பரம வைத்தியராம் என் ஆண்டவரிடம் என்னை பரிசோதிக்கும்படி ஒரு மருத்துவப் பரிசோதனைக்காகச் சென்றேன். பரிசோதனை பெறுபேறுகளிலிருந்து நான் நோய் வாய்ப்பட்டிருப்பது அறிந்துகொண்டேன்.
- அவர் என் இரத்த அழுத்தத்தை சோதித்த போதுஅதில் அன்பு மிகவும் குறைந்திருப்பது தெரியவந்தது.
- அவர் என் உடல் வெப்பநிலையை அளந்த போதுஅதில் என் கவலை 40 டிகிரியாக உயர்ந்திருந்தது.
- அவர் என் எலும்புகளை பரிசோதித்த போதுஅவைகள் பொறாமையினாலும் கசப்பினாலும் உலர்ந்துபோயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
- அவர் என் கண்களை சோசித்தபோது.அவைகள் கடவுளின் வார்த்தையை கேட்கமுடியாதபடிஎன் செவிகள் மந்தமாயிருப்பது புலனாயிற்று.
இந்த மருத்துவ சோதனைக்காக அவர் என்னிடம் பணம் எதும் வாங்க வில்லை. இலவசமாய் சேவை செய்த என் ஆண்டவரின் அளவற்ற கருணையை நான் என்னவென்பேன்?
என் நோய் சீக்கிரமே குணமடையும்படி அவர் தமது சத்திய வார்த்தையின் படியே நடக்கும் படியாக என்னைக் கேட்டுக் கொண்டார்.
அதன் படி தினமும் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் நிறைய நன்றியுணர்வை அருந்தி, வேலைக்கு போகும் முன் ஒரு கரண்டி சமாதானத்தை அருந்தி, வேலை நேரத்தில் மணிக்கு ஒரு தடவை பொறுமை என்னும் மாத்திரையை சகோதரத்துவமும் தாழ்மையும் கலந்த நீருடன் பருகி, மாலையில் வீடு திரும்பும்போது ஒரு டம்ளர் நிறைய அன்பை பருகி, இரவு படுக்கைக்கு போகு முன் குற்றமற்ற உள்ளமெனும் மாத்திரையை ஜெபத்துடன் உட்கொண்டால் சீக்கிரமே என் பலவீனம் நீங்கி சகமடைவாய் என்றார். புரம வைத்தியரான இயேசு..
…சரி நீங்களும் அந்த பரம வைத்தியரை அணுகி பார்க்கலாமே!
No comments:
Post a Comment