கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Monday 17 February 2014

பொறுப்பினைக் காத்து நடத்தல்

….என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்ப்படுத்தின படியினால், அவரை ஸ்தோத்தரிக்கிறேன் ( 1 தீமோ 1:12 )

கொடுக்கப்பட்ட வேலையில் உண்மையுள்ளவனாய் இருப்பது என்பது மிகவும் இலகுவான காரியமல்ல………………!! ஆனால்..பொறுப்புக்களை எடுப்பது, தலைமைத்துவத்தில் இருப்பது என்றால் சிலருக்கு அலாதிப் பிரியம் இவற்றிற்கெல்லாம் இப்போ நான்தான் பொறுப்பு,  இன்னின்ன காரியங்களுக்கு நான் தான் தலைவர் என்று சொல்லுவதிலே மகிழ்ச்சி காண்போரும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் பொறுப்புக்களை எடுப்பதும், தலைவர்களாய் இருப்பதும் முக்கியமானதல்ல நாம் எடுத்த பொறுப்புக்களை எப்படியாய் செய்கிறோம் என்பதும், எமது தலைமைத்துவத்தை எப்படியாகக் கையாளுகிறோம் என்பதுமே முக்கியமானதாகும்.

ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த தாவீதை, தகப்பனார் போர்க்களத்தில் இருக்கும் சகோதரருக்கு உணவு எடுத்துச் செல்லும்படியாகக் கூறியபோது, அவன் அதிகாலமே எழுந்து தனது ஆடுகளை காவலாளிகள் வசம் ஒப்படைத்து, பின்னர் போர்க்களத்திற்குச் செல்வதைக் காண்கிறோம். (1சாமு- 17:20). தன் பொறுப்பில் இருப்பது ஆடுகளாயினும் அவற்றைத் தவிக்கவிட தாவீதுக்கு மனதிருக்கவில்லை. தாவீதின் பொறுப்பான தன்மை இதில் எமக்கு வெளிப்படுகிறதல்லவா? தாவீது ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டதினால் இப்போழுது அவனுக்கு துணிகரமும், அகங்காரமும் வந்துவிட்டதனால் ஆடுகளைக் கவனிக்காது விட்டுவிட்டு இங்கே யுத்தகளத்தில் வந்து நிற்கிறான். ஏன தப்பாகப் புரிந்து கொண்ட அவனது சகோதரன் எலியாப் கோபத்தோடு அவனைக் கண்டித்து கொள்வதையும் இங்கே நாம் கவனிக்கவேண்டும் (1சாமு- 17:28).

புதிய பொறுப்புக்கள் வந்ததும் பழைய பொறுப்புக்களை மறந்து போவது சர்வசாதாரணமாகிவிட்டது. புதவி மோகத்தால், குடும்பங்களை மறந்து போகும் தாய், தந்தையின் குடும்பநிலைகள் பரிதாபமானவைகள். ஏல்லாப்பொறுப்புக்களையும் தலைமேல் துக்கிவைத்துக்கொண்டு எதைச்செய்வது எனத்தெரியாமல் ஒன்றையும் செய்யாமல் இருப்பதைவிட அளவோடு பொறுப்புக்களை எடுத்து முழுமையாக செய்துமுடிப்பதே ஞானமான காரியம், ஒரு திருமண வைபவத்தில் ஆலயத்திற்கு வந்தவரை விருந்துபசாரத்தில் காணவில்லை என்று தேடியபோது அவர் வீடு சென்று படுக்கையில் இருக்கும் தனது தந்தைக்கு செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து மீண்டும் பறப்பட்டு விருந்துபசாரத்திக்கு வந்திருந்தார். அவர் செய்த செயலை நாம் அறிந்து கொண்ட போது நாம் தேவனை மகிமைப்படுத்தினோம். பொறுப்பற்றிருப்போருக்கு இது சாவால் அல்லவா?.. நமக்கு அருளப்பட்டிருக்கும் பொறுப்புக்களை தேவன் தந்துள்ள பொக்கிஷங்களாக நினைத்து நாமும் செயல்படுவோமாக!.. சிந்திப்போம்…

ஜெபம் :-

“ஆண்டவரே.. எனது கைகளில் நீர் தந்திருக்கும் பொறுப்புக்களை உண்மைத்துவத்திடன் செய்ய உமது கிருபையை ஈந்தருளும்….ஆமென்.    

Thursday 6 February 2014

என்னை தொடரும் கண்கள்.

ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார். ( யோபு 23:10 )

“ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்.” என்று அறிக்கை செய்த யோபு கடந்து சென்ற பாதை எப்படிபட்டது என்பதை நாம் அறிவோம். இங்கு அவர் “ஆனாலும்” என்று கூறுவதை கவனித்துப்பாருங்கள். அவரது அங்கலாய்ப்புகளை உணர்ந்து கொள்வார். யாருமில்லை, தன் நண்பர்களினால் அவர் முரட்டாட்டம் பண்ணுகிறவராக காணப்பட்டார். இந்த நிலையில் கர்த்தரைச் சந்திக்கும் இடத்தை தேடுகிறார். முன்னாகவும் அவர் இல்லை பின்னாலும் அவரைக் காணவில்லை இடதுபுறத்திலும் இல்லை வலதுபுறமும் வெறுமையே. ஏந்தத்திக்கிலும் அவரால் தேவ சமுகத்தை உணரமுடியவில்லை. “ஆனாலும்”…………..!

இப்படியான சூழ்நிலைக்குள் அகப்பட்டு, வழிகள் யாவும் அடைக்கப்பட்ட நிலையில் தேவனைத் தேடும் தேவபிள்ளையே, சிவந்த சமுத்திரம் மற்றும் கரைபுரண்டோடிய யோர்தான் நதிபோன்ற பிரச்சனைக்கு முகம் கொடுத்த இஸ்ரவேல் மக்களை தேவன் கைவிட்டாரா?.. சோதனை, கண்ணீர், தப்பபிப்பிராயங்கள், சந்தேகங்கள், யாவும் நமது வாழ்க்கையின் நம்பிக்கையை அழித்து போடுவதுபோல நம்மை பயமுறுத்தலாம். தாகத்தோடு வந்த இஸ்ரவேலர் முதலில் கசப்பான மாரவைத்தானே சந்தித்தார்கள். தேவன் அதை மதுரமாக்கி கொடுக்கவில்லையா? உணவுக்காக கஷ்டப்பட்ட மக்களுக்கு மன்னாவை கொடுத்தது போன்ற சந்தோஷமும் உற்சாகமும் நிறைந்த நமது வாழ்க்கை வழிகளையும் தேவன் அறிந்திருக்கிறார். என்பதையும மறக்கக்கூடாது. ஏனெனில் வழியிலே இலகுதோன்றும் போது இலகுவில் இடறியும் நாம் விழக்கூடுமே ஆகவே,அவ்வழிகளிலும் நம் கால்கள் இடறலாமல் அவரே நம்மை காத்துக்கொள்கிறார். ஏழு மடங்கு அதிகரிக்கப்பட்ட சூழையின் மத்தியில் தன் பிள்ளைகளுடன் உலாவியவர் நம்மை கைவிடுவாரா?........சூழை சூடாக அனுமதிக்கிறவர் அவரே, அதிலே நாம் அழிந்து போகாமல், பொன்னாக மிளிரும்வரை நம்மருகில் இருப்பவரும் அவரே. யோபு, தன் நம்பிக்கை யாவும் அற்றுப்போன வேளையிலும், குடும்ப வாழ்வு சிதறிவிட்ட நிலமையிலும் தன் கர்த்தருடைய கரத்தையே கண்டார்.

அப்படியானால் அதே கரத்தை ஏன் நாமும் காணக்கூடாது? நமது வழி கர்த்தரால் அறியப்பட்ட வழி என்பதை உறுதியாக நம்புவோமானால், “அவர் என்னை சோதித்தபின் பொன்னாக விழங்குவேன்”. என்று விசுவாச அறிக்கையைச் செய்வது நமக்கு கடினமாக இராது. தேவபிள்ளையே உன் வழிநெடுகிலும் அளவற்ற இரக்கத்துடன். உன்னை பின்தொடரும் அவரது கண்களை காணும்படிக்கு இன்றைக்கே உன் விசுவாச கண்களை திறந்துகொள். அதன்பின் உன் துன்பவழிகளும் உனக்கு நன்மையின் வழியாகவே தெரியும்.

ஜெபம்
“பிதாவே. எந்தத் துன்பம் வந்தாலும். நான் போகும் வழியை நீர் அறிந்திருப்பதனால் நான் தைரியமாக முன் செல்வேன் உமக்கே துதி… ஆமென்” 

Related Posts Plugin for WordPress, Blogger...