கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Monday 26 May 2014

தேவனை நோக்கி பார்

தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமானவர்

காய்ந்துபோன ஒரு மரக்கொப்பில் அமர்ந்திருந்த ஒரு குருவி, தனது இனிமையான குரலால் அழகாக தேவனை புகழ்ந்து பாட ஆரம்பித்ததாம். திடீரென மரக்கொப்பு முறியவே “ தொப்” என கிழே விழுந்த குருவி, மரத்திற்கு கிழே இருந்து தனது பாட்டை தொடர்ந்ததாம். மரத்திலிருந்து ஒரு பழம் குருவியின் தலைமேல் விழுந்ததாம். மரத்தைவிட்டு தத்தித்தத்தி புல்பூண்டு உள்ள இடத்திற்கு சென்று தனது பாட்டைத் தொடர்ந்த போது, பூண்டில் இருந்த ஒரு முள் குருவியின் காலை தைக்கவே “ஜயோ! தீமை பயக்கும் இவை எல்லாம் அழிந்துபோக வேண்டும்” என்று சொல்லிக்கொண்டு ஒரு கட்டிடத்தில் உச்சியிலே நின்றுகொண்டு பாடியதாம். தீடீர் என்று  கொட்டிய மழையில் நனைந்த குருவி, மரங்கள் புல் பூண்டுகளும் நனைந்து அழியப்போகிறது என்று எதிர்பார்த்ததாம். ஆனால் பரிதாபம்! பெய்த மழையினால் காய்ந்துபோயிருந்த மரமும், புல் பூண்டும் செழித்து வளர்ந்ததைக் கண்ட குருவி ஏமாற்றத்தால் மனம் புழுங்கியதாம். இக் கற்பனையிலும் ஒரு கருத்துண்டல்லவா! 

இந்தக் குருவியைப்வோலவே நாமும் மனம் புழுங்குவதுண்டல்லவா? தேவனை நாம் அண்டி வாழ்வதாலும், சத்தியத்திற்காய் துணிந்து நிற்பதாலும், பல உபத்திரவங்களை அனுபவிக்க நேரிடும். அந்தச் சந்தர்ப்பங்களில், தேவனை அறியாதோரும், சத்தியத்திற்குப் புறம்பாக நடப்பவர்களும் சுகபோக வாழ்வை அனுபவிப்பதையும், சத்தியத்தை மீறுவதால் செல்வச் செழிப்புடன் வாழ்வதையும் பார்க்கும் போது, இது எப்படி? நூம் உண்மையும் உத்தமமுமாய் வாழ்வது என்ன விருதாவா? ஏன்று எண்ணத் தோன்றுகின்றதல்லவா! ஆவர்களையெல்லாம் தேவன் பாராமல் கண்ணை முடிக்கொண்டு இருக்கிறராரோ? ஏன்றும் நாம் சொல்லுவதுண்டல்லவா? இதைதான் தாவீதும் தனது சங்கீத்தில் கூறுகின்றார். ஆரம்பத்திலே அவர் துன்மார்க்கரின் வாழ்வை பார்த்துப் பொறாமை கொண்டாலும், இறுதியில் அவர் உணர்ந்து சொல்லும் வார்த்தை என்ன? “தேவனே என் இருதயத்தின் கன்மலையும், என் பங்குமாயிருக்கிறார் (வச.26) “ எனக்கோ தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்” என்கிறார் (வச.28)

துன்மார்க்கரின் வழியைக் கர்த்தர் பார்த்துக்கொள்வார். நூம் அவர்களைப் பார்த்து பொறாமை கொள்ளத் தேவையில்லை, நாம் தேவனை அண்டிக்கொண்டிருப்போம். எமது வாழ்வை சற்றே திரும்பி பார்ப்போமா! எமது மனநிலைகளை மாற்றிக்கொள்வோமா! எமது மன நிலைகளை மாற்றிக்கொள்வோமா! எமது வேதனைகளிலும், உபத்திரவங்களிலும் தேவனை நோக்கி பார்ப்போமா! “ கர்த்தராகிய ஆண்டவர்மேல் என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன்” என்று சொல்லுவோமா!           

Tuesday 11 March 2014

நீயே ஏற்றவன்

அவள் புறப்பட்டு …………அந்தச் செய்தியை அறிவித்தாள். – ( மாற்கு 16 : 10 )

ஆண்டவர் விரும்பி யாரை தம் பணிக்காக ஆயத்தப்படுத்துகின்றார். மேற்கண்ட வசனத்தை தியானித்து பாருங்கள். பிறரால் ஏற்றுக்கொள்ளக்கூடாதிருந்த ஒருத்தியை ஆண்டவர் தமது செய்தியைச் சொல்ல ஏற்றவள் என்று கண்டார். ஏன்றால் நம்மை புறக்கணிப்பாரா? இயேசுவுடனே கூடவிருந்த அநேக ஸ்திரீகளில் மகதலேனா மரியாளும் ஒருத்தி. இவள் பிசாசுக்களினால் அலைக்கழிக்கப்பட்டவளாய் இருண்ட ஜீவியம் ஜீவித்தவள். இதனால் இவள் வியாதிப்பட்டிருந்தாளோ, பிறருக்கு தொந்தருவாய் இருந்தாளோ, ஊராரால் வெறுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு இருந்தாளோ நாமறியோம். ஆனால் ஒன்று நிச்சயமாகத் தெரியும். அவளுக்கு தொல்லைகொடுத்த ஏழு பிசாசுகளை இயேசு துரத்தியிருந்தார். பிசாசுக்களின் வலிமைப்பிடியிலிருந்து அவள் இயேசுவாலே மீட்கப்பட்டிருந்தாள். அதன் பிற்பாடு அவள் இயேசுவை நன்றியுள்ள இதயத்தோடே உண்மையாகவே பின்பற்றினாள். ஒருவேளை, இவளது பழைய வாழ்க்கை நமக்குத் தெரியாததா? இப்பொழுது வேஷம் போடுகிறாளே என்று பிறர் பரிகாசம்பண்ணி அவளைப் புண்படுத்தி இருக்கலாம். ஆனால் அவளோ ஆண்டவரைப் பற்றிக்கொண்டாள்.

மனுஷன் முகத்ததைப் பார்ப்பான். கர்த்தரோ இருதயத்தை பார்க்கிறார். ( 1சாமு 16 : 7 ) யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமேயும்,உயிர்தெழுந்த செய்தியைத் தேவதூதர்களின் வாயிலினின்று கேட்டு, பயந்திருந்தபடியினாலே ஒருவருக்கும் சொல்லாமல் இருந்துவிட்டார்கள். செய்தியைகேட்டு ஒடி வந்த பேதுருவும் யோவானும்கூட வெறுமையான கல்லறையைப் பார்த்து விட்டுத் திரும்பி போய்விட்டார்கள். ( யோவான் 20 : 10 ) ஆனால் மகதலேனா மரியாளோ கல்லறையின் அருகே காத்திருந்தாள். இவளே உயிர்த்தசெய்தியை அறிவிக்கும் பாக்கியம் பெற்றாள். இயேசு, இவளுக்கே முதலாவதாகக் காணப்பட்டார். அவளும் ஒடிச்சென்று செய்தியை அறிவித்தாள். ( மாற்கு 16 : 10 )

தேவபிள்ளையே, பாவப்பிடியிலிருந்து நீ விடுவிக்கப்பட்டதைப் புரிந்து கொள்ளாதவர்களால் நீ இன்னும் பரிகசிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு துக்கித்துக்கொண்டிருக்கலாம். காரியம் அதுவல்ல. இவற்றுக்கு மத்தியிலும் ஆண்டவருக்காக காத்திருப்பாயானால், ஆண்டவர் உன்னை காண்பார். தமது நித்திய சந்தோஷ செய்தியை பிறருக்கு அறிவிக்க தகுந்தவன் என காண்கிறார். நீ ஏன் துக்கமுகத்தோடு இருக்கவேண்டும்? இயேசு உனக்கருளும் செய்தியைக் கூர்ந்து கவனி. நீ அதனை கூறவேண்டிய இடத்திற்கு அவரே உன்னை நடத்துவார். துக்கமுகத்தை கழுவிக்கொண்டு உன்னை மீட்ட இயேசுவுக்காகப் புறப்படுவாயா?

இரட்சகரே, பாவப்பிடியில் சிக்கியிருந்த என்னையா, நீர் உமது சுவிஷேத்தை அறிவிக்கும் பாத்திரமாக தெரிந்தெடுத்தீர்! நான் இதற்கு பாத்திரனல்லாத போதும் உமது சித்தம் நிறைவேற்ற என்னை தத்தம் செய்கிறேன். ஆமென்.    

Monday 17 February 2014

பொறுப்பினைக் காத்து நடத்தல்

….என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்ப்படுத்தின படியினால், அவரை ஸ்தோத்தரிக்கிறேன் ( 1 தீமோ 1:12 )

கொடுக்கப்பட்ட வேலையில் உண்மையுள்ளவனாய் இருப்பது என்பது மிகவும் இலகுவான காரியமல்ல………………!! ஆனால்..பொறுப்புக்களை எடுப்பது, தலைமைத்துவத்தில் இருப்பது என்றால் சிலருக்கு அலாதிப் பிரியம் இவற்றிற்கெல்லாம் இப்போ நான்தான் பொறுப்பு,  இன்னின்ன காரியங்களுக்கு நான் தான் தலைவர் என்று சொல்லுவதிலே மகிழ்ச்சி காண்போரும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் பொறுப்புக்களை எடுப்பதும், தலைவர்களாய் இருப்பதும் முக்கியமானதல்ல நாம் எடுத்த பொறுப்புக்களை எப்படியாய் செய்கிறோம் என்பதும், எமது தலைமைத்துவத்தை எப்படியாகக் கையாளுகிறோம் என்பதுமே முக்கியமானதாகும்.

ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த தாவீதை, தகப்பனார் போர்க்களத்தில் இருக்கும் சகோதரருக்கு உணவு எடுத்துச் செல்லும்படியாகக் கூறியபோது, அவன் அதிகாலமே எழுந்து தனது ஆடுகளை காவலாளிகள் வசம் ஒப்படைத்து, பின்னர் போர்க்களத்திற்குச் செல்வதைக் காண்கிறோம். (1சாமு- 17:20). தன் பொறுப்பில் இருப்பது ஆடுகளாயினும் அவற்றைத் தவிக்கவிட தாவீதுக்கு மனதிருக்கவில்லை. தாவீதின் பொறுப்பான தன்மை இதில் எமக்கு வெளிப்படுகிறதல்லவா? தாவீது ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டதினால் இப்போழுது அவனுக்கு துணிகரமும், அகங்காரமும் வந்துவிட்டதனால் ஆடுகளைக் கவனிக்காது விட்டுவிட்டு இங்கே யுத்தகளத்தில் வந்து நிற்கிறான். ஏன தப்பாகப் புரிந்து கொண்ட அவனது சகோதரன் எலியாப் கோபத்தோடு அவனைக் கண்டித்து கொள்வதையும் இங்கே நாம் கவனிக்கவேண்டும் (1சாமு- 17:28).

புதிய பொறுப்புக்கள் வந்ததும் பழைய பொறுப்புக்களை மறந்து போவது சர்வசாதாரணமாகிவிட்டது. புதவி மோகத்தால், குடும்பங்களை மறந்து போகும் தாய், தந்தையின் குடும்பநிலைகள் பரிதாபமானவைகள். ஏல்லாப்பொறுப்புக்களையும் தலைமேல் துக்கிவைத்துக்கொண்டு எதைச்செய்வது எனத்தெரியாமல் ஒன்றையும் செய்யாமல் இருப்பதைவிட அளவோடு பொறுப்புக்களை எடுத்து முழுமையாக செய்துமுடிப்பதே ஞானமான காரியம், ஒரு திருமண வைபவத்தில் ஆலயத்திற்கு வந்தவரை விருந்துபசாரத்தில் காணவில்லை என்று தேடியபோது அவர் வீடு சென்று படுக்கையில் இருக்கும் தனது தந்தைக்கு செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து மீண்டும் பறப்பட்டு விருந்துபசாரத்திக்கு வந்திருந்தார். அவர் செய்த செயலை நாம் அறிந்து கொண்ட போது நாம் தேவனை மகிமைப்படுத்தினோம். பொறுப்பற்றிருப்போருக்கு இது சாவால் அல்லவா?.. நமக்கு அருளப்பட்டிருக்கும் பொறுப்புக்களை தேவன் தந்துள்ள பொக்கிஷங்களாக நினைத்து நாமும் செயல்படுவோமாக!.. சிந்திப்போம்…

ஜெபம் :-

“ஆண்டவரே.. எனது கைகளில் நீர் தந்திருக்கும் பொறுப்புக்களை உண்மைத்துவத்திடன் செய்ய உமது கிருபையை ஈந்தருளும்….ஆமென்.    

Thursday 6 February 2014

என்னை தொடரும் கண்கள்.

ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார். ( யோபு 23:10 )

“ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்.” என்று அறிக்கை செய்த யோபு கடந்து சென்ற பாதை எப்படிபட்டது என்பதை நாம் அறிவோம். இங்கு அவர் “ஆனாலும்” என்று கூறுவதை கவனித்துப்பாருங்கள். அவரது அங்கலாய்ப்புகளை உணர்ந்து கொள்வார். யாருமில்லை, தன் நண்பர்களினால் அவர் முரட்டாட்டம் பண்ணுகிறவராக காணப்பட்டார். இந்த நிலையில் கர்த்தரைச் சந்திக்கும் இடத்தை தேடுகிறார். முன்னாகவும் அவர் இல்லை பின்னாலும் அவரைக் காணவில்லை இடதுபுறத்திலும் இல்லை வலதுபுறமும் வெறுமையே. ஏந்தத்திக்கிலும் அவரால் தேவ சமுகத்தை உணரமுடியவில்லை. “ஆனாலும்”…………..!

இப்படியான சூழ்நிலைக்குள் அகப்பட்டு, வழிகள் யாவும் அடைக்கப்பட்ட நிலையில் தேவனைத் தேடும் தேவபிள்ளையே, சிவந்த சமுத்திரம் மற்றும் கரைபுரண்டோடிய யோர்தான் நதிபோன்ற பிரச்சனைக்கு முகம் கொடுத்த இஸ்ரவேல் மக்களை தேவன் கைவிட்டாரா?.. சோதனை, கண்ணீர், தப்பபிப்பிராயங்கள், சந்தேகங்கள், யாவும் நமது வாழ்க்கையின் நம்பிக்கையை அழித்து போடுவதுபோல நம்மை பயமுறுத்தலாம். தாகத்தோடு வந்த இஸ்ரவேலர் முதலில் கசப்பான மாரவைத்தானே சந்தித்தார்கள். தேவன் அதை மதுரமாக்கி கொடுக்கவில்லையா? உணவுக்காக கஷ்டப்பட்ட மக்களுக்கு மன்னாவை கொடுத்தது போன்ற சந்தோஷமும் உற்சாகமும் நிறைந்த நமது வாழ்க்கை வழிகளையும் தேவன் அறிந்திருக்கிறார். என்பதையும மறக்கக்கூடாது. ஏனெனில் வழியிலே இலகுதோன்றும் போது இலகுவில் இடறியும் நாம் விழக்கூடுமே ஆகவே,அவ்வழிகளிலும் நம் கால்கள் இடறலாமல் அவரே நம்மை காத்துக்கொள்கிறார். ஏழு மடங்கு அதிகரிக்கப்பட்ட சூழையின் மத்தியில் தன் பிள்ளைகளுடன் உலாவியவர் நம்மை கைவிடுவாரா?........சூழை சூடாக அனுமதிக்கிறவர் அவரே, அதிலே நாம் அழிந்து போகாமல், பொன்னாக மிளிரும்வரை நம்மருகில் இருப்பவரும் அவரே. யோபு, தன் நம்பிக்கை யாவும் அற்றுப்போன வேளையிலும், குடும்ப வாழ்வு சிதறிவிட்ட நிலமையிலும் தன் கர்த்தருடைய கரத்தையே கண்டார்.

அப்படியானால் அதே கரத்தை ஏன் நாமும் காணக்கூடாது? நமது வழி கர்த்தரால் அறியப்பட்ட வழி என்பதை உறுதியாக நம்புவோமானால், “அவர் என்னை சோதித்தபின் பொன்னாக விழங்குவேன்”. என்று விசுவாச அறிக்கையைச் செய்வது நமக்கு கடினமாக இராது. தேவபிள்ளையே உன் வழிநெடுகிலும் அளவற்ற இரக்கத்துடன். உன்னை பின்தொடரும் அவரது கண்களை காணும்படிக்கு இன்றைக்கே உன் விசுவாச கண்களை திறந்துகொள். அதன்பின் உன் துன்பவழிகளும் உனக்கு நன்மையின் வழியாகவே தெரியும்.

ஜெபம்
“பிதாவே. எந்தத் துன்பம் வந்தாலும். நான் போகும் வழியை நீர் அறிந்திருப்பதனால் நான் தைரியமாக முன் செல்வேன் உமக்கே துதி… ஆமென்” 

Related Posts Plugin for WordPress, Blogger...