்கே நித்திய ஜீவன் உண்டு. உலகிலே வந்த எந்த மனிதனையும் பிரகாசிப்பிக்கிற ஒரே ஒளி இயேசுகிறிஸ்துவே. உலகிலே வந்த எந்த மனிதனையும் இரட்சிக்கிற தேவன் இயேசுகிறிஸ்துவே. ஆமென் அல்லேலூயா!

Sunday 26 August 2012

கொடுங்கள்.. நிச்சயம் பெறுவீர்கள்

பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது. அவன் போக வேண்டிய தூரமோ அதிகம். குடிக்க தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். இந்த பாலைவனத்திலேயே தாகத்தால் உயிரை விட்டு விடுவோமோ என்று நினைத்துக் கொண்டு இருந்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. கால்களை நகர்த்தவே மிகவும் கஷ்டமாக இருந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான். அங்கே ஆட்கள் யாரும் இல்லை. ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப் செட்டும் அருகே ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். “ஜக்கில் உள்ள தண்ணீரை அந்த பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்.”

அந்த பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது. அந்த தண்ணீர் ஊற்றினால் அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.

அந்தப் பயணி யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்த பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது. இனி தன்னைப் போல தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போக தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது. அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்த தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது.



இந்த நிகழ்ச்சியில் இரண்டு படிப்பினைகள் உள்ளன. ஒன்று நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்த காலக் கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது. “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?

அந்தப் பயணிக்கு கடைசியில் ஒரு மனநிறைவு இருந்ததே அது தான் மிகப்பெரிய பரிசு. விருது. நல்லது அல்லாததைச் செய்ய சந்தர்ப்பம் இருந்தும் அதைச் செய்யாமல் நல்லதைச் செய்து முடிக்கையில் தானாக வரும் ஆத்மதிருப்தியை விடப் பெரிய சபாஷ், கைதட்டல், விருது ஏதாவது இருக்கிறதா? இப்படி ஆத்மதிருப்தியைத் தரும் செயல்களை அதிகம் செய்யச் செய்ய மனிதன் தானும் உயர்ந்து, தன்னைச் சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்துகிறான்.

அடுத்த படிப்பினை நாம் நம் வாழ்க்கையிலும் கொடுத்தால் தான் பெற முடியும். இது பிரபஞ்ச விதி. இன்னும் சொல்லப் போனால் கொடுத்ததை மட்டுமே பெற முடியும். ஆனால் அதை கொடுத்த அளவைக் காட்டிலும் பன்மடங்காகப் பெறுகிறோம். மேலே சொன்ன பயணி ஊற்றிய தண்ணீரை விடப் பலமடங்கு தண்ணீரைப் பெற்று அனுபவித்து, முதலில் இருந்த அளவு நீரை எடுத்தும் வைக்கிறான். அவனைப் போல் நமக்கும் கொடுத்து விட்டால் இருந்ததையும் இழந்து விடுவோமே என்று சந்தேகம் தோன்றலாம். ஆனால் அந்த சந்தேகம் உண்மையை அடிப்படையாகக் கொண்டதல்ல. அந்த சந்தேகத்தோடு தர மறுக்கையில் நமக்கு வருவதையும் அடைத்து வைக்கிறோம்.

எனவே எது உங்களுக்கு அதிகம் வேண்டுமோ அதை நீங்கள் முதலில் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்துப்பாருங்கள். செல்வத்தை மட்டுமல்ல அன்பையும், மகிழ்ச்சியையும் கூட அடுத்தவர்க்குக் கொடுங்கள். கண்டிப்பாக அது பலமடங்கு பெருகி திரும்பவும் உங்களை வந்து சேரக் காண்பீர்கள்.


உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே.(மத்தேயு 5:42)
இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பரம பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள் (மத்தேயு 5:45)

முடிவு பரியந்தம்

முடிவு பரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான். (மத்தேயு 24 : 13 ) 

நெதர்லாந்து தேசத்திலே வெல்வற் குகை ஒன்று காணப்படுகின்றது. குளிர்காலத்தில் வெளவால்கள் உட்சென்று தங்கி உயிர் தப்புவதற்க்காக சில துவாரங்கள் உண்டு. இரு பையன்கள் இந்த குகையை ஆராய்ச்சி செய்ய நினைத்து இந்த துவாரத்திற்குள்ளால் குகைக்குள் குதித்திருக்கிறார்கள். அவர்கள் கொண்டு சென்ற வெளிச்சம் கிழே விழுந்து அணைந்துவிட அந்த பயங்கரமான இருளுக்குள் நடந்து நடந்து இறுதியிலே செத்துப்போனார்கள். இதிலே முக்கிய விடயம் இவர்கள் இறந்து கிடந்த இடத்திற்கும் குகையின் ஒரு வாசலுக்கும் இன்னும் ஒருசில அடிகள் தூரமே இருந்தது.

எத்தனை பரிதாபம் ஒரு சில அடிகள் தூரமே அதற்குள் மரித்துப்போனார்கள். ஜேர்மனியிலே கிழக்கு மேற்கு பேர்லின் இரண்டாக பிரிக்கபட்டு மதில் எழுப்பப்பட்டதால் அநேக குடும்பங்கள் ஒரே இரவில் பிரிக்கப்பட்டன. அப்பிரிவை தாங்கமுடியாமல் கிழக்கு பக்கத்தில் நடந்த உபத்திரவத்தை பொறுக்கமுடியாமல் அந்த சுவரை தாண்டிப்போக எத்தனித்து பாய்ந்து செல்லும்போது சுட்டு விழ்த்தப்பட்டவர்கள் அநேகர். இவர்கள் விழ்ந்து செத்த இடத்திலே சிலுவைகள் வைக்கப்பட்டுள்ளன. அதிலே ஒரு சிலுவையிலே பொறிக்கப்பட்டிருந்த ஒரு வாலிபனின் இறந்து போன திகதிää அந்த தடைச்சுவர் இடிக்கப்படுவதற்க்கு ஓரிரு மாதங்களுக்கு சற்று முந்தியதாகவே தெரிந்தது. பொறித்திருந்தவன் இன்னும் ஓரிரு மாதங்கள் பொறுத்திருந்தால் அவன் தன் உறவினருடன் வாழ்ந்திருக்கலாம் அல்லவா.இவற்றை பார்க்கும்போது ஆண்டவரின் வார்த்தைகளே ஞாபகத்திற்க்கு வரும். ஆம்ää முடிபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான். அந்த பையன்கள் உயிர் தப்ப இன்னும் கொஞ்சத்தூரம்தான் இருந்தது. இந்த வாலிபன் தன் குடும்பத்தோடு சுதந்திரமாக இணைந்து கொள்ள இன்னும் கொஞ்ச நாட்கள்தான் இருந்தது. அதற்குள் அவர்கள் இறந்து விட்டார்கள். தேவ வார்த்தையானது நம்மையும் எல்லாவிதத்திலும் எச்சரித்திருக்கிறது. முடிகால நிகழ்வுகள் நாம் வஞ்சிக்கப்படக்கூடி சாத்தியங்கள் எல்லாவற்றையும் சொல்லிவிட்டது. எனினும் நம்மிடம் பொறுமையில்லை. இறந்து விட்டால் அப்புறம் தருணமே கிடைக்காது. ஆகவேää இன்னும் கொஞ்சக் காலந்தான். எந்த வித கஷ்டமோ? உபத்திரவமோ? சற்று நீடியபொறுமையோடு காத்திருப்போமாக. கர்த்தர் தமது வார்த்தையின் படி செய்வார். நிலைத்திருக்க வேண்டியவர்கள் நாங்களே. அப்படியாக தேவனுக்குள் நிலைத்திருக்கும் போது தேவன் நம்மை தப்புவிப்பது உறுதி.


ஜெபம்: பிதாவே மரண ஆபத்து நேர்ந்தாலும் அடியேன் உமக்காக மாத்திரம் காத்திருக்க கிருபை தந்துää முடிவுவரை நீரே என்னை நடத்தியருளும். ஆமென். 

உனக்காக மரித்தார்.

ஆபிரகாம்லிங்கன் அமெரிக்க ஜக்கிய நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது நீக்ரோக்களை அதிகமாக நேசித்து அவர்கள் மீதிருந்த அடிமைதனத்தின் நுகத்தை முறிப்பதற்க்கு பாடுபட்டார். அடிமை வியாபாரத்தை ஒழிக்கும்படி அவர் சட்டத்தையும் இயற்றினார். இதனால் அவருக்கு என்ன நடந்தது தெரியுமா? ஒரு தீயவனின் துப்பாக்கி குண்டுக்கு பலியானார். குண்டு பாய்ந்த அவர் உயிரற்ற சடலம் அவரின் சொந்த ஊரான எலினா என்னுமிடத்திற்;கு திறந்த வண்டி மூலம் கொண்டு வரப்பட்டது. ஆயிரம் ஆயிரமாம் மக்கள் தங்கள் தலைவனுக்கு கடைசி அஞ்சலி செலுத்தினார்கள். அப்பொழுது ஒரு நீக்ரோ மாது, ஆபிரகாம்லிங்கனின் இறுதிக் கிரிகைகளை காண அவ்விடத்திற்க்கு விரைந்து வந்தாள். ஆனால் ஜனக்கூட்டமோ மிக அதிகமாய் நெருங்கிக் கொண்டிருந்தது.

அப்பொழுது அவள் தன் மகனைக் கையினால் பிடித்து ஜனக்கூட்டத்திற்க்கு மேலாக உயர்த்தி “ மகனே பார் நன்றாக பார் அவர் உனக்காக மரித்தார்” என்று கதறிக்கொண்டு.



“நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே தேவன் நம்மேல் வைத்த அன்பை விளங்கப்பண்ணினார்.

Saturday 25 August 2012

இயேசுவே, கிருபாசனப்பதியே

இயேசுவே, கிருபாசனப்பதியே, கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,ஏசுவே, கிருபாசனப்பதியே.

1.காசினியில் உன்னை அன்றி, தாசன் எனக் காதரவுகண்டிலேன், சருவ வல்ல மண்டலாதிபா!நேசமாய் ஏழைக்கிரங்கி, மோசம் அணுகாது காத்துநித்தனே, எனைத் திருத்தி, வைத்தருள் புத்தி வருத்தி,

…….எபிரேயர் 4:16 அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட இந்த அருமையான இந்த பாடலை எழுதிய ஜான் பால்மர் 1812-ம் ஆண்டு மயிலாடியில் பிறந்தார். தன் வாழ்வின் ஆரம்ப நாட்களிலேயே ஆண்டவரைத் தன் சொந்த ரட்சகராக ஏற்றுக் கொண்டு, நாகர்கோவில் பகுதியில் மிஷனரிகளுடன் சேர்ந்து, உற்சாகமாக நற்செய்திப் பணியாற்றினார். பால்மர் பல பாடல்களை எழுதிய சிறந்த கவிஞராவார். அவர் ஆண்டவரின் வாழ்க்கைச் சரித்திரத்தை அழகாகச் சித்தரிக்கும் “கிறிஸ்தாயணம்,” என்ற காவியத்தை உருவாக்கியிருக்கிறார்.

பால்மர் திருவனந்தபுரத்தில் அரசு அச்சகத்தில் பணியாற்றி வந்தார். நாதஸ்வர இசையைக் கேட்டு ரசிப்பது, அவருக்கு விருப்பமான பொழுது போக்காகும். எனவே, அவர் கேட்கும் இசையின் ராகத்தில் லயித்து, பரவசமாகப் பாடல்களை எழுதிவிடுவார்.

அந்நாட்களில், பொது இடங்களில் நாதஸ்வர இசைக்கச்சேரிகள் நடத்தப்படுவதில்லை. திருவனந்தபுரத்தின் புகழ்பெற்ற பத்மனாப சுவாமி கோவிலில், தினந்தோறும், அதிகாலைப் பூசை வேளையில், நாதஸ்வர இசை வாசிக்கப்படும். ஆனால், அக்கோவிலில் கிறிஸ்தவர் எவரும் நுழைந்தால், அவர்களுக்கு மரண தண்டனை உண்டு. எனினும், பால்மர் தன் உயிரையும் பொருட்படுத்தாது. ஒரு போர்வையால் தன்னை முழுவதும் மறைத்துக் கொண்டு, நாதஸ்வர இசையைக் கேட்கச் செல்லுவார். கேட்டு மகிழ்ந்த அதே ராகத்தில், அன்றே, ஆண்டவரைப் போற்றி, அழகான ஒரு பாடல் உருவாகிவிடும்.

இப்படிப்பட்ட ஆபத்தான சூழ்நிலையின் வழியே, உயிரைப் பணயம் வைத்து எழுதப்பட்ட அருமையான பாடல் தான், “இயேசுவே கிருபாசனப் பதியே” ஆகும்.

பால்மர், தமது 71 ஆண்டு கால வாழ்க்கையில், பல துன்பங்களுக்கும், வேதனை நிறைந்த அனுபவங்களுக்கும் உள்ளாயிருக்க வேண்டும். இவ்வுலக மக்களால் பல எதிர்ப்புகளை அவர் சந்தித்திருக்க வேண்டும். அடுக்கடுக்காய் வந்த இச்சோதனைகளால் தன் உள்ளம் சோர்ந்துபோகாதபடி, அவர் இறைவனின் துணையை நாடி, அவற்றின் மீது வெற்றியையும் பெற்றிருக்க வேண்டும். இவ்வனுபவமே அவரை, நாம் விரும்பிப் பாடும், “வாராவினை வந்தாலும் சோராதே மனமே,” என்ற சிறந்த ஆறுதல் பாடலை எழுதத் து}ண்டியிருக்கும்.

ஜான் பால்மர் இயற்றிய ஏனைய பாடல்களில் பிரபலமானவை:

1. பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே

2. ஓசன்னா பாடுவோம் ஏசுவின் தாசரே

3. இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார் கம்பீரமாய் (மகிழ் கொண்டாடுவோம்)

4. உன்றன் சுயமதியே நெறியென்றுகந்து சாயாதே

5. கிஞ்சிதமும் நெஞ்சே அஞ்சிடாதே நல்ல கேடகத்தைப் பிடி நீ

மூன்று மரங்களின் கதை

ஒரு அடர்த்தியான காட்டில் முன்று மரங்கள் சிறந்த நண்பர்களாக இருந்தன. இவை ஒவ்வொன்றிற்கும் ஒரு கனவு இருந்தன.முதல் மரம் தன் கனவை தன் நண்பர்களிடம் சொன்னது, ” நான் ஒரு மாணிக்க பேழையாக மாறவெண்டும் என்பதே என் கனவு, என்னுள் அரசர்கள் தங்கள் வைரம், முத்து, மாணிக்கம் போன்ற விலைமதிக்கமுடியாத செல்வங்களை வைக்கவேண்டும், நான் அதை பத்திரமாக பாதுகாக்க வேண்டும்”

இரண்டாவது மரம் தன் கனவை சொல்ல ஆரம்பித்தது, ” நான் ஒரு மிக பெரிய போர் கப்பல் ஆக வேண்டும், நான் அரசர்களையும், மாமன்னர்களையும் சுமக்க வேண்டும், பலத்த புயல், கொடும் காற்று போன்ற எதுவாக இருந்தாலும், அவ்ர்கள் என்னில் பத்திரமாக பயணம் செய்ய வேண்டும்”என்ற தன் கனவை முடித்ததும்


மூன்றாவது மரம் சொன்னது “நான் நீண்டு உயர்ந்து வளர்ந்து மிக பெரிய மரமாவேன், அப்போது என்னை காணும் மக்கள் எல்லாம் வானையும், கடவுளையும் பார்த்து, நான் அவர்களுக்கு எவ்வளவு நெருங்கி விட்டேன் என்றும், எக்காலமும் நானே உலகின் சிறந்தமரம் என்றும் கூறவேன்டும்” என்று கூறியது…

பல வருடங்களாக தன் கனவு மேல் கொண்ட தவங்களுக்கு பிறகு, ஒரு நாள் சில மரவெட்டிகள் அந்த காட்டிற்க்கு வந்தனர். அவர்களில் ஒருவன் முதல் மரத்திடம் வந்து, ” நான் இதை வெட்டி ஒரு தச்சனிடம் விலைக்கு கொடுப்பேன்” என்று கூறினான், இதை கேட்ட அந்த முதல் மரம் தான் மாணிக்க பேழையாக போவதாக நினைத்து மகிழ்ந்தது.

இரண்டாவது மரத்திடம் வந்த மரவெட்டி அதன் உறுதியை பார்த்து, “நான் இதை வெட்டி துறைமுகத்தில் விற்பேன்” என்றான். இதை கேட்ட மரம் தான் ஒரு மிக பெரிய போர் கப்பலாக போவதாக எண்ணி மகிழ்ந்தது.

மற்றொரு மரவெட்டி மூன்றாவது மரத்திடம் வந்ததும் அது பயந்தது, அது வெட்டபட்டால் அதன் கனவுகள் அழித்து போகும் என நினைத்தது. அவன் அம்மரத்தை பார்த்து “நான் இம்மரத்திடம் பெரியதாக எதுவும் எதிர் பார்க்கவில்லை, இருப்பினும் இதை நான் வெட்டி கொண்டு செல்லுவேன்” என்றான்.

முதல் மரம் தச்சனிடம் வந்தபோது, அவன் அதை ஒரு வைக்கோல் பெட்டியாக செய்தான், மாணிக்க பேழையாக வேண்டிய தன் கனவு ஒரு வைக்கோல் பெட்டியாக ஆகிபோனதை நினைத்து அது வருந்தியது.

போர் கப்பல் கனவுடன் துறைமுகம் நுழைந்த இரண்டாவது மரம் ஒரு மீன்பிடி படகாக செய்யபட்டது.

மூன்றாவது மரம் பெரிய பாளங்களாக வெட்டி ஒரு இருட்டறையில் இடப்பட்டது.

காலம், அவர்களது கனவுகளை மறக்கவைத்தது.

ஒரு கொடுங்குளிர் இரவில், ஒரு தம்பதியர் ஒரு மாட்டு தொழுவத்திற்க்கு வந்தனர், பெண்மணி ஒரு அழகான குழந்தையை பெற்றெடுத்தார்.. அவர்கள் அந்த குழந்தையை முதல் மரத்தில் இருந்த செய்த வைக்கோல் பெட்டியில் வைத்தனர், அந்த மரம் அப்போது தான் உணர்ந்தது தான் உலகின் விலைமதிக்க முடியாத பொக்கிஷத்தை தாங்கி பாதுகாத்திருப்பதை.

சில வருடஙளுக்கு பிறகு சிலர் இரண்டாவது மரத்தில் இருந்து செய்யப்பட்ட மீன்பிடி படகில் எறினர். படகு நடு கடலில் செல்லுகையில், பெரும் புயல் வீச துவங்கியது. அந்த மரம் படகில் உள்ளவர்களை பத்திரமாக கரை சேர்ப்பதை பற்றி கவலை கொண்ட பொழுது , படகில் இருந்தவர்கள் அங்கு அமைதியாக தூங்கிக் கொண்டிருந்த ஒருவரை எழுப்பினர்., அவர் எழுந்து “அமைதி” என்றதும் புயல் அடங்கியது.

அந்த நேரத்தில் இரண்டாவது மரம் தான், அரசர்களின் அரசரை சுமந்ததை குறித்து மகிழ்ந்தது.

கடைசியாக, அந்த மூன்றாவது மரம் இருட்டறையில் இருந்த எடுத்து செல்லபட்டது. அது ஒரு மாமனிதரால் சுமந்து செல்லப்பட்டது, மக்கள் அதை சுமந்தவரை நிந்தித்தனர்.

அவரை அம்மரத்தில் ஆணியால் அறைந்து மலை உச்சியில் நட்டு வைத்தனர். ஞாயிறு வந்தபோது வாண்ணளவு உயர்ந்து கடவுளின் அருகில் மிக நெருக்கமாக இருந்ததை நினைத்து மகிழ்ந்தது, எனென்றால் அந்த மரத்தை சுமந்து, பின்னர்அதில் அறையப்பட்டவர் தான் தேவமைந்தன் இயேசு கிறிஸ்து……

இது கதையல்ல நிஜம் (ஓரு டம்ளர் பால் )

பின் தங்கிய கிராமமொன்றில் மிகவும் ஏழ்மையான நிலையில் வாழ்ந்து வந்த ஒரு சிறுவன் பாடசாலை முடிந்து வீடு வந்ததும் மாலை நேரங்களில் தன்னுடைய தாயார் செய்து கொடுக்கின்ற பலகாரங்களை வீடுவீடாகச் சென்று விற்பது வழக்கம். அதில் கிடைக்கும் சிறிய வரமானத்தைக் கொண்டு அவனால் தன் கல்வியை தொடரக் கூடியதாக இருந்தது.

இப்படியாக தனது வழக்கத்தின்படியே ஒருநான் வீடுவீடாகச் சென்று பலகாரம் விற்கப் புறப்பட்டான். எனினும் அன்று நெடுநேரமாகியும் அவனால் ஒன்றையும் விற்க முடியவில்லை. மிகவும் களைப்படைந்த அதே வேளை தாகத்தால் அவனது நாவறண்டு பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்தது. ஆகவே அவன் பக்கத்தில் இருந்த ஒரு வீட்டிற்குச் சென்று தன்னுடைய தாகத்திற்கு தண்ணீர் கேட்க நினைத்தவனாய் கதவைத் தட்ட ஆரம்பித்தான்.

கதவைத் திறந்துகொண்டு வீட்டின் உள்ளேயிருந்து வந்த ஒரு இளம்பெண் அவனை நோக்கி: “ தம்பி உனக்கு என்ன வேண்டும்” எனக் கேட்டாள். உடனே அவன் “எனக்கு தாகமாய் இருக்கிறது. குடிப்பதற்கு தண்ணீர் தருவீர்களா” என மெல்லிய குரலில் கெஞ்சிக் கேட்டான்.

அவன் மிகவும் களைத்துப் போயிருப்பதைக் கண்ட அந்த இளம்பெண் உள்ளே சென்று ஒரு டம்ளர் நிறைய குடிப்பதற்கு பால் எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தாள். பசியோடு இருந்தவன். அந்தப் பால் டம்ளரை கையில் ஏந்தியவனாக: “ இதற்கு நான் எவ்வளவு தரவேண்டும்” எனக் கேட்டான்.

அவனது இக் கேள்வியினால் மெய் சிலிர்த்த அவள் “ சிறுவனே நீ எனக்கு ஒன்றும் தர வேண்டியதில்லை” என பாசத்தோடு கூறிளாள். அவனோ “ இல்லை யாரிடமும் இலவசமாக ஒன்றும் வாங்கக் கூடாது என என்னுடைய தாயார் எனக்கு கற்பித்திருக்கின்றார்கள். ஏனக்கூற அவளோ “ பரவாயில்லை இதை என்னுடைய அன்பளிப்பாக ஏற்றுக்கொள்” எனக் கூறினாள். அவனும் அதைப் புன்னகையுடன் ஏற்றக்கொண்டவனாக பாலைப்பருக ஆரம்பித்தான். அவன் பாலைப் பருகி முடித்ததும் “நன்றி!” என்ற வார்ததைகயைத் தன் உள்ளத்தின் ஆழத்திலிருந்து அவளுக்கு கூறிவிட்டு புறப்பட்டான்.

அன்று அந்த சிறுவனின் பசிக்கு பால் கொடுத்தது உதவிய அந்தப் பெண்ணுக்கு மறுபடியும் அந்தச் சிறுவனைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. காலங்கள் உருண்டோடிட அந்தப் பெண் தன் வீட்டில் தனியாகவே வாழ்ந்து வந்தாள். வருடங்கள் பல கழிந்தது. இப்போது முதிர்வயதில் அவள் மிகவும் பலவினமானக இருந்தாள்.

ஒரு நாள் திடீரென மிகவும் சுகவீனமுற்ற அவள் கிராம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாள். அவளுக்கு என்ன வியாதி என்பதை டாக்டர்களால் கண்டுபிடிக்க முடியாதிருந்தது. அதனால் அவள் நகரிலிருந்த ஒரு பெரிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாள். அங்கு அவளது வியாதியை கண்டறிய டாக்டர் ஹவார்ட் என்பவரின் உதவி நாடப்பட்டது.

டாக்டர் ஹவார்ட தன்னிடம் அனுப்பப்பட்ட அந்த வயதான நோயாளியின் பெயரையும் அவளது ஊரையும் கேட்டபோது அவரது கண்கள் ஆச்சரியத்தினால் விரிய ஆரம்பித்தது. அவரது மனத்திரையில் கடந்த கால் நினைவுகள் ஒரு நிழற்படமாக ஓட ஆரம்பித்தது. ஆம் அவள் வேறு யாருமல்ல தான் ஒரு சிறுவனாய் இருந்த போது தன் பசிக்க பால் கொடுத்த தயாள சிந்தையுள்ள பெண்மணியே அவள் என்பதை அவர் அறிந்து கொண்டார். அந்தக் கணத்தில் தானே அவர் தான் யார் என்பதைக் காடிக்கொள்ள விரும்பாதவராக அவளது வியாதி என்ன என்பதை குறித்து ஆராய்ந்து மிகுந்த கரிசனையுடன் நேரமெடுத்து அவளுக்கு அவர் தகுந்த வைத்தியம் செய்ய ஆரம்பித்தார். அதுமட்டுமன்றி தனக்கு ஓய்வு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர் அவளை வந்து பாரத்துவிட்டுச் செல்வார். இப்படி அந்த டாக்டரின் சிகிச்சையினாலும் கடவுளின் கிருபையினாலும் சில மாதங்களிலேயே அவள் பூரண சுகமடைந்து தன் வீடு திரும்ப ஆயத்தமானாள்.அவள் வீடு திரும்புமுன் வைத்தியசாலைக்கு அவள் செலுத்தவேண்டிய பில் அவளுக்குக் கொடுக்கப்பட்டது. தான் தன் இறுதி நாட்களுக்காக சேர்தது வைத்திருந்த பணம் அதற்குப் போதுமானதாக இருக்குமோ அல்லது வசித்து வந்த தன்னுடைய சொந்த வீட்டையும் விற்க வேண்டிய நிலை ஏற்படுமோ என எண்ணியவளாக நடுக்கத்துடன் அதை வாங்கி அவள் பிரிக்க ஆரம்பித்தாள். அவளது கைகளில் கொடுக்கப்பட்ட அந்தப் பற்றுச்சுpட்டின் கடைசி வரிகளில் எழுதப்பட்டிருந்த வார்ததைகள் அவளது கவனத்தை ஈர்த்தது.

“ ஒரு டம்ளர் பாலுக்கு நன்றியாக முழுத்தொகையும் செலுத்தப்பட்டாயிற்று இப்படிக்கு அன்புடன் டாக்டர் ஹவார்ட்”

அவளது கண்களில் கண்ணீர் வழிந்தோடிட அவள் ஆண்டவரே மனிதர்களுக்கு காட்டிடும் தயவினால் நீர் உமது அளவற்ற அன்பை எமக்கு வெளிக்காட்டுவதற்காக நன்றி என தன் உள்ளத்த்தால் ஆண்டவருக்கு நன்றியைச் சொன்னாள்.“ ஒரு டம்ளர் பாலுக்கு நன்றியாக முழுத்தொகையும் செலுத்தப்பட்டாயிற்று இப்படிக்கு அன்புடன் டாக்டர் ஹவார்ட்”

வேதாகமத்திலே இப்படியாக ஒரு வசனம் காணப்படுகிறது.” உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள் மேல் போடு அநேக காலத்தின் பின்பு அதின் பலனைக்காண்பாய்” (பிரசங்கி 11:1). ஆம் நாம் பிரதிபலனை எதிர்பாராது மற்றவர்களுக்காகச் செய்யும் நன்மையானது நாம் சற்றும் எதிர்பாராத நேரத்தில் நமக்கோ அல்லது நமது அன்புக்குரியவரகளுக்கோ திரும்பவும் கிடைக்கும். ஒரு வேளை அது திரும்பக் கிடைக்காது போனாலும் கூட இந்த வேதனை நிறைந்த உலகத்திற்கு நாம் ஒரு நன்மை செய்யக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சி அடைவோமாக. இதற்காகவே நாம் சிருஸ்டிக்கப்பட்டிருக்கின்றோம்.

‘ஏனெனில் நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஸ்டிக்கப்பட்டு தேவனுடைய செய்கையாயிருக்கின்றோம். அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம் பண்ணியிருக்கின்றார்.(எபெசியர் 2:10)

இயேசு என் பக்கம்


‘தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?(ரோமர் 8:31)

நீ மாத்திரம் தனியே உல்லாசப் பிரயாணம் போகமுடியாது” என்று தனது தங்கையிடம் கூறினான் மோகன். ‘ நீ மிகவும் சிறு பெண் பேசாமல் வீட்டிலேயே இரு’ என்று ஏளனமும் செய்தான். அதனால் அவனுடைய சிறு தங்கை அழ ஆரம்பித்தாள். தன்னுடைய தந்தையாரிடம் ஓடி அப்பா அண்ணன் சொல்கிறான் உல்லாசப் பிரயாணம் போக முடீயாதாம். நான் சிறு பெண்ணாம் என்று அழுதாள்.

அதற்கு அப்பா நீ அண்ணாவிடம் சொல் உல்லாசப்பிரயாணம் போவதா இல்லையா என்பதை அவன் தீர்மானிக் வேண்டியதில்லை. நான் தான் தீர்மானிக்க வேண்டும். என்று நீ உல்லாசப் பிரயாணம் போக வேண்டுமென்று நான் விரும்புகிறேன் என்று கூறினார்.இதைக் கேட்டவுடன் சிறுமிக்கு வந்த மகிழ்ச்சிக்க அளவேயில்லை. மோகனைப் பற்றி அவள் கவலைப்படவே இல்லை.

ஏனென்றால் அப்பா அவள் பக்கம் என்று அவளுக்கு நன்றாக புரிந்துவிட்டது. அண்ணா அப்பா சொல்லிவிட்டார் நான் போகலாமென்று நீ இனி ஒன்றும் செய்ய முடியாது என்று மோகனிடம் தைரியமாகக் கூறினாள்.

இதே போல்தான் பவுல் என்ற தேவனுடைய மனுதர் தேவனைப்பற்றி கூறும்போது ‘தேவன் என்னோடு கூட இருக்கும் போது நான் ஏன் பயப்படவேண்டும். என்று கேட்டார். சில வேளையில் மனிதர்கள் எம்மை விரோதிக்கலாம். அவர்கள் எம்மைப் பகைத்து எமக்கு தீங்கு செய்யவும் முனையலாம். ஆனால் எல்லாவற்றையும் விட சாத்தானோ நாம் இயேசு சுவாமிக்குள் சந்தோசமாக இருப்பதை விரும்பாதவனாகவே இருக்கின்றான்.ஆனால் இயேசு சுவாமி எம்மை நேசிக்கிறார். எமக்காக மரித்தார் எமக்காக இயேசு சுவாமி தம்முடைய உயிரையே பலியாகக் கொடுத்திருக்கும் போது மற்றக் காரியங்களை நிச்சயம் கொடாமலிருப்பாரா?இயேசு சுவாமி தன்னுடைய உயிரையே எமக்காக கொடுத்ததால் அவர் எவ்வளவாக நம்மை நேசிக்கிறார். ஆம் அவர் எம் பக்கம் இருக்கிறார். ஆகவே நம்மை யார் தோற்கடிக்க முடியும்? ஒருவராலும் முடியாது.ஆம் அன்பான நண்பர்களே இயேசு நம்மோடு இருக்கவே விரும்புகிறார். ஆனால் நாம் அவருக்கு இடங்கொடுத்தால் தானே அவர் நம் பக்கம் இருக்க முடியும். நீங்கள் உங்கள் உள்ளத்தை அவருக்கு கொடுத்துள்ளீர்களா? நீங்கள் அப்படி கொடுத்திருந்தால் அவர் உங்கள் பக்கம் இருப்பார். உங்களை விரோதிப்பவர்களை அல்லது சாத்தானைக் கண்டு நீங்கள் பயப்படாதீர்கள்.!உங்களுக்காக தமது உயிரையே கொடுத்த அவர் நிச்சயம் உங்களுக்காய் எதையும் செய்ய தயாராகவே இருப்பார். இன்றே அவரை உங்களுடையவராய் ஆக்கிக் கொள்ளுங்கள். இயேசு சுவாமி உங்கள் பாதுகாப்பாய் இருக்க இன்றே ஜெபியுங்கள்.

மூன்று பதில்கள்



அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான். நான் அவனுக்கு மறு உத்தரவு அருளிச் செய்வேன் ( சங்கிதம் 91 : 15 )


ஓவ்வொரு நாளும் இரவு ஜெபத்தின்போது ராஜா வேண்டிக்கொண்ட ஒரு காரியம் ஆண்டவரே இம்முறை பிறந்த நாள் அன்று எனக்கு எப்படியாவது ஒரு சைக்கிள் பரிசாக கிடைக்கவேண்டும் என்பதுதான்.

ஆனால் ராஜாவின் பெற்றோரோ எழைகள் எனினும் அவனது அப்பா அம்முறை அவனுக்கு ஒரு சைக்கிள் வாங்கிக்கொடுக்க விரும்பினார். ஆனாலும் அவனது பிறந்த நாள் நெருங்கியபோது அவரிடத்தில் போதியளவு பணம் இருக்கவில்லை.

எனவே, ராஜா இயேசு சுவாமியை நம்ப மாட்டான் என கவலையுற்றாhர். இவ்வளவு நாட்க்களாக அவன் கடுமையாக ஜெபித்தான். ஆகவே சைக்கிள் இல்லாவிட்டால் ராஜா இனி இயேசுவை நேசிக்கமாட்டான் என நினைத்தார்.

பிறந்த நாள் அன்று அப்பா ராஜாவைப்பார்த்து ” என்னால் உனக்கு சைக்கிள் வாங்கித்தர முடியவில்லை, என்னிடம் போதியளவு பணம் இருக்கவில்லை. அதற்காக ஆண்டவர் மீது கோபப்படாதே” என்றார். துக்கத்தோடு ராஜா என்ன பதில் சொல்லியிருப்பான் தெரியுமா?

‘அப்பா ஆண்டவர் என் ஜெபத்திற்கு பதில் கொடுத்து விட்டார்.’ அப்பாவிற்கு ஆச்சரியமாய் இருந்தது ‘அப்படியா’ என்றார்.

‘ஆம் அப்பா அதாவது எப்போது எனக்கு சைக்கிள் அவசியப்படுகிறதோ? அப்பொழுது அதை அவர் தந்தருள்வார். என நினைக்கிறேன்.’ ஏன்றான். இதைக்கேட்டதும். ராஜாவின் அப்பாவிற்க்கு மகிழ்ச்சியாயிருந்தது. அவன் தேவனை அருமையாய் புரிந்து கொண்டதையிட்டு அவர் மகிழ்ச்சியடைந்நதார்.

ஆம் அன்று ராஜா அருமையான பாடத்தை கற்றுக்கொண்டான்.

ஆண்டவர் எப்பொழுதும் எம் ஜெபத்திற்க்கு ஆம் என்று மாத்திரம் சொல்லிக்கொண்டிருக்கமாட்டார். நாம் வேண்டிக்கொள்ளும் சில காரியங்கள் சில வேளை நமக்கு கூடாததாக இருக்கலாம். அவர் எல்லாவற்றையும் முன்னதாக அறிந்திருப்பதனால், நமக்கு தீங்கு விளைவிக்கும் காரியங்களை அவர் தரமாட்டார். அவர் எம்மை நேசிக்கிறார்.

இயேசு சுவாமி எமது ஜெபத்திற்க்கு முன்று விதமாக பதில் அளிப்பார். ஓன்று ஆம் என்று பதில் அளிப்பார். அடுத்து இல்லை என்றும் பதில் அளிப்பார். மூன்றாவதாக இப்போது இல்லை காத்திரு என்றும் பதில் அளிப்பார்.ராஜாவைப்போல ‘இல்லை’ அல்லது காத்திரு என்று பரில் கூறும் போதுங்கூட நாம் அவர் எம்மை நேசிக்கிறார் என்று நம்பவேண்டும்.

இயேசு சுவாமி அவர்களின் பிள்ளைகளின் ஜெபத்தை எப்பொழுதும் கேட்;கிறார்.

அப்படி ஜெபிக்கும்போது, நான் உத்தரவு கொடுப்பேன். அல்லது பதில் கொடுப்பேன் என்று வேதத்தில் அவர் உறுதி மொழியும் கூறியிருக்கிறார். நாம் கேட்கிற எல்லா காரியங்களையும் கேட்ட உடனேயே அவர் கொடுத்து விடமாட்டார். அது எமக்கு அவசியமாகதாக இருந்தால் மட்டுமே அவசியமான நேரத்தில் கொடுப்பார்.

ஆம் நண்பர்களே! இயேசு சுவாமி எங்களுடைய ஜெபத்திற்க்கு பதில் கொடுக்கிறவராக இருக்கிறார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

நான் ஒரு நோயாளி!

பரம வைத்தியராம் என் ஆண்டவரிடம் என்னை பரிசோதிக்கும்படி ஒரு மருத்துவப் பரிசோதனைக்காகச் சென்றேன். பரிசோதனை பெறுபேறுகளிலிருந்து நான் நோய் வாய்ப்பட்டிருப்பது அறிந்துகொண்டேன்.
  • அவர் என் இரத்த அழுத்தத்தை சோதித்த போதுஅதில் அன்பு மிகவும் குறைந்திருப்பது தெரியவந்தது.
  • அவர் என் உடல் வெப்பநிலையை அளந்த போதுஅதில் என் கவலை 40  டிகிரியாக உயர்ந்திருந்தது.
  • அவர் என் எலும்புகளை பரிசோதித்த போதுஅவைகள் பொறாமையினாலும் கசப்பினாலும் உலர்ந்துபோயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
  • அவர் என் கண்களை சோசித்தபோது.அவைகள் கடவுளின் வார்த்தையை கேட்கமுடியாதபடிஎன் செவிகள் மந்தமாயிருப்பது புலனாயிற்று.

இந்த மருத்துவ சோதனைக்காக அவர் என்னிடம் பணம் எதும் வாங்க வில்லை. இலவசமாய் சேவை செய்த என் ஆண்டவரின் அளவற்ற கருணையை நான் என்னவென்பேன்?

என் நோய் சீக்கிரமே குணமடையும்படி அவர் தமது சத்திய வார்த்தையின் படியே நடக்கும் படியாக என்னைக் கேட்டுக் கொண்டார்.

அதன் படி தினமும் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் நிறைய நன்றியுணர்வை அருந்தி, வேலைக்கு போகும் முன் ஒரு கரண்டி சமாதானத்தை அருந்தி, வேலை நேரத்தில் மணிக்கு ஒரு தடவை பொறுமை என்னும் மாத்திரையை சகோதரத்துவமும் தாழ்மையும் கலந்த நீருடன் பருகி, மாலையில் வீடு திரும்பும்போது ஒரு டம்ளர் நிறைய அன்பை பருகி, இரவு படுக்கைக்கு போகு முன் குற்றமற்ற உள்ளமெனும் மாத்திரையை ஜெபத்துடன் உட்கொண்டால் சீக்கிரமே என் பலவீனம் நீங்கி சகமடைவாய் என்றார். புரம வைத்தியரான இயேசு..
…சரி நீங்களும் அந்த பரம வைத்தியரை அணுகி பார்க்கலாமே!

உன்னைத்தான்…


.தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்க்கு வரவளைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததியாயியும்….. ( 1 பேதுரு 2 : 9 )

நாம் மகிழ்ச்சியாயிருப்பதை இந்த உலகமொ உலகத்தின் அதிபதியோ விரும்புவதில்லை. மகிழ்ச்சியுற வேண்டியவற்றை நாம் சிந்திக்காதபடி பாரங்களை ஏற்றி நம்மை துக்கத்தில் ஆழ்த்துவதுதான் இவ்வுலகத்தின் தந்திரம். நாமும் அநியாயமாக அதற்க்குள் மாண்டுபோகிறோம். வாழ்நாட்க்களை வீணடிக்கிறோம்.

ஒரு பிரசித்திபெற்ற மேடையில் தாலந்துகளுக்கான போட்டி நடந்தது. ஆடம்பரமான பல போட்டியாளர்கள் மேடையேறி மக்கை ஆச்சரியத்தில் மூழ்கடித்தனர். அந்த வரிசையிலே ஒரு பெண் எறினாள். மண்டபத்திலே “ஊஊஊ” என்ற ஒரு சத்தம். இவளால் என்ன செய்யமுடியும் என்ற பரிகாசம்தான். ஆனால்அவள் ஒலிபெருக்கியை கையில் எடுத்து உதட்டருகே கொண்டு சென்றுபோது அந்த பிரமாண்டமான மண்டபமே அமைதியானது. இப்படி ஒரு குரலா? எல்லோரும் இருக்கையை விட்டு எழுந்து விட்டனர். கரகோஷம் வானைப்பிளந்தது. மத்தியஸ்தர்களும் அசைந்துவிட்டனர். ²இவளால் முடியாதே² என்று நினைக்த்தக்க இந்த எளிமையான பெண்ணின் வாயிலிருந்து இப்படியொரு அற்புத பாடலா? 2009 ம் பிரித்தானியாவில் நடந்த உண்மை சம்பவம் இது.

நீங்களும் நானும்கூட மிக எளியவர்கள் தான். உலகம் எங்களை கண்டிராது. குடும்பத்திலும் நம்மை கணக்கெடுக்காதிருக்கலாம். இவையெல்லாம் கிறிஸ்துவின் அழகு நம்மில் ஊற்றெடுத்துப் பாயும் வரைக்கும்தான் அந்த அழகு மாத்திரம் நம்மில் தெரியுமானால் இந்த உலகம் தன் முக்கில் விரல் வைக்கும். அப்படித்தான் தேவன் நம்மை திட்டமிட்டிருக்கிறார். நாம் வாழ்வு என்னும் மேடையில் நிற்கிறோம். நமது குடும்பத்தார் நண்பர்கள் சபை மக்கள் நம்மை அற்பமாய் நினைக்கிறவர்கள். யாவருக்கும் முன்னிலையில் நாம் நிற்கிறோம். இவனா! இவளா! இவனைப்பற்றி எனக்குத் தெரியாதா? இவளின் கடந்த கால நாற்றம் தெரியாதா? இப்படியாக எத்தனையெல்லாம் பேசுவார்கள். ஆனால் கிறிஸ்துவின் அன்பும் கிருபையும் நமது வாழ்விலிருந்து புறப்பட்டு பாயும் போது நிச்சயமாய் இந்த உலகமே எழுந்து நிற்கும். பேதுரு எழுதியவார்த்தைகள் எவ்வளவு மகத்தானவை. நம்மில் வெளிப்படுகின்ற கிறிஸ்துவின் அழகு ஜோடிக்கப்பட்டதல்ல. அது வாழ்வின் அனுபவம் இயேசு கிருபையாய் என்னை துக்கிவிட்ட அனுபவம் ஏராளமான அறிவாளிகள் மத்தியில் தமது புண்ணியங்களை அறிவிக்க தெரிந்தெடுத்தாரே அந்த கிருபையின் அனுபவம் எளியவர்களாகிய நம்மைத் தமது சன்னிதானத்தில் ராஜரீக ஆசாரியக் கூட்டமாக்கினாரே அந்த அனுபவம் இந்த கிருபை ஒன்றே போதுமே வாழ் நாள் முழுவதும் நாம் மகிழ்ச்சியாயிருக்க!



“பிதாவே உமது மகத்துவங்களை அறிவிக்க நீர் என்னையா தெரிந்தெடுத்தீர். இதை நினையாமற் போனேன். என்னை ஆட்கொள்ளும் ஜயா ஆமென்.”

உள்ளபடியே ஏற்றுக்கொள்வார்.

நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால்…. நம்மை சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.  ( 1யோவான் 1 : 9 ) 

ஒரு மண்டபத்திலே ஒரு வேலையை முடிப்பதற்காகக் காத்திருந்தனர். அங்கே அழகான ஒரு குழந்தை அழகிய வர்ணமுள்ள சட்டை அணிந்தவளாக அங்கிருக்கும் ஒவ்வொருவரிடமும் சென்று விளையாடிக்கொண்டிருந்தாள். ஆனால் ஒரு குறிப்பிட்ட பெண் மாத்திரம், அக் குழந்தை அவளிடம் செல்லும் போது அக்குழந்தையை கவனிக்காமல் இருந்தாள். அப்பொழுது அங்கிருந்த அனைவரும் ஒரு அழகான குழந்தையோடு இவளுக்கு விளையாடக்கூடத் தெரியவில்லை. மிகவும் கல்நெஞ்சக்காரிபோலும் என்று பேசிக்கொண்டு தொடர்ந்து அக் குழந்தையோடு அனைரும் விளையாடினர். சிறிது நேரத்தில் அக்குழந்தையில் இருந்து ஏதோ துர்நாற்றம் வருவதை அனைவரும் உணர்ந்து கொண்டதால், அக்குழந்தையை அருவருப்போடு விரட்டத் தொடங்கினர். குழந்தையோ இவ்வளவு நேரமும் தன்னோடு சந்தோஷமாக விளையாடிக்கொண்டிருந்த ஒவ்வொருவரிடமும் மாறி மாறிச் சென்றது. அனைவரும் கவனியாது விரட்டியடித்தனர். கடைசியில் அக்குழந்தை தன்னை முதலில் கவனியாதுவிட்ட பெண்ணிடம் அழுதுகொண்டு சென்றது. அப்பொழுது அப்பெண் குழந்தையை அன்போடு வாரி அணைத்துக்கொண்டாள். பிள்ளையை துக்கிச்சென்று அதன் நாற்றத்தை கழுவி அதற்குப் புது உடை அணிவித்து மீண்டும் அனைவரும் விரும்பும் அழகான குழந்தையாக்கினாள். அப்பொழுதுதான் தாம் கல்நெஞ்சக்காரி என்று யாரை நினைத்தார்களோ! அவளே அக்குழந்தையின் தாய் என்பதை அங்கிருந்தோர் உணர்ந்து கொண்டனர்.

எமது வெளித்தோற்றமாகிய அழகு, அந்தஸ்து, படிப்பு, பணம், வசதி, திறமைகள் போன்றவற்றைப் பார்த்து பிறர் எம்மீது மதிப்பும், கரிசனையும், விருப்பும் காட்டலாம். இவைகளெல்லாம் எம்மை விட்டு எடுபடும்போது சமுதாயத்தில் எம் மதிப்பு குறைந்து போகலாம். ஆனால் எம்மை உள்ளபடியே, நாம் இருக்கும் நிலையிலேயே, பாவமும் அக்கிரமமும் நிறைந்து நாறிப்போய் இருக்கும் உள்ளத்துடனேயே எம்மை எற்றுக்கொண்டு தன் தூய ரத்தத்தால் எம்மை கழுவி, எம்மை தம் பிள்ளையாக்கி நித்தியமான வாழ்வை எமக்கு தர ஆண்டவரால் மாத்திரமே முடியும். என்னையும் உங்களையும் உள்ளபடியே எற்றுக்கொடாரல்லவோ. இப்படிப்பட்ட உன்னதமான இரட்சிப்பை அவர் முலமாய் பெற்றுக்கொண்ட நாம் ஏனோதானோ என்று எந்தவிதமான அர்ப்பணமும் நோக்கமும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? அவருக்காக நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? எமது ஜீவிய காலமெல்லாம் அவருக்கே சேவை செய்ய எம்மை இன்றே அவர் பாதத்தில் ஒப்புக்கொடுப்போமா.

கிறிஸ்தவத்தில் இருக்கும் கிறிஸ்து


இந்தியாவின் பிரபல கிறிஸ்தவ பணியாளரான சாது சுந்தர்சிங் என்பார், இந்து மதக் கல்லூரியொன்றுக்கு விஜயம் செய்தபோது, உலக மதங்கள் பற்றிய பாடத்திற்கான விரிவுரையாளர் ஒருவர் அவரிடம், “உமது பழைய மதத்தில் இல்லாத எதனை நீர் கிறிஸ்தவத்தில் கண்டு கொண்டீர்? எனக் கேட்டபோது, “அங்கு கிறிஸ்து இருக்கிறார்“ என்று பதிலளித்தார்

சாது சுந்தர்சிங்கின் பதிலைக் கேட்ட அவ்விரிவுரையாளர், “அது எனக்குத் தெரியும். முன்னர் உம்மிடம் இல்லாத அல்லது நீர் அறியாதிருந்த எதனை கிறிஸ்தவத்தில் கண்டீர்? எனக் கேட்டார்.“கிறிஸ்வத்தில் நான் கண்டு கொண்டது இயேசுகிறிஸ்துவையே“ என சாதுசுந்தர் சிங் பதிலளித்தார்.
இயேசுகிறிஸ்து உலக மதங்கள் அனைத்திலும் இருக்கிறார் எனக் கருதும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வரும் இக்காலத்தில் சாது சுந்தர்சிங்கின் அனுபவரீதியான பதில், கிறிஸ்வத்தில் மட்டுமே இயேசுகிறிஸ்து இருக்கிறார் எனும் உண்மையை உறுதிப்படுத்துகிறது. 
“நான் கர்த்தர் இது என் நாமம். என் மகிமையை வேறொருவனுக்கும் என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்“. (ஏசா. 42:8) எனத் தெரிவித்துள்ள தேவன், விக்கிரக வழிபாடுகளுள்ள மதங்களில் எல்லாம் தன்னைப் பற்றி வெளிப்படுத்தியுள்ளார் எனக் கூறுவது உண்மைக்கு முரணாகவே இருக்கும் என்பதை நாம் ஒருபோதும் மறக்கலாகாது. 

ஜான் என்ற ஒரு சிறுவனின் அனுபவம்


ஜான் எவருக்கும் கட்டுப்படாத ஒரு சிறுவன் தன் தாய்க்கும் கிழ்ப்படியாமல் தன் விருப்பம் போல திரிந்தான். அவனது தாயோ அவளுடைய எல்லா பிள்ளைகளும் இரட்சிக்கப்படவேண்டும். இயேசுவின் பிள்ளைகள் ஆகவேண்டும் என்று இடைவிடாமல் ஜெபித்து வந்தாள். இது அந்தத் தாய் தன் விசுவாசம் தேவனுடைய வாக்குத்தத்ததை ஆதாரமாக கொண்டது என்று கூறினாள். தேவன் இரட்சிப்பு அவளுக்கு மட்டுமல்ல அவளுடைய வீட்டார் அனைவருக்கும் உண்டு என்று வாக்களித்தார். அந்த தாய் மரித்து சுமார் ஜந்து வருடங்களின் கடந்த பின் ஒரு ஜெபக்கூட்டத்தில் ஜான் எழுந்து நின்று என் அம்மாவின் இடைவிடாத ஜெபத்தின் பலனாக இன்று நான் இயேசுவின் பிள்ளையாக மாறிவிட்டேன். அவரது
இரட்சிப்பும் ஆசீர்வாதமும் எனக்கு கிடைத்திருக்கிறது.என்று சாட்சி கூறினான்.

நாமும் உலக மாந்தர் அனைவரும் இரட்சிக்கப்பட இடைவிடாது ஜெபிப்போம். நம் ஜெபத்தின் பயனாக ஒரு ஆத்துமாவேனும் ஆண்டவரை அறிந்து கொண்டால் இவ்வுலகில் நம்மை பிளைக்கச்செய்யும் இறைவனுக்கு நாம் செய்யும் நன்றிக்கடனாக இருக்கும். 

தீமைக்கு நன்மை செய்யப்பழகுவோம்


ஒரு தேவஊழியன் தான் தங்கியிருந்த கிராம மக்கள் மத்தியிலே நன் மதிப்பை பெற்றிருந்தார். யாவரும் அவரை நேசித்தனர். எந்தவொரு சிறு விடயமானாலும் அவரை நாடிப் போவார்கள். இதைக் கண்டு பொறாமை கொண்டனர் சிலர். ஊழியருக்கு விரோதமாக திட்டம் போட்டனர். அது ஊழியருக்கு தெரியவந்தது. தங்களது திட்டம் தெரிந்து அவர் ஓடி ஒளிந்திடுவார் என்று எண்ணினர். ஆனால் அந்த ஊழியரோ அவர்களேயே தேடிப் போனார். அவர்கள் எதிர்பார்த்திராததால் ஆச்சரியத்தில் வாயடைத்துப்போயினர். ஊழியர் அவர்களுடன் அமர்ந்து, தான் கொண்டுவந்த அன்புப் பரிசுகளையெல்லாம் அவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்து; உங்கள் நாலுபேருக்கும் ஒரு கம்பனியில் வேலைக்கு ஒழுங்கு செய்திருக்கிறேன். நாளைக்கே போய் வேலையில் சேர்ந்து கொள்ளுங்கள் என்றார். அவர்களோ வெட்கித் தலைகுனிந்தனர்.

அன்பான நண்பர்களே, நாம் தேவகரத்தில் இருக்கிறோம் என்ற உறுதி நமக்கு இருக்குமானால் நமக்கு எதிரே வருகிற எந்தத் தீங்குக்கும் நாம் பயப்படத்தேவையில்லை. மெய்யாகவே அவை நமக்குத் தீங்காகவே மாறாலாம். ஆனாலும் தேவன் நிர்ணயிக்காத எதுவும் நம்மை அணுகவே முடியாது. ஆகவே, கர்த்தருக்குள் வாழ்வது மெய்யானால் நாம் எதற்கும் பின்னடையத் தேவையில்லை.  நம்மை எதிர்கொள்ளும் தீமையை, நமது நல்நடத்தை பின்னடையச் செய்யவேண்டும். அங்கே ஆண்டவர் மகிமைப்படுவார்.                ஆமென்

இறைவன் நல்லவர்


கர்த்தரை துதியுங்கள் அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது, என்று பக்தன் சங்கிதம் 118 : 01 

இல் கூறுகின்றான். இதிலிருந்து ஒரு உண்மை புலப்படுகின்றது என்னவென்றால் அவர் நல்லவர் ஆனபடியினால் அவரை துதியுங்கள் என்று சொல்லப்படவில்லை அவரை துதியுங்கள் அவர் நல்லவர் என்று உறுதிபட கூறுகின்றார். எனனில் அவர் எப்பொழுதுமே எல்லோருக்கும் அவர் நல்லவர் சில வேளைகளில் நமக்கு எற்ப்படும் அசாதாரணமான சூழ்நிலைகள் இறைவன் நல்லவரா?.... என்று நம்மை சிந்திக்க துண்டும் அப்படியான வேளைகளிலும் இறைவன் நல்லவரே… என நான் உறுதிப்பட கூறுகின்றேன். அதற்கு சில காரணங்களை முன் வைக்கின்றேன்.

1. எல்லா உயிரினங்களையும் இறைவனே படைத்தார். ஆனால் மனிதனை விஷேசித்த விதமாக தமது சாயலாக படைத்தார் ஆகவே அவர் நல்லவர் அவனை சிந்திக்கும் படியாக சிறந்தவற்றை தெரிவு செய்யும் படியாக நிறைவான ஆற்றலை அவனுக்கு கொடுத்தார். ஆகவே அவர் நல்லவர். அதுமட்டுமல்லாது இப்பூமியில் உனக்கு எற்படும் அசாதாரணமான சூழ்நிலையின் போது நான் நல்லவரா? என சோதித்தறிவதை விட்டு விட்டு என்னை நோக்கி கூப்பிடு நான் உனக்கு மறு உத்தரவு கொடுப்பேன் எனக்கூறியிருக்கின்றாரே (அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான். நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன். ஆபத்தில் நானே அவனோடிருந்து அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன். சங் 91 : 15 )

ஆகவே அவர் நல்லவர். இவை எல்லாவற்றுக்கும் மேலாக தம் ஜீவனை நமக்காக தந்து பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து நம்மை மீட்டெடுத்து நம்மோடு நித்தமும் உறவாட காத்திருக்கிறாரே… ஆகவே அவர் மிகவும் மிகவும் நல்லவர்

ஆகவே நமக்கு நம்முடைய வாழ்வில் எப்பேற்பட்ட காரியமாக இருந்தாலும் இறைவன் நல்லவர் என்பதை நம் நினைவில் நிறுத்தி வாழக்கற்றுக்கொண்டால் அவர் நமக்கு எப்பொழுதும் மிகவும் மிகவும் நல்லவர்.
ஆகவே கர்த்தரை துதியுங்கள் அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது.

கடவுள் தந்த Anti Virus


கணணியில் காணப்படும் கிருமிகளை அழிப்பதற்க்கு பயன்படுத்தப்படும் கிருமி கொல்லிகள் Avg, Avira, Kaspersky போன்றன, கிருமிகொல்லிகள் இல்லாமல் அதே உத்வேகத்துடன் கணணியை இயக்குவது என்பது இயலாத காரியம் எனனில் எதோ ஒரு வகையில் கிருமிகள் கணணியை தாக்கி செயல் இழக்கச் செய்து விடும் ஆகவே, கணணிகளில் கிருமிகொல்லிகள் அத்தியாவசியமானவை எனவே கணணி செயல் இழக்காமல் தொடர்ந்து அதே உத்வேகத்துடன் இயங்க வேண்டுமானால் கிருமி கொல்லிகளை நமது கணணியில் செலுத்தி தினமும் அதை UPDATE செய்ய வேண்டும் அப்போழுது நமது கணணி செயல் இழக்காமல் தொடர்ந்து அதே வேகத்துடன் தொடர்ந்து இயங்கும் இதே போன்று நமது உடலில் காணப்படும் கடவுள் விரும்பாத அல்லது விருப்பபடாத கிருமிகளை ( களவு, பொய்சொல்லுதல், புறம்கூறுதல், கடவுளுடைய கற்ப்பனைகளுக்கு விரோதமாக நடத்தல் ) அழிப்பதற்க்கு தேவன் தந்த கிருமி கொல்லி பரிசுத்த வேதாகமம் 

இது எவ்வாறு கிருமிகளை அழிக்கிறது 

முதலாவது நாம் பரிசுத்த வேதாகமத்தை நம் உடலில் செலுத்த வேண்டும் எப்படி செலுத்துவது அதை முழுமையாக வாசிக்கிற போது படிப்படியாக நம் உடலில் உட்சென்று அது கிரிகை செய்ய ஆரம்பிக்கும் படிப்படியாக நம் உடலில் காணப்படும் வேண்டாத அல்லது கடவுள் விருப்பபடாத செயல் இருக்குமானால் உடனே சுட்டிக்காட்டும் நாம் உடனே அதனை Delete செய்ய வேண்டும் அல்லது இல்லாதொழிக்க வேண்டும் தினமும் இவ்வேலையை செய்வோமானால் நம் வாழ்வு மிகவும் சந்தோஷமாக இருக்கும் அதுமட்டுமல்லாமல் நீங்கள் படிப்படியாக கிருமிகளை உடல் அல்லது உள்ளத்திலிருந்து அழித்து முற்றிலுமாக கிருமிகளை அழித்து விடும் போது நீங்கள் சுத்தமானவர்களாக மாறுகின்றீர்கள். நான் சுத்தமாக மாறிவிட்டேன் என எண்ணிக்கொண்டு வேதாகமத்தை வாசிக்காமல் இருக்க கூடாது அதை தினமும் UPDATE செய்ய வேண்டும் நீங்கள் அவ்வாறு செய்யாவிடில் வேதாகமம் மறந்துவிடும் பிறகு உங்கள் உடலில் காணப்படும் கிருமிகளை அழிப்பதற்க்கு சக்தி இல்லாமல் போய்விடும் எனவே நீங்கள் இவ்வாறு தொடர்ந்து செய்யும் போது இறைவன் உங்களில் செயல்படுவார் உங்களில் செயலாற்றுவார் நீங்கள் வேண்டிக்கொள்வது நிறைவேறும் உங்களில் இறைவன் அசைவாடுவதை அனேகர் கண்டு கொள்வார்கள். எனவே, பயனுள்ள பரிசுத்த வேதாகமத்தை பயன்படுத்தாமல் இருக்காமல் பயன்படுத்தி மேற்க்கண்ட நன்மைகளை அனுபவியுங்கள். 

Friday 24 August 2012

வேதசித்தத்திற்கு முழுமையாய் அர்ப்பணித்தல்

கி.பி. 16ம் நூற்றாண்டில் கிறிஸ்தவத் திருச்சபையில் சீர்த்திருத்தம் ஏற்பட்ட காலத்தில், ஐரோப்பாவில் பரவலாக யுத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அக்காலத்தில் சீர்திருத்தவாதி ஜோன் கால்வின் (John Calvin 1509-1564) பாரீசிலிருந்து ஸ்டிராஸ்பேர்க் எனுமிடத்திற்குச் செல்கையில் ஜெனீவா நகரின் ஒருநாள் இரவு தங்கவேண்டியதாயிற்று. அன்றிரவு ஜோன் கால்வின் இன்னுமொரு சீர்த்திருத்தவாதியான வில்லியம் ஃபெரெல் என்பாரைச் சந்தித்தார்.

புரட்டஸ்தாந்து சபையில் குருவானவராக இருந்த வில்லியம் ஃபாரெல், தன்னுடன் தங்கியிருந்து தனது பணிகளுக்கு உதவிசெய்யும்படி ஜோன் கால்வினிடம் கேட்டுக் கொண்டார். ஆனால் ஜோன் கால்வின் அவ்வேண்டுகோளுக்குச் சம்மதிக்கவில்லை. இதனால் இவருக்குமிடையே பலத்த வாக்குவாதம் ஏற்பட்டது.

கடைசியில் வில்லியம் ஃபெரெல் சற்று கடுமையான குரலில் “நீ உன்னுடைய விருப்பப்படி செயல்படுகிறாய். சர்வ வல்லமையுள்ள தேவனுடைய நாமத்தில் நான் இன்று உனக்கு சொல்வது யாதெனில், இந்நகரில் நான் செய்யும் கர்த்தருடைய பணிக்கு நீ உதவி செய்யாவிட்டால் நீ தேவனுடைய வேலையை செய்யாமல் உன்னுடைய வேலையை செய்ய முற்படுவதனால் அவர் உன்னைச் சபித்துவிடுவார்.” என்று கூறினார்.

வில்லியம் ஃபெரெலின் இவ்வார்த்தைகள் ஜோன் கால்வினுடைய மனதைக் கடுமையாக தாக்கியமையால், அவர் தன் மரணம் வரை ஜெனீவா நகரில் தனது சீர்த்திருத்தப் பணிகளை மேற்கொண்டார். வில்லியம் ஃபெரெலின் வார்தைகளைப் பற்றி பிற்காலத்தில் ஜோன் கால்வின் எழுதும்போது “நான் என்னுடைய வழியில் செல்வதைத் தடுக்கப் பரலோகத்தின் தேவன் தன் கரத்தின் என்மீது வைத்தது போல உணர்ந்தேன். இதனால் நான் எனது பயணத்தை அத்துடன் நிறுத்திக் கொண்டேன்“ என்று குறிப்பிட்டுள்ளார்.

கிறிஸ்தவ வாழ்க்கை வேதசித்தத்திற்கு அடிபணிந்து வாழும் ஒரு வாழ்க்கையாகும். நமது சித்தத்தை முற்றிலுமாய் அகற்றிவிட்டு தேவசித்தத்திற்கு நம்மை முழுமையாய் அர்ப்பணிக்க வேண்டும். இதனால்தான் “ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்“.(எபே. 5:17) என்று வேதமும் நமக்கு அறிவுறுத்துகின்றது.

இழக்கக்கூடாத புத்தகம்

ஸ்டேன்லி என்பார் ஆபிரிக்கா கண்டத்தினூடாக ஒரு பிரயாணத்தை மேற்கொள்ளும்போது 180 இறாத்தல் நிறையுடைய 73 புத்தகங்களை தன்னுடன் எடுத்துச் சென்றார். 300 மைல்கள் பிரயாணம் செய்தபின்னர், தனது புத்தகப் பொதிகளைச் சுமந்து வந்தவர்களின் தேகநிலை காரணமாகப் புத்தகங்களை வீசிவிட வேண்டியிருந்தது.
ஸ்டேன்லியின் பிரயாணத்தின்போது அவரது புத்தகங்கள் ஒவ்வொன்றாகக் குறைந்து கொண்டே சென்றது. கடைசியில் ஒரே ஒரு புத்தகம் மட்டுமே எஞ்சியிருந்தது. அது அவருடைய வேதப்புத்தகம். அதை அவர் இழக்கத் தயாராக இருக்கவில்லை. அவர் தனது பிரயாணத்தின்போது மூன்று தடவைகள் அவ்வேதப் புத்தகத்தை முழுமையாக வாசித்துள்ளார்.
உண்மையில், நாம் வாழ்வில் எதை இழந்தாலும் நமது வேதப்புத்தகத்தை மட்டும் இழந்துவிடக்கூடாது. ஒரு தடவை லண்டனிலுள்ள பிரபலமான பத்திரிகை ஒன்றின் ஆசிரியர், முக்கியமான நூறு பேருக்கு வினாத்தாள் ஒன்றை அனுப்பினார். அதில் நீங்கள் மூன்று வருட காலம் சிறைத்தணடனை அனுபவிக்க வேண்டி வரும் என வைத்துக் கொள்ளுங்கள். அப்போது மூன்று புத்தகங்களை மட்டுமே உங்களுடன் எடுத்துச் செல்ல முடியும். நீங்கள் எந்தப் பத்தகங்களை எடுத்துச் செல்வீர்கள்? முக்கியத்துவத்தின் அடிப்படையில் அவற்றை நிரற்படுத்துக.“ என்று கேட்கப்பட்டிருந்தது.
பத்திரிகை ஆசிரியருக்குப் பதிலளித்தவர்களின் 98 பேர் முதலில் வேதாகமத்தின் பெயரையே எழுதியிருந்தனர். இவர்கள் ஒரு சிலர் மட்டுமே மார்க்க விடயங்களில் ஆர்வம் மிக்கவர்கள். பெரும்பாலானவர்கள் நாத்திகர்களும், கடவுளைப்பற்றிய சிந்தனையற்றவர்களுமாவார். அப்படியிருந்தும் அவர்கள், தாம் வேதப்புத்தகத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை உணர்ந்திருந்தனர். வேதப்புத்தகம் மட்டுமே நெருக்கடியான சூழ்நிலைகளில் உற்ற நண்பனாயிருக்கும். எனவே நாம் ஒருபோதும் வேதப்புத்தகத்தை மட்டும் இழந்துவி்டக்கூடாது.
கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது (சங். 19:7)
நன்றி – சில சம்பவங்களில் சில சத்தியங்கள்

கழுகு கூடு

கழுகு கூடு கட்டுவதை பார்த்திருக்கிறீர்களா? அதை நாம் பார்த்திருக்க நியாயமில்லை. அது கட்டும் முறை மிகவும் அருமையானது.
.
தாய் கழுகு தன் கூட்டைக் கட்ட ஆரம்பிக்கும்போது, நாம் நினைத்திராதபடிஇ முட்களையும், சிறுசிறு கற்களையும், கிளைகளையும் கொண்டு வந்து, கட்ட ஆரம்பிக்கும். அதைக் கட்டி முடித்தப்பின், அதன் மேல், மெதுவான மிருதுவான பஞ்சு, மெலிதான இறகுகள், தான் சாப்பிட்ட மிருகத்தின் தோல் இவற்றைக் கொண்டு அதன் மேல் பரப்பி, தன் முட்டைகளை சுகமாக இருக்கும்படி, அவற்றை ஒழுங்குப்படுத்தும். பின் முட்டையிட்டு, அதை அடைக்காத்து, அது குஞ்சுகளாக வந்து, அவற்றிற்கு இரையைக் கொண்டு வந்து ஊட்டி, அவற்றை வளர்க்கும். அவை வளர்ந்து, பறக்கும் நிலையை அடைந்தவுடன், தாய்க் கழுகு தன் கூட்டை கலைக்க ஆரம்பிக்கும். குஞ்சுகள் சொகுசாக இருந்த பஞ்சு மற்றும், மெலிதான இறகுகள் எல்லாவற்றையும் எடுத்துப் போட்டு விட்டு, முட்களையும், சிறுசிறு கூர்மையான கற்களையும் வெளியே வைத்துவிடும். அந்த மெத்தைப் போன்றவை போனவுடன், குஞ்சுகளுக்கு, கூடு குத்துகிற இடமாக, அவை தங்கியிருக்க முடியாத இடமாக மாறிப் போகும். அப்போது அவை தாமாக அந்தக் கூட்டைவிட்டு பறக்க ஆரம்பித்து, தன் இரையைத் தேட ஆரம்பிக்கும். பறக்கும் போது ஆரம்பம் மிகவும் கடினமாக இருக்கும் பறக்க எத்தணிக்கையில் குஞ்சுகள் கிழே விழுவதற்கு முற்ப்படும் அந்த வேளையில் தாய் கழுகு தன் செட்டைகளின் மேல் தன் குஞ்சுகளை சுமந்து செல்லும் ஆகவே தான் வேதாகமம் இப்படிக் கூறுகின்றது “ கழுகு தன் கூட்டை கலைத்து தன் குஞ்சுகளை செட்டைகளில் சுமந்து கொண்டு போவது போல தேவன் தாமே அவர்களை சுமந்தார். என்பதாக…
அன்பானவர்களே : நம்மில் கூட சிலர், அந்த கழுகின் குஞ்சுகளைப் போல தங்களுக்கு கிடைத்த கூட்டில் சுகமாய் இருக்கவே விரும்புகின்றனர். எழுந்து பறக்கக் கற்றுக்கொள்வோம்

தேவன் தாமே நம்மை சுமந்து சென்று பாதுகாத்தருள்வார்

ஆயுசு நாட்கள்


ஒரு வேடிக்கையான கதை உண்டு. தேவன் முதலாவது ஒரு காளையை உருவாக்கினார். உருவாக்கி, அதனிடம் ‘நீ நாளெல்லாம் ஒரு விவசாயின் கீழ் இருந்து சூரியனுக்கு கீழே நிலத்தை உழுது உழைக்க வேண்டும். உனக்கு வாழ்நாளாக 50 வருடங்கள் தருகிறேன்’ என்று கூறினார். அதற்கு காளை, ‘என்னது, இத்தனை கஷ்டமான வேலை செய்வதற்கு எனக்கு ஏன் ஐம்பது வருடங்கள்? வேண்டாம், வேண்டாம் எனக்கு வாழ்நாள் இருபது வருடங்கள் போதும், முப்பது வருடங்களை உமக்கே திருப்பி தருகிறேன்’ என்றது. தேவனும் அதற்கு ஒத்து கொண்டார்.

அடுத்ததாக அவர் ஒரு குரங்கை உண்டாக்கினார். ‘குரங்கு நீ மனிதர்களை சிரிக்க வைக்க வேண்டும். நீ செய்கிற சேட்டைகளை பார்த்து அவர்கள் சிரிக்க வேண்டும். உனக்கு 20 வருடங்களை வாழ்நாளாக தருகிறேன்’ என்றார். அதற்கு குரங்கு, ‘இந்த வேலைக்காக நான் இருபது வருடங்கள் உயிர் வாழ வேண்டுமா? பத்து வருடங்கள் போதும், பத்து வருடங்களை உமக்கே தருகிறேன்’ என்றது. தேவனும் ஒத்து கொண்டார்.

அடுத்ததாக அவர் ஒரு நாயை உண்டாக்கினார். உண்டாக்கி, ‘நீ நாள் முழுவதும் வீட்டு வாசற்படியில் உட்கார்ந்து, போகிற வருகிறவர்களை பார்த்து குரைத்து கொண்டிருக்க வேண்டும். உனக்கு வாழ்நாளாக இருபது வருடங்களை தருகிறேன்’ என்றார். அதற்கு நாய் ‘வாழ்நாளெல்லாம் நான் வீட்டு வாசற்படியில் இருந்து என் தொண்டை தண்ணீர் வற்றி கத்தி கொண்டு இருக்க வேண்டுமா? எனக்கு பத்து வருடங்கள் போதும், பத்து வருடங்ளை உமக்கே திருப்பி தருகிறேன்’ என்றது. தேவனும் ஒத்து கொண்டார்.

அடுத்ததாக மனிதனை உண்டாக்கினார். அவனிடம், ‘நீ ஒன்றும் செய்ய வேண்டாம், நேராநேரம் நன்கு சாப்பிட்டு, வாழ்க்கையை அனுபவி. உனக்கு 20 வருடங்களை தருகிறேன்’ என்றார். அதற்கு மனிதன், ‘ஒன்றும் செய்யாமல் ஜாலியாக இருப்பதற்கு இருபது வருடங்கள் மட்டும் தானா? காளை வேண்டாம் என்று கூறின முப்பது வருடங்கள், நாய் வேண்டாம் என்று கூறின 10 வருடங்கள், குரங்கு வேண்டாம் என்று கூறின பத்து வருடங்கள் எல்லாவற்றையும் சேர்த்து எனக்கு தாரும், நான் அவற்றை எடுத்து கொள்கிறேன. அப்போது மொத்தம் எழுபது வருடங்கள் ஆகுமல்லவா?’ என்றான். தேவனும் ஒத்து கொண்டார்.

அதனால் தான் நாம் முதல் 20 வருடங்கள் ஒன்றும் செய்யாமல், உறங்கி, தூங்கி, வாழ்க்கையை அனுபவிக்கிறோம். அடுத்த முப்பது வருடங்கள் காளையை போல கடுமையாக உழைக்கிறோம். அடுத்த பத்து வருடங்கள் நம் பேர குழந்தைகளிடம் குரங்கை போல முகத்தை காட்டி, அவர்களை சிரிக்க வைக்கிறோம். அடுத்த பத்து வருடங்கள் நாயை போல வீட்டிலிருந்து, காவல் காத்து கொண்டிருக்கிறோம்.

இந்த கதை வேடிக்கையாக இருந்தாலும், தேவன் நமக்கு கொடுத்த வருடங்கள் எழுபது, பெலத்தின் மிகுதியால் எண்பது வயது என்று வேதம் கூறுகிறது. இந்த எழுபது வருட வாழ்க்கையில் நாம் எல்லா பாடுகளையும் பட்டு, வாழ்ந்து முடித்தாலும், அதன் மேன்மை வருத்தமும் சஞ்சலமுமே; அது சீக்கிரமாய்க் கடந்து போகிறது, நாங்களும் பறந்துபோகிறோம் என்று தேவ தாசனாகிய மோசே கூறுகிறார். எழுபது வயதிற்கு மேல் வியாதியும், படுக்கையில் விழுந்து யாராவது திருப்பி விட்டால்தான் திரும்ப முடியும் என்ற நிலைமையும் இருந்தால் மிகவும் வருத்தமும் சஞ்சலமுமே! இதில் இன்னும் வருடங்கள் கூட்டப்பட்டால் அப்பப்பா எத்தனை வேதனை! யாரும் படுக்கையில் விழுந்து, மற்றவர்களுக்கு பாரமாக, நாமே நமக்கு பாராமாக இருந்து விடக்கூடாது! தேவன் அப்படிப்பட்ட வாழ்வை யாருக்கும் தராதிருப்பாராக!

தேவன் கிருபையாய் கொடுத்த இந்த வாழ்க்கையில், மனிதனுக்கு மட்டுமே அதை அவன் சித்தத்திற்கு செலவிடும் பாக்கியத்தை கொடுத்திருக்கிறார். மிருகங்களும் தங்கள் இஷ்டத்திற்கு வாழ்ந்தாலும் அவற்றை நாம் பொருட்டாக மதிப்பதில்லை. நாம் நம் இஷ்டத்திற்கு வாழ்ந்தாலும் அதை தேவன் கையில் ஒப்புக்கொடுத்து வாழ்ந்தோமானால் அதற்கு பின் வரும் வாழ்வில் நமக்கு பலன் உண்டு. தற்போது ஏனோதானோ என்று வாழ்ந்து, பின்வரும் வாழ்வில் பலனற்று போவதை விட இப்போதே நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அருமையான வாழ்வை அருமையான பாதுகாக்கும் தேவனிடத்தில் ஒப்புக்கொடுத்து, அவருடைய சித்தத்தின்படி வாழும்போது, அவர் நம் வாழ்வை பொறுப்பெடுத்து கொள்வார்.

இந்த உலகில் நாம் வாழும் வாழ்கை ஒருமுறைதான். அதை பலர் சிறக்க வாழவும் முடியும். பலர் வெறுக்க வாழவும் முடியும். நம்முடைய கைளில் கொடுக்கப்பட்டுள்ள இந்த வாழ்க்கையை தேவன் நாமம் மகிமைப்பட வாழ்வோம். அவருடைய நாமத்திற்கு சாட்சியாக வாழ்வோம். ஒவ்வொரு நாளும் தேவனுடைய பரிசு என்று அவருக்காக, அவரை துதித்து, அவருக்கென்று வாழ்வோம். மறுமையின் வாழ்வில் அவர் நமக்கு சிறந்த பலனை தருவார். ஆமென் அல்லேலூயா!

நாவடக்கம்

ஒரு சிறுவனுக்கு எப்போதும் அதிகக் கோபம் வரும் அவனுடைய தந்தை எத்தனையோ முறை அவனிடம் அது நல்லதல்ல என்றுச் சொல்லிப் பார்த்தார். அவனுக்கு கோபம் கட்டுப்படவே இல்லை. ஒரு நாள் அவன் தந்தை ஒரு பை நிறைய ஆணிகளையும் ஒரு சுத்தியையும் கொடுத்து, ஒவ்வொரு முறை கோபம் வரும்போதும், தங்கள் வீட்டிற்கு வெளியே வெள்ளைச் சாயம் போட்ட கட்டை வேலியின் மீது, ஒரு ஆணியை அடிக்கச்சொன்னார். அதன்படி, அவன் அடித்துபோது, முதல் நாளில் 37 ஆணிகளை அடித்தான்.

அடுத்த சில வாரங்களில், அவன் கோபம் குறையத் தொடங்கியது. ஏனெனில் ஒவ்வொரு முறை கோபம் வரும்போதும், வெளியேப் போய் ஆணிகளை அடிப்பதற்கு பதிலாக, கோபத்தை கட்டுபடுத்துவது அவனுக்கு எளியதாக கண்டது. அதை அவன் தகப்பன் கண்டபோது, அவனிடம் ஒவ்வொரு நாளும் போய் அவன் அடித்த ஆணிகளை பிடுங்கச் சொன்னார். அவன் அப்படியே எல்லாவற்றையும் பிடுங்கி முடித்தான்.

அன்று சாயங்காலம் அவன் தந்தை அவனது கையைப் பிடித்து அவனைக் கூட்டிக் கொண்டுப் போய், ‘மகனே, நீ செய்தக் காரியம் நல்லது, ஆனால்பார், நீ ஆணி அடித்த இடத்தை, இந்த அழகிய வேலி இனி அப்படி இருக்கப் போவது இல்லை. நீ ஆணியடித்ததினால் ஏற்பட்ட துளைகளைப் பார், அது துளைகளோடு காட்சியளிக்கிறது. அப்படித்தான் நீ அன்புகூருகிற ஒருவரிடம், நீ கோபத்தோடு பேசிய ஒவ்வொரு வார்த்தையும், இந்த துளைகளைப் போல், இருதயத்தில் மாறாத வடுகளை ஏற்படுத்துகிறது. நீ கோபம் போன பிறகு எத்தனை முறை மன்னிப்புக் கேட்டாலும் அந்த வடுக்கள் மாறாமல் அப்படியேதான் இருக்கும், ஆகவே கோபத்தைக் குறைத்து கோபமான வார்த்தைகளை பேசாதபடிக் காத்துக் கொள்’ என்று அவனுக்கு அறிவுரைக் கூறினார்.

நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது. அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம். – (யாக்கோபு 3:8-9) என்று வேதம் கூறுகிறது. ஆனால் இயேசுகிறிஸ்துவை சொந்தமாகக் கொண்ட ஜனம் நாவை அடக்கிக் கொள்ள பழக வேண்டும். தேவன் கொடுத்த நாவை மற்றவர்களை உற்சாகப்படுத்தவும், திடனற்றவர்களை தேற்றவும், தேவனை துதிக்கவும் பயன்படுத்த வேண்டும்.

இனிய நாவு எலும்பையும் நொறுக்கும் என்று நீதிமொழிகள் 25:15-ம் வசனத்தின் பின்பகுதியில் காணலாம். மற்றவர்களுக்கு பயன்படும் வார்த்தைகளையே பேசுவோம். மட்டுமல்ல, மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள் என்ற வேதம் நமக்கு கூறுகிறது. நாம் எதை பேசுகிறோமோ, அதன்படிதான் நடக்கும். நாம் மரணத்துக்கு ஏதுவான வார்த்தைகளை பேசினால், அதன் கனியைப் புசிப்போம். ஜீவனுக்கேதுவான் வார்த்தைகளை பேசினால் ஜீவனைப் பெறுவோம். உதாரணமாக, சங்கீதம் 23:6-ல் என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்’ என்று பார்க்கிறோம். அதைக் கூறுவதை விட்டுவிட்டு, என் தந்தைக்கு அல்லது தாய்க்கு இரத்த அழுத்த வியாதி இருக்கிறது, அல்லது சர்க்கரை வியாதி இருக்கிறது அதனால் என்னையும் அது தொடரும் என்று நம் வாயினால் அறிக்கை செய்வது மரணத்துக் ஏதுவான வார்த்தைகளைப பேசுவதுப் போலாகும். அதற்கு பதிலாக, டயபடீஸோ, அல்லது ஹைபர் டென்ஷனோ அல்ல, நன்மையும் கிருபையுமே என்னைத் தொடரும் என்று அறிக்கை செய்வது, ஜீவனுக்கேதுவான வார்த்தைகளைப் பேசுவதுப் போலாகும். இன்று வரை எங்கள் குடும்ப ஜெபத்தில், எங்கள் ஜெபங்கள் முடிந்தப் பிறகு நாங்கள் குடும்பமாக, 23ம் சங்கீதத்தை விசுவாச அறிக்கையாக சொல்லித்தான் முடிப்போம். ஆந்த அதிகாரத்தின் ஒவ்வொரு வார்த்தைகளும் அற்புதமானது. எங்கள் அறிக்கைக் கேட்டு தேவன் எங்களை ஆசீர்வதிககிறார். நீங்களும் அப்படி செய்யலாமே!

ஆகவே, நல்ல வார்த்தைகளைப் பேசுவோம், விசுவாச வார்த்தைகளைப் பேசுவோம், மற்றவர்களுக்கு ஆறுதலை தேறுதலைக் கொண்டு வருவோம். அதற்காகவே தேவன் நாவைப் படைத்தார் என்று விசுவாசிப்போம் கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக. ஆமென் அல்லேலூயா!

பாவத்தின் விளைவு

முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும்.
(நீதிமொழிகள் 23:32)

அநேக ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட கிராமத்திலே பாம்பாட்டி ஒருவர் வாழ்ந்து வந்தார். தன்னிடமிருந்த ஒரு மலைப் பாம்பைக் கொண்டு வேடிக்கைக்காட்டி அதன் மூலம் வரும் பணத்தால் வாழ்க்கை நடத்திக் கொண்டு வந்தார். பொது மக்கள் கூடுகின்ற இடத்திற்கு சென்று அப்பாம்பிடம் தன்னை சுற்றிக் கொள்ளவும், தன் மேல் ஏறவும் இறங்கவும் கட்டளையிடுவார். அவர் சொற்படியே பாம்பும் செயல்படும். மக்கள் இதை ஆச்சரியத்துடன் கண்டு மகிழ்ந்து காசுகளைக் கொடுப்பார்கள்.

இவரது பக்கத்து வீட்டுக்காரர்கள் கூறுவார்கள், ‘பாம்போடே விளையாடாதே, அது என்றாவது ஒருநாள் அதன் குணத்தைக் காட்டிவிடும். வேறு ஏதாவது நல்ல தொழிலை செய்து பிழை’ என்பார்கள். ஆனால் அவரோ அதை காதில் போட்டுக் கொள்ளாமல் வழக்கம் போல செய்து வந்தார். ஒரு நாள் மக்கள் மத்தியில் பாம்போடு வேடிக்கைக் காட்டி தன்னைச் சுற்றிக் கொள்ளுமாறு பாம்பிற்கு கட்டளையிட்டார். அதுவும் அவரது கால்களில் எறி கழுத்து, தலை வரை சுற்றிக் கொண்டது. அதோடு அவர் மக்களை மகிழ்விக்க நடனமாடினார். சில நிமிடங்களில் இறங்க கட்டளையிட்டார். ஆனால் பாமபு ஆக்ரோஷமாக அவரை இறுக்கியது. எலும்புகள் நொறுங்கின. வாயிலிருந்து இரத்தம் வடிய மாண்டு போனார்.

பிரியமானவர்களே, நம்மில் சிலர் கூட சிற்றின்பத்திற்காகவும், நண்பர்களின் உறவு அறுந்துப் போகக் கூடாது என்று எண்ணியும் பல்வேறு தீய பழக்கங்களுக்கு அடிமையாக இருக்கலாம். அது போதைப் பொருள், அசுத்த சினிமா, ஆபாச புத்தகங்கள், மதுபானம், கூடாத நட்பு, பான் பராக் என ஏதோ ஒன்றாக இருக்கலாம். வேதமும் தேவனும் அநேக முறை அதை விட்டுவிட எச்சரித்தும் அதை கேட்காமல், பாவத்திலேயே வாழ்ந்துக் கொண்டிருக்கலாம். நண்பரே, இப்போது இன்பமாய் தோன்றும் இச்செயல்கள், ஒரு நாள் உங்கள் வாழ்க்கையையே அழித்துவிடும். தனிமையில் குற்ற உணர்வு உங்களை உருக்குலைத்து விடும். பாவம் உங்கள் எதிர்கால இலட்சியத்தை அழித்து விடும். பாவம் உங்களைக் குறித்து தேவன் வைத்துள்ள திட்டத்தை சிதைத்து விடும். முடிவில் பாவம் உங்களை பாதாளத்தில் தள்ளிவிடும்.

பாம்போடே வருடக்கணக்கில் பழகின அவரின் நிலை ஒரு நாளில் பரிதாபத்திற்குள்ளானதல்லவா? பாவம் தன் உண்மை சுபாவத்தை காண்பிக்குமுன் மனம் மாறி, அந்த கெட்ட பழக்கங்களிலிருந்து வெற்றியை பெற்று விட முயற்சியுங்கள். ஆரம்பத்தில் கடினமாக தோன்றும் காரியம் மனம் வைத்து விடா முயற்சி செய்யும்போது, அதை விட்டு விலக முடியும். பரிசுத்த ஆவியானவின் துணையுடன் அவற்றை வெல்ல ஜெபத்தோடு பாவ வழக்கங்களைவிட்டுவிட ஜெபியுங்கள். ‘கர்த்தருடைய கிருபை அவருடைய உடன்படிக்கையைக்கைக்கொண்டு, அவருடைய கட்டளைகளின்படி செய்ய நினைக்கிறவர்கள் மேலேயே உள்ளது’ – (சங்கீதம் 103:18). அந்த கெட்ட பழக்கங்களிலிருந்து விடுபட்டு, அவருடைய கட்டளைகளின்படி செய்ய நினைக்கிறவர்கள் மேலேயே அவருடைய கிருபை இருக்கிறதாம். நினைத்தாலே போதும் கர்த்தருடைய கிருபை இறங்கி வந்து, உங்களை அந்த பாவக் கட்டுகளிலிருந்து, விடுவிக்க தேவன் உதவி செய்வார்.

உங்கள் வாலிப நாட்களை வீணாக கெடுத்து, வாழ்ககையை கெடுத்துக் கொள்ளாதிருங்கள். அனேக வாலிபர், இந்த பழக்கங்களை ஆரம்பித்து பின் அதிலிருந்து விடுபட முடியாமல் தவிப்பதைப்பார்த்து கண்ணீரோடு ஜெபித்திருக்கிறேன். அன்பு நண்பர்களே, வேண்டாம் இந்த கொடிய பழக்கங்கள்! அது உங்கள் உறவுகளை கண்ணீர் விட வைக்கும், அவர்களை துணையற்றவர்களாக்கி விடும். சாத்தானின் தந்திரத்தில் சிக்கி உங்கள் வாழ்க்கையை நரகமாக்கி விடாதிருங்கள். ஆரம்பத்தில் சுவையாகத் தோன்றும் இவைகள் உங்கள் சுகத்தை திருடிவிடும். ஒருமுறை போன சுகம் திரும்ப உங்களுக்கு வராது. உங்கள் சரீர பாண்டங்களை பரிசுத்தமாய் காத்துக் கொள்ளுங்கள் என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. ஆகவே தயவு செய்து இந்தப் பழக்கங்களில் ஈடுபட்டு உங்களை கறைப்படுத்திக் கொள்ளாதிருங்கள். இவற்றிலிருந்து விடுபட ஒரே வழி இயேசுகிறிஸ்துதான். அவரை அண்டிக்கொள்ளுங்கள். பரிகாரியாகிய அவர் நீங்கள் விடுபடும்படி உதவி செயவார்!

நன்மையானவைகளே

அநேக வருடங்களுக்கு முன் ஸ்காட்லாந்தில் கிளார்க் என்பவர் குடும்பமாக அமெரிக்கா செல்ல வேண்டும் என்று திட்டமிட்டு, அநேக நாட்களாக அவரும், அவருடைய மனைவியும், அவருடைய ஒன்பது பிள்ளைகளும் பணத்தை சேமித்து வைத்து, ஸ்காட்லாந்திலிருந்து புறப்படும் ஒரு புதிய கப்பலில் அமெரிக்கா செல்வதற்காக ஒழுங்குகள் செய்திருந்தார்கள். அந்த நாள் எப்போது வரும் என்று காத்திருந்தார்கள்.

சரியாக அவர்கள் செல்வதற்கு ஏழு நாட்கள் இருக்கும்போது அவருடைய கடைசி மகனை தெரு நாய் ஒன்று கடித்து விட்டது. அவனை பரிசோதித்த வைத்தியர், ஒரு வேளை ரேபீஸ் (Rabies) வருவதற்கு சாதகங்கள் இருக்கிறது என்று பதினான்கு நாட்கள் (Quarantine Period) அவனை கவனிக்க வேண்டும் என்று சொல்லி விட்டார்.

அதை கேள்விப்பட்ட கிளார்க் மிகவும் விரக்தி அடைந்தார். இத்தனை நாட்கள் குருவி போல சேர்த்து வைத்து, ஆசை ஆசையாய் போக வேண்டும் என்று இருந்தபோது இப்படி ஆகி விட்டதே என்று தன் மகனை ‘உன்னால் தான் என் கனவு நிறைவேறவில்லை’ என்று கடிந்து கொண்டு, ‘ஏன் தேவனால் இதை தடுத்து நிறுத்த முடியவில்லை’ என்று கர்த்தர் மேலும் கோபம் கொண்டார்.

ஐந்து நாட்கள் கழித்து, உலகமே அதிர்ச்சி அடையும் செய்தி வந்தது. மிகவும் விலையுயர்ந்த, மூழ்கவே முடியாது என்று எஞ்சினியர்கள் சிபாரிசு செய்த டைடானிக் கப்பல் மூழ்கி போனது என்றும் அதில் பயணம் செய்த ஆயிரக்கணக்கானவர்களில் ஆறு பேர் மாத்திரமே தப்பினார்கள் என்றும் செய்தி வந்தது. கிளார்க் குடும்பத்தினர் அந்த கப்பலிலே பயணம் செய்யவே ஒழுங்கு செய்திருந்தாhர்கள். கிளார்க் அவர்களுக்கு அப்பொழுதுதான் புரிந்தது, ஏன் கர்த்தர் அவர்கள் செல்வதற்கு தடை செய்தார் என்று. மகனை கட்டி பிடித்து முத்தமிட்ட அவர் கர்த்தருக்கும் நன்றி சொன்னார்.

உங்கள் வாழ்க்கையிலும் நீங்கள் வருடக்கணக்கில் கனவு கண்டு வந்த காரியம் கைக்கூடி வரவில்லையா? நீங்கள் எதிர்ப்பார்த்த நன்மைக்கு பதிலாக எதிர்பாராத மோசமான காரியம் ஏற்பட்டு, உள்ளம் உடைந்து போனீர்களா? நீங்கள் கர்த்தரை உண்மையாய் பின்பற்றுவீர்களானால், உங்கள் வாழ்வில் நடப்பது எல்லாமே நன்மைக்காகவே. உடனடியாக நமக்கு அந்த நன்மை என்ன என்று தெரியாவிட்டாலும், கர்த்தர் நமக்காக செய்யும் காரியங்கள் நன்மையானவைகளே!
Related Posts Plugin for WordPress, Blogger...