கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Sunday 16 September 2012

சத்தியவசனம்......

சத்தியவசனத்தை கேட்டதினால்

விசுவாசிக்க தொடங்கினேன் - இயேசுவே

சத்தியமும் வார்த்தையும் என்பதை

விசுவாசிக்க தொடங்கினேன்.
சத்தியவசனத்தை வாசித்ததினால்

அறிவுக்கண்கள் திறந்தன - இயேசுவே

நித்திய தேவனும் ராஜாதிராஜனும்

என்பதை அறிந்தேன்.

சத்தியவசனத்தை பெற்றதினால்

பாவம் இன்னதென்பதை அறிந்தேன் - இயேசுவே

பாவியின் மீட்பரும் இரட்சகரும்

என்பதை அறிந்தேன்.
சத்தியவசனத்தை கேட்டதினால்

என்னில் ஜீவ ஒளி வந்தது - இயேசுவே

நித்திய ஜீவனைத் தந்தார்

சத்தியவாழ்வும் வந்தது.
சத்தியவசனத்தை கேளுங்கள்

அதன்படி வாழும்போதினில் - இயேசுவின்

அன்பும் பரிசுத்தமும் தங்கும்.

துன்பம் நீங்கிக் களிப்பு பெருகும்.


ஆக்கம் - ரி.எல்.தாசன்

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...