கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Saturday 25 August 2012

இயேசுவே, கிருபாசனப்பதியே

இயேசுவே, கிருபாசனப்பதியே, கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,ஏசுவே, கிருபாசனப்பதியே.

1.காசினியில் உன்னை அன்றி, தாசன் எனக் காதரவுகண்டிலேன், சருவ வல்ல மண்டலாதிபா!நேசமாய் ஏழைக்கிரங்கி, மோசம் அணுகாது காத்துநித்தனே, எனைத் திருத்தி, வைத்தருள் புத்தி வருத்தி,

…….எபிரேயர் 4:16 அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட இந்த அருமையான இந்த பாடலை எழுதிய ஜான் பால்மர் 1812-ம் ஆண்டு மயிலாடியில் பிறந்தார். தன் வாழ்வின் ஆரம்ப நாட்களிலேயே ஆண்டவரைத் தன் சொந்த ரட்சகராக ஏற்றுக் கொண்டு, நாகர்கோவில் பகுதியில் மிஷனரிகளுடன் சேர்ந்து, உற்சாகமாக நற்செய்திப் பணியாற்றினார். பால்மர் பல பாடல்களை எழுதிய சிறந்த கவிஞராவார். அவர் ஆண்டவரின் வாழ்க்கைச் சரித்திரத்தை அழகாகச் சித்தரிக்கும் “கிறிஸ்தாயணம்,” என்ற காவியத்தை உருவாக்கியிருக்கிறார்.

பால்மர் திருவனந்தபுரத்தில் அரசு அச்சகத்தில் பணியாற்றி வந்தார். நாதஸ்வர இசையைக் கேட்டு ரசிப்பது, அவருக்கு விருப்பமான பொழுது போக்காகும். எனவே, அவர் கேட்கும் இசையின் ராகத்தில் லயித்து, பரவசமாகப் பாடல்களை எழுதிவிடுவார்.

அந்நாட்களில், பொது இடங்களில் நாதஸ்வர இசைக்கச்சேரிகள் நடத்தப்படுவதில்லை. திருவனந்தபுரத்தின் புகழ்பெற்ற பத்மனாப சுவாமி கோவிலில், தினந்தோறும், அதிகாலைப் பூசை வேளையில், நாதஸ்வர இசை வாசிக்கப்படும். ஆனால், அக்கோவிலில் கிறிஸ்தவர் எவரும் நுழைந்தால், அவர்களுக்கு மரண தண்டனை உண்டு. எனினும், பால்மர் தன் உயிரையும் பொருட்படுத்தாது. ஒரு போர்வையால் தன்னை முழுவதும் மறைத்துக் கொண்டு, நாதஸ்வர இசையைக் கேட்கச் செல்லுவார். கேட்டு மகிழ்ந்த அதே ராகத்தில், அன்றே, ஆண்டவரைப் போற்றி, அழகான ஒரு பாடல் உருவாகிவிடும்.

இப்படிப்பட்ட ஆபத்தான சூழ்நிலையின் வழியே, உயிரைப் பணயம் வைத்து எழுதப்பட்ட அருமையான பாடல் தான், “இயேசுவே கிருபாசனப் பதியே” ஆகும்.

பால்மர், தமது 71 ஆண்டு கால வாழ்க்கையில், பல துன்பங்களுக்கும், வேதனை நிறைந்த அனுபவங்களுக்கும் உள்ளாயிருக்க வேண்டும். இவ்வுலக மக்களால் பல எதிர்ப்புகளை அவர் சந்தித்திருக்க வேண்டும். அடுக்கடுக்காய் வந்த இச்சோதனைகளால் தன் உள்ளம் சோர்ந்துபோகாதபடி, அவர் இறைவனின் துணையை நாடி, அவற்றின் மீது வெற்றியையும் பெற்றிருக்க வேண்டும். இவ்வனுபவமே அவரை, நாம் விரும்பிப் பாடும், “வாராவினை வந்தாலும் சோராதே மனமே,” என்ற சிறந்த ஆறுதல் பாடலை எழுதத் து}ண்டியிருக்கும்.

ஜான் பால்மர் இயற்றிய ஏனைய பாடல்களில் பிரபலமானவை:

1. பெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே

2. ஓசன்னா பாடுவோம் ஏசுவின் தாசரே

3. இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார் கம்பீரமாய் (மகிழ் கொண்டாடுவோம்)

4. உன்றன் சுயமதியே நெறியென்றுகந்து சாயாதே

5. கிஞ்சிதமும் நெஞ்சே அஞ்சிடாதே நல்ல கேடகத்தைப் பிடி நீ

மூன்று மரங்களின் கதை

ஒரு அடர்த்தியான காட்டில் முன்று மரங்கள் சிறந்த நண்பர்களாக இருந்தன. இவை ஒவ்வொன்றிற்கும் ஒரு கனவு இருந்தன.முதல் மரம் தன் கனவை தன் நண்பர்களிடம் சொன்னது, ” நான் ஒரு மாணிக்க பேழையாக மாறவெண்டும் என்பதே என் கனவு, என்னுள் அரசர்கள் தங்கள் வைரம், முத்து, மாணிக்கம் போன்ற விலைமதிக்கமுடியாத செல்வங்களை வைக்கவேண்டும், நான் அதை பத்திரமாக பாதுகாக்க வேண்டும்”

இரண்டாவது மரம் தன் கனவை சொல்ல ஆரம்பித்தது, ” நான் ஒரு மிக பெரிய போர் கப்பல் ஆக வேண்டும், நான் அரசர்களையும், மாமன்னர்களையும் சுமக்க வேண்டும், பலத்த புயல், கொடும் காற்று போன்ற எதுவாக இருந்தாலும், அவ்ர்கள் என்னில் பத்திரமாக பயணம் செய்ய வேண்டும்”என்ற தன் கனவை முடித்ததும்


மூன்றாவது மரம் சொன்னது “நான் நீண்டு உயர்ந்து வளர்ந்து மிக பெரிய மரமாவேன், அப்போது என்னை காணும் மக்கள் எல்லாம் வானையும், கடவுளையும் பார்த்து, நான் அவர்களுக்கு எவ்வளவு நெருங்கி விட்டேன் என்றும், எக்காலமும் நானே உலகின் சிறந்தமரம் என்றும் கூறவேன்டும்” என்று கூறியது…

பல வருடங்களாக தன் கனவு மேல் கொண்ட தவங்களுக்கு பிறகு, ஒரு நாள் சில மரவெட்டிகள் அந்த காட்டிற்க்கு வந்தனர். அவர்களில் ஒருவன் முதல் மரத்திடம் வந்து, ” நான் இதை வெட்டி ஒரு தச்சனிடம் விலைக்கு கொடுப்பேன்” என்று கூறினான், இதை கேட்ட அந்த முதல் மரம் தான் மாணிக்க பேழையாக போவதாக நினைத்து மகிழ்ந்தது.

இரண்டாவது மரத்திடம் வந்த மரவெட்டி அதன் உறுதியை பார்த்து, “நான் இதை வெட்டி துறைமுகத்தில் விற்பேன்” என்றான். இதை கேட்ட மரம் தான் ஒரு மிக பெரிய போர் கப்பலாக போவதாக எண்ணி மகிழ்ந்தது.

மற்றொரு மரவெட்டி மூன்றாவது மரத்திடம் வந்ததும் அது பயந்தது, அது வெட்டபட்டால் அதன் கனவுகள் அழித்து போகும் என நினைத்தது. அவன் அம்மரத்தை பார்த்து “நான் இம்மரத்திடம் பெரியதாக எதுவும் எதிர் பார்க்கவில்லை, இருப்பினும் இதை நான் வெட்டி கொண்டு செல்லுவேன்” என்றான்.

முதல் மரம் தச்சனிடம் வந்தபோது, அவன் அதை ஒரு வைக்கோல் பெட்டியாக செய்தான், மாணிக்க பேழையாக வேண்டிய தன் கனவு ஒரு வைக்கோல் பெட்டியாக ஆகிபோனதை நினைத்து அது வருந்தியது.

போர் கப்பல் கனவுடன் துறைமுகம் நுழைந்த இரண்டாவது மரம் ஒரு மீன்பிடி படகாக செய்யபட்டது.

மூன்றாவது மரம் பெரிய பாளங்களாக வெட்டி ஒரு இருட்டறையில் இடப்பட்டது.

காலம், அவர்களது கனவுகளை மறக்கவைத்தது.

ஒரு கொடுங்குளிர் இரவில், ஒரு தம்பதியர் ஒரு மாட்டு தொழுவத்திற்க்கு வந்தனர், பெண்மணி ஒரு அழகான குழந்தையை பெற்றெடுத்தார்.. அவர்கள் அந்த குழந்தையை முதல் மரத்தில் இருந்த செய்த வைக்கோல் பெட்டியில் வைத்தனர், அந்த மரம் அப்போது தான் உணர்ந்தது தான் உலகின் விலைமதிக்க முடியாத பொக்கிஷத்தை தாங்கி பாதுகாத்திருப்பதை.

சில வருடஙளுக்கு பிறகு சிலர் இரண்டாவது மரத்தில் இருந்து செய்யப்பட்ட மீன்பிடி படகில் எறினர். படகு நடு கடலில் செல்லுகையில், பெரும் புயல் வீச துவங்கியது. அந்த மரம் படகில் உள்ளவர்களை பத்திரமாக கரை சேர்ப்பதை பற்றி கவலை கொண்ட பொழுது , படகில் இருந்தவர்கள் அங்கு அமைதியாக தூங்கிக் கொண்டிருந்த ஒருவரை எழுப்பினர்., அவர் எழுந்து “அமைதி” என்றதும் புயல் அடங்கியது.

அந்த நேரத்தில் இரண்டாவது மரம் தான், அரசர்களின் அரசரை சுமந்ததை குறித்து மகிழ்ந்தது.

கடைசியாக, அந்த மூன்றாவது மரம் இருட்டறையில் இருந்த எடுத்து செல்லபட்டது. அது ஒரு மாமனிதரால் சுமந்து செல்லப்பட்டது, மக்கள் அதை சுமந்தவரை நிந்தித்தனர்.

அவரை அம்மரத்தில் ஆணியால் அறைந்து மலை உச்சியில் நட்டு வைத்தனர். ஞாயிறு வந்தபோது வாண்ணளவு உயர்ந்து கடவுளின் அருகில் மிக நெருக்கமாக இருந்ததை நினைத்து மகிழ்ந்தது, எனென்றால் அந்த மரத்தை சுமந்து, பின்னர்அதில் அறையப்பட்டவர் தான் தேவமைந்தன் இயேசு கிறிஸ்து……

இது கதையல்ல நிஜம் (ஓரு டம்ளர் பால் )

பின் தங்கிய கிராமமொன்றில் மிகவும் ஏழ்மையான நிலையில் வாழ்ந்து வந்த ஒரு சிறுவன் பாடசாலை முடிந்து வீடு வந்ததும் மாலை நேரங்களில் தன்னுடைய தாயார் செய்து கொடுக்கின்ற பலகாரங்களை வீடுவீடாகச் சென்று விற்பது வழக்கம். அதில் கிடைக்கும் சிறிய வரமானத்தைக் கொண்டு அவனால் தன் கல்வியை தொடரக் கூடியதாக இருந்தது.

இப்படியாக தனது வழக்கத்தின்படியே ஒருநான் வீடுவீடாகச் சென்று பலகாரம் விற்கப் புறப்பட்டான். எனினும் அன்று நெடுநேரமாகியும் அவனால் ஒன்றையும் விற்க முடியவில்லை. மிகவும் களைப்படைந்த அதே வேளை தாகத்தால் அவனது நாவறண்டு பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்தது. ஆகவே அவன் பக்கத்தில் இருந்த ஒரு வீட்டிற்குச் சென்று தன்னுடைய தாகத்திற்கு தண்ணீர் கேட்க நினைத்தவனாய் கதவைத் தட்ட ஆரம்பித்தான்.

கதவைத் திறந்துகொண்டு வீட்டின் உள்ளேயிருந்து வந்த ஒரு இளம்பெண் அவனை நோக்கி: “ தம்பி உனக்கு என்ன வேண்டும்” எனக் கேட்டாள். உடனே அவன் “எனக்கு தாகமாய் இருக்கிறது. குடிப்பதற்கு தண்ணீர் தருவீர்களா” என மெல்லிய குரலில் கெஞ்சிக் கேட்டான்.

அவன் மிகவும் களைத்துப் போயிருப்பதைக் கண்ட அந்த இளம்பெண் உள்ளே சென்று ஒரு டம்ளர் நிறைய குடிப்பதற்கு பால் எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தாள். பசியோடு இருந்தவன். அந்தப் பால் டம்ளரை கையில் ஏந்தியவனாக: “ இதற்கு நான் எவ்வளவு தரவேண்டும்” எனக் கேட்டான்.

அவனது இக் கேள்வியினால் மெய் சிலிர்த்த அவள் “ சிறுவனே நீ எனக்கு ஒன்றும் தர வேண்டியதில்லை” என பாசத்தோடு கூறிளாள். அவனோ “ இல்லை யாரிடமும் இலவசமாக ஒன்றும் வாங்கக் கூடாது என என்னுடைய தாயார் எனக்கு கற்பித்திருக்கின்றார்கள். ஏனக்கூற அவளோ “ பரவாயில்லை இதை என்னுடைய அன்பளிப்பாக ஏற்றுக்கொள்” எனக் கூறினாள். அவனும் அதைப் புன்னகையுடன் ஏற்றக்கொண்டவனாக பாலைப்பருக ஆரம்பித்தான். அவன் பாலைப் பருகி முடித்ததும் “நன்றி!” என்ற வார்ததைகயைத் தன் உள்ளத்தின் ஆழத்திலிருந்து அவளுக்கு கூறிவிட்டு புறப்பட்டான்.

அன்று அந்த சிறுவனின் பசிக்கு பால் கொடுத்தது உதவிய அந்தப் பெண்ணுக்கு மறுபடியும் அந்தச் சிறுவனைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. காலங்கள் உருண்டோடிட அந்தப் பெண் தன் வீட்டில் தனியாகவே வாழ்ந்து வந்தாள். வருடங்கள் பல கழிந்தது. இப்போது முதிர்வயதில் அவள் மிகவும் பலவினமானக இருந்தாள்.

ஒரு நாள் திடீரென மிகவும் சுகவீனமுற்ற அவள் கிராம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாள். அவளுக்கு என்ன வியாதி என்பதை டாக்டர்களால் கண்டுபிடிக்க முடியாதிருந்தது. அதனால் அவள் நகரிலிருந்த ஒரு பெரிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாள். அங்கு அவளது வியாதியை கண்டறிய டாக்டர் ஹவார்ட் என்பவரின் உதவி நாடப்பட்டது.

டாக்டர் ஹவார்ட தன்னிடம் அனுப்பப்பட்ட அந்த வயதான நோயாளியின் பெயரையும் அவளது ஊரையும் கேட்டபோது அவரது கண்கள் ஆச்சரியத்தினால் விரிய ஆரம்பித்தது. அவரது மனத்திரையில் கடந்த கால் நினைவுகள் ஒரு நிழற்படமாக ஓட ஆரம்பித்தது. ஆம் அவள் வேறு யாருமல்ல தான் ஒரு சிறுவனாய் இருந்த போது தன் பசிக்க பால் கொடுத்த தயாள சிந்தையுள்ள பெண்மணியே அவள் என்பதை அவர் அறிந்து கொண்டார். அந்தக் கணத்தில் தானே அவர் தான் யார் என்பதைக் காடிக்கொள்ள விரும்பாதவராக அவளது வியாதி என்ன என்பதை குறித்து ஆராய்ந்து மிகுந்த கரிசனையுடன் நேரமெடுத்து அவளுக்கு அவர் தகுந்த வைத்தியம் செய்ய ஆரம்பித்தார். அதுமட்டுமன்றி தனக்கு ஓய்வு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர் அவளை வந்து பாரத்துவிட்டுச் செல்வார். இப்படி அந்த டாக்டரின் சிகிச்சையினாலும் கடவுளின் கிருபையினாலும் சில மாதங்களிலேயே அவள் பூரண சுகமடைந்து தன் வீடு திரும்ப ஆயத்தமானாள்.அவள் வீடு திரும்புமுன் வைத்தியசாலைக்கு அவள் செலுத்தவேண்டிய பில் அவளுக்குக் கொடுக்கப்பட்டது. தான் தன் இறுதி நாட்களுக்காக சேர்தது வைத்திருந்த பணம் அதற்குப் போதுமானதாக இருக்குமோ அல்லது வசித்து வந்த தன்னுடைய சொந்த வீட்டையும் விற்க வேண்டிய நிலை ஏற்படுமோ என எண்ணியவளாக நடுக்கத்துடன் அதை வாங்கி அவள் பிரிக்க ஆரம்பித்தாள். அவளது கைகளில் கொடுக்கப்பட்ட அந்தப் பற்றுச்சுpட்டின் கடைசி வரிகளில் எழுதப்பட்டிருந்த வார்ததைகள் அவளது கவனத்தை ஈர்த்தது.

“ ஒரு டம்ளர் பாலுக்கு நன்றியாக முழுத்தொகையும் செலுத்தப்பட்டாயிற்று இப்படிக்கு அன்புடன் டாக்டர் ஹவார்ட்”

அவளது கண்களில் கண்ணீர் வழிந்தோடிட அவள் ஆண்டவரே மனிதர்களுக்கு காட்டிடும் தயவினால் நீர் உமது அளவற்ற அன்பை எமக்கு வெளிக்காட்டுவதற்காக நன்றி என தன் உள்ளத்த்தால் ஆண்டவருக்கு நன்றியைச் சொன்னாள்.“ ஒரு டம்ளர் பாலுக்கு நன்றியாக முழுத்தொகையும் செலுத்தப்பட்டாயிற்று இப்படிக்கு அன்புடன் டாக்டர் ஹவார்ட்”

வேதாகமத்திலே இப்படியாக ஒரு வசனம் காணப்படுகிறது.” உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள் மேல் போடு அநேக காலத்தின் பின்பு அதின் பலனைக்காண்பாய்” (பிரசங்கி 11:1). ஆம் நாம் பிரதிபலனை எதிர்பாராது மற்றவர்களுக்காகச் செய்யும் நன்மையானது நாம் சற்றும் எதிர்பாராத நேரத்தில் நமக்கோ அல்லது நமது அன்புக்குரியவரகளுக்கோ திரும்பவும் கிடைக்கும். ஒரு வேளை அது திரும்பக் கிடைக்காது போனாலும் கூட இந்த வேதனை நிறைந்த உலகத்திற்கு நாம் ஒரு நன்மை செய்யக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சி அடைவோமாக. இதற்காகவே நாம் சிருஸ்டிக்கப்பட்டிருக்கின்றோம்.

‘ஏனெனில் நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஸ்டிக்கப்பட்டு தேவனுடைய செய்கையாயிருக்கின்றோம். அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம் பண்ணியிருக்கின்றார்.(எபெசியர் 2:10)

இயேசு என் பக்கம்


‘தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?(ரோமர் 8:31)

நீ மாத்திரம் தனியே உல்லாசப் பிரயாணம் போகமுடியாது” என்று தனது தங்கையிடம் கூறினான் மோகன். ‘ நீ மிகவும் சிறு பெண் பேசாமல் வீட்டிலேயே இரு’ என்று ஏளனமும் செய்தான். அதனால் அவனுடைய சிறு தங்கை அழ ஆரம்பித்தாள். தன்னுடைய தந்தையாரிடம் ஓடி அப்பா அண்ணன் சொல்கிறான் உல்லாசப் பிரயாணம் போக முடீயாதாம். நான் சிறு பெண்ணாம் என்று அழுதாள்.

அதற்கு அப்பா நீ அண்ணாவிடம் சொல் உல்லாசப்பிரயாணம் போவதா இல்லையா என்பதை அவன் தீர்மானிக் வேண்டியதில்லை. நான் தான் தீர்மானிக்க வேண்டும். என்று நீ உல்லாசப் பிரயாணம் போக வேண்டுமென்று நான் விரும்புகிறேன் என்று கூறினார்.இதைக் கேட்டவுடன் சிறுமிக்கு வந்த மகிழ்ச்சிக்க அளவேயில்லை. மோகனைப் பற்றி அவள் கவலைப்படவே இல்லை.

ஏனென்றால் அப்பா அவள் பக்கம் என்று அவளுக்கு நன்றாக புரிந்துவிட்டது. அண்ணா அப்பா சொல்லிவிட்டார் நான் போகலாமென்று நீ இனி ஒன்றும் செய்ய முடியாது என்று மோகனிடம் தைரியமாகக் கூறினாள்.

இதே போல்தான் பவுல் என்ற தேவனுடைய மனுதர் தேவனைப்பற்றி கூறும்போது ‘தேவன் என்னோடு கூட இருக்கும் போது நான் ஏன் பயப்படவேண்டும். என்று கேட்டார். சில வேளையில் மனிதர்கள் எம்மை விரோதிக்கலாம். அவர்கள் எம்மைப் பகைத்து எமக்கு தீங்கு செய்யவும் முனையலாம். ஆனால் எல்லாவற்றையும் விட சாத்தானோ நாம் இயேசு சுவாமிக்குள் சந்தோசமாக இருப்பதை விரும்பாதவனாகவே இருக்கின்றான்.ஆனால் இயேசு சுவாமி எம்மை நேசிக்கிறார். எமக்காக மரித்தார் எமக்காக இயேசு சுவாமி தம்முடைய உயிரையே பலியாகக் கொடுத்திருக்கும் போது மற்றக் காரியங்களை நிச்சயம் கொடாமலிருப்பாரா?இயேசு சுவாமி தன்னுடைய உயிரையே எமக்காக கொடுத்ததால் அவர் எவ்வளவாக நம்மை நேசிக்கிறார். ஆம் அவர் எம் பக்கம் இருக்கிறார். ஆகவே நம்மை யார் தோற்கடிக்க முடியும்? ஒருவராலும் முடியாது.ஆம் அன்பான நண்பர்களே இயேசு நம்மோடு இருக்கவே விரும்புகிறார். ஆனால் நாம் அவருக்கு இடங்கொடுத்தால் தானே அவர் நம் பக்கம் இருக்க முடியும். நீங்கள் உங்கள் உள்ளத்தை அவருக்கு கொடுத்துள்ளீர்களா? நீங்கள் அப்படி கொடுத்திருந்தால் அவர் உங்கள் பக்கம் இருப்பார். உங்களை விரோதிப்பவர்களை அல்லது சாத்தானைக் கண்டு நீங்கள் பயப்படாதீர்கள்.!உங்களுக்காக தமது உயிரையே கொடுத்த அவர் நிச்சயம் உங்களுக்காய் எதையும் செய்ய தயாராகவே இருப்பார். இன்றே அவரை உங்களுடையவராய் ஆக்கிக் கொள்ளுங்கள். இயேசு சுவாமி உங்கள் பாதுகாப்பாய் இருக்க இன்றே ஜெபியுங்கள்.

மூன்று பதில்கள்



அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான். நான் அவனுக்கு மறு உத்தரவு அருளிச் செய்வேன் ( சங்கிதம் 91 : 15 )


ஓவ்வொரு நாளும் இரவு ஜெபத்தின்போது ராஜா வேண்டிக்கொண்ட ஒரு காரியம் ஆண்டவரே இம்முறை பிறந்த நாள் அன்று எனக்கு எப்படியாவது ஒரு சைக்கிள் பரிசாக கிடைக்கவேண்டும் என்பதுதான்.

ஆனால் ராஜாவின் பெற்றோரோ எழைகள் எனினும் அவனது அப்பா அம்முறை அவனுக்கு ஒரு சைக்கிள் வாங்கிக்கொடுக்க விரும்பினார். ஆனாலும் அவனது பிறந்த நாள் நெருங்கியபோது அவரிடத்தில் போதியளவு பணம் இருக்கவில்லை.

எனவே, ராஜா இயேசு சுவாமியை நம்ப மாட்டான் என கவலையுற்றாhர். இவ்வளவு நாட்க்களாக அவன் கடுமையாக ஜெபித்தான். ஆகவே சைக்கிள் இல்லாவிட்டால் ராஜா இனி இயேசுவை நேசிக்கமாட்டான் என நினைத்தார்.

பிறந்த நாள் அன்று அப்பா ராஜாவைப்பார்த்து ” என்னால் உனக்கு சைக்கிள் வாங்கித்தர முடியவில்லை, என்னிடம் போதியளவு பணம் இருக்கவில்லை. அதற்காக ஆண்டவர் மீது கோபப்படாதே” என்றார். துக்கத்தோடு ராஜா என்ன பதில் சொல்லியிருப்பான் தெரியுமா?

‘அப்பா ஆண்டவர் என் ஜெபத்திற்கு பதில் கொடுத்து விட்டார்.’ அப்பாவிற்கு ஆச்சரியமாய் இருந்தது ‘அப்படியா’ என்றார்.

‘ஆம் அப்பா அதாவது எப்போது எனக்கு சைக்கிள் அவசியப்படுகிறதோ? அப்பொழுது அதை அவர் தந்தருள்வார். என நினைக்கிறேன்.’ ஏன்றான். இதைக்கேட்டதும். ராஜாவின் அப்பாவிற்க்கு மகிழ்ச்சியாயிருந்தது. அவன் தேவனை அருமையாய் புரிந்து கொண்டதையிட்டு அவர் மகிழ்ச்சியடைந்நதார்.

ஆம் அன்று ராஜா அருமையான பாடத்தை கற்றுக்கொண்டான்.

ஆண்டவர் எப்பொழுதும் எம் ஜெபத்திற்க்கு ஆம் என்று மாத்திரம் சொல்லிக்கொண்டிருக்கமாட்டார். நாம் வேண்டிக்கொள்ளும் சில காரியங்கள் சில வேளை நமக்கு கூடாததாக இருக்கலாம். அவர் எல்லாவற்றையும் முன்னதாக அறிந்திருப்பதனால், நமக்கு தீங்கு விளைவிக்கும் காரியங்களை அவர் தரமாட்டார். அவர் எம்மை நேசிக்கிறார்.

இயேசு சுவாமி எமது ஜெபத்திற்க்கு முன்று விதமாக பதில் அளிப்பார். ஓன்று ஆம் என்று பதில் அளிப்பார். அடுத்து இல்லை என்றும் பதில் அளிப்பார். மூன்றாவதாக இப்போது இல்லை காத்திரு என்றும் பதில் அளிப்பார்.ராஜாவைப்போல ‘இல்லை’ அல்லது காத்திரு என்று பரில் கூறும் போதுங்கூட நாம் அவர் எம்மை நேசிக்கிறார் என்று நம்பவேண்டும்.

இயேசு சுவாமி அவர்களின் பிள்ளைகளின் ஜெபத்தை எப்பொழுதும் கேட்;கிறார்.

அப்படி ஜெபிக்கும்போது, நான் உத்தரவு கொடுப்பேன். அல்லது பதில் கொடுப்பேன் என்று வேதத்தில் அவர் உறுதி மொழியும் கூறியிருக்கிறார். நாம் கேட்கிற எல்லா காரியங்களையும் கேட்ட உடனேயே அவர் கொடுத்து விடமாட்டார். அது எமக்கு அவசியமாகதாக இருந்தால் மட்டுமே அவசியமான நேரத்தில் கொடுப்பார்.

ஆம் நண்பர்களே! இயேசு சுவாமி எங்களுடைய ஜெபத்திற்க்கு பதில் கொடுக்கிறவராக இருக்கிறார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

நான் ஒரு நோயாளி!

பரம வைத்தியராம் என் ஆண்டவரிடம் என்னை பரிசோதிக்கும்படி ஒரு மருத்துவப் பரிசோதனைக்காகச் சென்றேன். பரிசோதனை பெறுபேறுகளிலிருந்து நான் நோய் வாய்ப்பட்டிருப்பது அறிந்துகொண்டேன்.
  • அவர் என் இரத்த அழுத்தத்தை சோதித்த போதுஅதில் அன்பு மிகவும் குறைந்திருப்பது தெரியவந்தது.
  • அவர் என் உடல் வெப்பநிலையை அளந்த போதுஅதில் என் கவலை 40  டிகிரியாக உயர்ந்திருந்தது.
  • அவர் என் எலும்புகளை பரிசோதித்த போதுஅவைகள் பொறாமையினாலும் கசப்பினாலும் உலர்ந்துபோயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
  • அவர் என் கண்களை சோசித்தபோது.அவைகள் கடவுளின் வார்த்தையை கேட்கமுடியாதபடிஎன் செவிகள் மந்தமாயிருப்பது புலனாயிற்று.

இந்த மருத்துவ சோதனைக்காக அவர் என்னிடம் பணம் எதும் வாங்க வில்லை. இலவசமாய் சேவை செய்த என் ஆண்டவரின் அளவற்ற கருணையை நான் என்னவென்பேன்?

என் நோய் சீக்கிரமே குணமடையும்படி அவர் தமது சத்திய வார்த்தையின் படியே நடக்கும் படியாக என்னைக் கேட்டுக் கொண்டார்.

அதன் படி தினமும் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் நிறைய நன்றியுணர்வை அருந்தி, வேலைக்கு போகும் முன் ஒரு கரண்டி சமாதானத்தை அருந்தி, வேலை நேரத்தில் மணிக்கு ஒரு தடவை பொறுமை என்னும் மாத்திரையை சகோதரத்துவமும் தாழ்மையும் கலந்த நீருடன் பருகி, மாலையில் வீடு திரும்பும்போது ஒரு டம்ளர் நிறைய அன்பை பருகி, இரவு படுக்கைக்கு போகு முன் குற்றமற்ற உள்ளமெனும் மாத்திரையை ஜெபத்துடன் உட்கொண்டால் சீக்கிரமே என் பலவீனம் நீங்கி சகமடைவாய் என்றார். புரம வைத்தியரான இயேசு..
…சரி நீங்களும் அந்த பரம வைத்தியரை அணுகி பார்க்கலாமே!

உன்னைத்தான்…


.தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்க்கு வரவளைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததியாயியும்….. ( 1 பேதுரு 2 : 9 )

நாம் மகிழ்ச்சியாயிருப்பதை இந்த உலகமொ உலகத்தின் அதிபதியோ விரும்புவதில்லை. மகிழ்ச்சியுற வேண்டியவற்றை நாம் சிந்திக்காதபடி பாரங்களை ஏற்றி நம்மை துக்கத்தில் ஆழ்த்துவதுதான் இவ்வுலகத்தின் தந்திரம். நாமும் அநியாயமாக அதற்க்குள் மாண்டுபோகிறோம். வாழ்நாட்க்களை வீணடிக்கிறோம்.

ஒரு பிரசித்திபெற்ற மேடையில் தாலந்துகளுக்கான போட்டி நடந்தது. ஆடம்பரமான பல போட்டியாளர்கள் மேடையேறி மக்கை ஆச்சரியத்தில் மூழ்கடித்தனர். அந்த வரிசையிலே ஒரு பெண் எறினாள். மண்டபத்திலே “ஊஊஊ” என்ற ஒரு சத்தம். இவளால் என்ன செய்யமுடியும் என்ற பரிகாசம்தான். ஆனால்அவள் ஒலிபெருக்கியை கையில் எடுத்து உதட்டருகே கொண்டு சென்றுபோது அந்த பிரமாண்டமான மண்டபமே அமைதியானது. இப்படி ஒரு குரலா? எல்லோரும் இருக்கையை விட்டு எழுந்து விட்டனர். கரகோஷம் வானைப்பிளந்தது. மத்தியஸ்தர்களும் அசைந்துவிட்டனர். ²இவளால் முடியாதே² என்று நினைக்த்தக்க இந்த எளிமையான பெண்ணின் வாயிலிருந்து இப்படியொரு அற்புத பாடலா? 2009 ம் பிரித்தானியாவில் நடந்த உண்மை சம்பவம் இது.

நீங்களும் நானும்கூட மிக எளியவர்கள் தான். உலகம் எங்களை கண்டிராது. குடும்பத்திலும் நம்மை கணக்கெடுக்காதிருக்கலாம். இவையெல்லாம் கிறிஸ்துவின் அழகு நம்மில் ஊற்றெடுத்துப் பாயும் வரைக்கும்தான் அந்த அழகு மாத்திரம் நம்மில் தெரியுமானால் இந்த உலகம் தன் முக்கில் விரல் வைக்கும். அப்படித்தான் தேவன் நம்மை திட்டமிட்டிருக்கிறார். நாம் வாழ்வு என்னும் மேடையில் நிற்கிறோம். நமது குடும்பத்தார் நண்பர்கள் சபை மக்கள் நம்மை அற்பமாய் நினைக்கிறவர்கள். யாவருக்கும் முன்னிலையில் நாம் நிற்கிறோம். இவனா! இவளா! இவனைப்பற்றி எனக்குத் தெரியாதா? இவளின் கடந்த கால நாற்றம் தெரியாதா? இப்படியாக எத்தனையெல்லாம் பேசுவார்கள். ஆனால் கிறிஸ்துவின் அன்பும் கிருபையும் நமது வாழ்விலிருந்து புறப்பட்டு பாயும் போது நிச்சயமாய் இந்த உலகமே எழுந்து நிற்கும். பேதுரு எழுதியவார்த்தைகள் எவ்வளவு மகத்தானவை. நம்மில் வெளிப்படுகின்ற கிறிஸ்துவின் அழகு ஜோடிக்கப்பட்டதல்ல. அது வாழ்வின் அனுபவம் இயேசு கிருபையாய் என்னை துக்கிவிட்ட அனுபவம் ஏராளமான அறிவாளிகள் மத்தியில் தமது புண்ணியங்களை அறிவிக்க தெரிந்தெடுத்தாரே அந்த கிருபையின் அனுபவம் எளியவர்களாகிய நம்மைத் தமது சன்னிதானத்தில் ராஜரீக ஆசாரியக் கூட்டமாக்கினாரே அந்த அனுபவம் இந்த கிருபை ஒன்றே போதுமே வாழ் நாள் முழுவதும் நாம் மகிழ்ச்சியாயிருக்க!



“பிதாவே உமது மகத்துவங்களை அறிவிக்க நீர் என்னையா தெரிந்தெடுத்தீர். இதை நினையாமற் போனேன். என்னை ஆட்கொள்ளும் ஜயா ஆமென்.”

உள்ளபடியே ஏற்றுக்கொள்வார்.

நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால்…. நம்மை சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.  ( 1யோவான் 1 : 9 ) 

ஒரு மண்டபத்திலே ஒரு வேலையை முடிப்பதற்காகக் காத்திருந்தனர். அங்கே அழகான ஒரு குழந்தை அழகிய வர்ணமுள்ள சட்டை அணிந்தவளாக அங்கிருக்கும் ஒவ்வொருவரிடமும் சென்று விளையாடிக்கொண்டிருந்தாள். ஆனால் ஒரு குறிப்பிட்ட பெண் மாத்திரம், அக் குழந்தை அவளிடம் செல்லும் போது அக்குழந்தையை கவனிக்காமல் இருந்தாள். அப்பொழுது அங்கிருந்த அனைவரும் ஒரு அழகான குழந்தையோடு இவளுக்கு விளையாடக்கூடத் தெரியவில்லை. மிகவும் கல்நெஞ்சக்காரிபோலும் என்று பேசிக்கொண்டு தொடர்ந்து அக் குழந்தையோடு அனைரும் விளையாடினர். சிறிது நேரத்தில் அக்குழந்தையில் இருந்து ஏதோ துர்நாற்றம் வருவதை அனைவரும் உணர்ந்து கொண்டதால், அக்குழந்தையை அருவருப்போடு விரட்டத் தொடங்கினர். குழந்தையோ இவ்வளவு நேரமும் தன்னோடு சந்தோஷமாக விளையாடிக்கொண்டிருந்த ஒவ்வொருவரிடமும் மாறி மாறிச் சென்றது. அனைவரும் கவனியாது விரட்டியடித்தனர். கடைசியில் அக்குழந்தை தன்னை முதலில் கவனியாதுவிட்ட பெண்ணிடம் அழுதுகொண்டு சென்றது. அப்பொழுது அப்பெண் குழந்தையை அன்போடு வாரி அணைத்துக்கொண்டாள். பிள்ளையை துக்கிச்சென்று அதன் நாற்றத்தை கழுவி அதற்குப் புது உடை அணிவித்து மீண்டும் அனைவரும் விரும்பும் அழகான குழந்தையாக்கினாள். அப்பொழுதுதான் தாம் கல்நெஞ்சக்காரி என்று யாரை நினைத்தார்களோ! அவளே அக்குழந்தையின் தாய் என்பதை அங்கிருந்தோர் உணர்ந்து கொண்டனர்.

எமது வெளித்தோற்றமாகிய அழகு, அந்தஸ்து, படிப்பு, பணம், வசதி, திறமைகள் போன்றவற்றைப் பார்த்து பிறர் எம்மீது மதிப்பும், கரிசனையும், விருப்பும் காட்டலாம். இவைகளெல்லாம் எம்மை விட்டு எடுபடும்போது சமுதாயத்தில் எம் மதிப்பு குறைந்து போகலாம். ஆனால் எம்மை உள்ளபடியே, நாம் இருக்கும் நிலையிலேயே, பாவமும் அக்கிரமமும் நிறைந்து நாறிப்போய் இருக்கும் உள்ளத்துடனேயே எம்மை எற்றுக்கொண்டு தன் தூய ரத்தத்தால் எம்மை கழுவி, எம்மை தம் பிள்ளையாக்கி நித்தியமான வாழ்வை எமக்கு தர ஆண்டவரால் மாத்திரமே முடியும். என்னையும் உங்களையும் உள்ளபடியே எற்றுக்கொடாரல்லவோ. இப்படிப்பட்ட உன்னதமான இரட்சிப்பை அவர் முலமாய் பெற்றுக்கொண்ட நாம் ஏனோதானோ என்று எந்தவிதமான அர்ப்பணமும் நோக்கமும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? அவருக்காக நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? எமது ஜீவிய காலமெல்லாம் அவருக்கே சேவை செய்ய எம்மை இன்றே அவர் பாதத்தில் ஒப்புக்கொடுப்போமா.

கிறிஸ்தவத்தில் இருக்கும் கிறிஸ்து


இந்தியாவின் பிரபல கிறிஸ்தவ பணியாளரான சாது சுந்தர்சிங் என்பார், இந்து மதக் கல்லூரியொன்றுக்கு விஜயம் செய்தபோது, உலக மதங்கள் பற்றிய பாடத்திற்கான விரிவுரையாளர் ஒருவர் அவரிடம், “உமது பழைய மதத்தில் இல்லாத எதனை நீர் கிறிஸ்தவத்தில் கண்டு கொண்டீர்? எனக் கேட்டபோது, “அங்கு கிறிஸ்து இருக்கிறார்“ என்று பதிலளித்தார்

சாது சுந்தர்சிங்கின் பதிலைக் கேட்ட அவ்விரிவுரையாளர், “அது எனக்குத் தெரியும். முன்னர் உம்மிடம் இல்லாத அல்லது நீர் அறியாதிருந்த எதனை கிறிஸ்தவத்தில் கண்டீர்? எனக் கேட்டார்.“கிறிஸ்வத்தில் நான் கண்டு கொண்டது இயேசுகிறிஸ்துவையே“ என சாதுசுந்தர் சிங் பதிலளித்தார்.
இயேசுகிறிஸ்து உலக மதங்கள் அனைத்திலும் இருக்கிறார் எனக் கருதும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வரும் இக்காலத்தில் சாது சுந்தர்சிங்கின் அனுபவரீதியான பதில், கிறிஸ்வத்தில் மட்டுமே இயேசுகிறிஸ்து இருக்கிறார் எனும் உண்மையை உறுதிப்படுத்துகிறது. 
“நான் கர்த்தர் இது என் நாமம். என் மகிமையை வேறொருவனுக்கும் என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்“. (ஏசா. 42:8) எனத் தெரிவித்துள்ள தேவன், விக்கிரக வழிபாடுகளுள்ள மதங்களில் எல்லாம் தன்னைப் பற்றி வெளிப்படுத்தியுள்ளார் எனக் கூறுவது உண்மைக்கு முரணாகவே இருக்கும் என்பதை நாம் ஒருபோதும் மறக்கலாகாது. 

ஜான் என்ற ஒரு சிறுவனின் அனுபவம்


ஜான் எவருக்கும் கட்டுப்படாத ஒரு சிறுவன் தன் தாய்க்கும் கிழ்ப்படியாமல் தன் விருப்பம் போல திரிந்தான். அவனது தாயோ அவளுடைய எல்லா பிள்ளைகளும் இரட்சிக்கப்படவேண்டும். இயேசுவின் பிள்ளைகள் ஆகவேண்டும் என்று இடைவிடாமல் ஜெபித்து வந்தாள். இது அந்தத் தாய் தன் விசுவாசம் தேவனுடைய வாக்குத்தத்ததை ஆதாரமாக கொண்டது என்று கூறினாள். தேவன் இரட்சிப்பு அவளுக்கு மட்டுமல்ல அவளுடைய வீட்டார் அனைவருக்கும் உண்டு என்று வாக்களித்தார். அந்த தாய் மரித்து சுமார் ஜந்து வருடங்களின் கடந்த பின் ஒரு ஜெபக்கூட்டத்தில் ஜான் எழுந்து நின்று என் அம்மாவின் இடைவிடாத ஜெபத்தின் பலனாக இன்று நான் இயேசுவின் பிள்ளையாக மாறிவிட்டேன். அவரது
இரட்சிப்பும் ஆசீர்வாதமும் எனக்கு கிடைத்திருக்கிறது.என்று சாட்சி கூறினான்.

நாமும் உலக மாந்தர் அனைவரும் இரட்சிக்கப்பட இடைவிடாது ஜெபிப்போம். நம் ஜெபத்தின் பயனாக ஒரு ஆத்துமாவேனும் ஆண்டவரை அறிந்து கொண்டால் இவ்வுலகில் நம்மை பிளைக்கச்செய்யும் இறைவனுக்கு நாம் செய்யும் நன்றிக்கடனாக இருக்கும். 

தீமைக்கு நன்மை செய்யப்பழகுவோம்


ஒரு தேவஊழியன் தான் தங்கியிருந்த கிராம மக்கள் மத்தியிலே நன் மதிப்பை பெற்றிருந்தார். யாவரும் அவரை நேசித்தனர். எந்தவொரு சிறு விடயமானாலும் அவரை நாடிப் போவார்கள். இதைக் கண்டு பொறாமை கொண்டனர் சிலர். ஊழியருக்கு விரோதமாக திட்டம் போட்டனர். அது ஊழியருக்கு தெரியவந்தது. தங்களது திட்டம் தெரிந்து அவர் ஓடி ஒளிந்திடுவார் என்று எண்ணினர். ஆனால் அந்த ஊழியரோ அவர்களேயே தேடிப் போனார். அவர்கள் எதிர்பார்த்திராததால் ஆச்சரியத்தில் வாயடைத்துப்போயினர். ஊழியர் அவர்களுடன் அமர்ந்து, தான் கொண்டுவந்த அன்புப் பரிசுகளையெல்லாம் அவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்து; உங்கள் நாலுபேருக்கும் ஒரு கம்பனியில் வேலைக்கு ஒழுங்கு செய்திருக்கிறேன். நாளைக்கே போய் வேலையில் சேர்ந்து கொள்ளுங்கள் என்றார். அவர்களோ வெட்கித் தலைகுனிந்தனர்.

அன்பான நண்பர்களே, நாம் தேவகரத்தில் இருக்கிறோம் என்ற உறுதி நமக்கு இருக்குமானால் நமக்கு எதிரே வருகிற எந்தத் தீங்குக்கும் நாம் பயப்படத்தேவையில்லை. மெய்யாகவே அவை நமக்குத் தீங்காகவே மாறாலாம். ஆனாலும் தேவன் நிர்ணயிக்காத எதுவும் நம்மை அணுகவே முடியாது. ஆகவே, கர்த்தருக்குள் வாழ்வது மெய்யானால் நாம் எதற்கும் பின்னடையத் தேவையில்லை.  நம்மை எதிர்கொள்ளும் தீமையை, நமது நல்நடத்தை பின்னடையச் செய்யவேண்டும். அங்கே ஆண்டவர் மகிமைப்படுவார்.                ஆமென்

இறைவன் நல்லவர்


கர்த்தரை துதியுங்கள் அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது, என்று பக்தன் சங்கிதம் 118 : 01 

இல் கூறுகின்றான். இதிலிருந்து ஒரு உண்மை புலப்படுகின்றது என்னவென்றால் அவர் நல்லவர் ஆனபடியினால் அவரை துதியுங்கள் என்று சொல்லப்படவில்லை அவரை துதியுங்கள் அவர் நல்லவர் என்று உறுதிபட கூறுகின்றார். எனனில் அவர் எப்பொழுதுமே எல்லோருக்கும் அவர் நல்லவர் சில வேளைகளில் நமக்கு எற்ப்படும் அசாதாரணமான சூழ்நிலைகள் இறைவன் நல்லவரா?.... என்று நம்மை சிந்திக்க துண்டும் அப்படியான வேளைகளிலும் இறைவன் நல்லவரே… என நான் உறுதிப்பட கூறுகின்றேன். அதற்கு சில காரணங்களை முன் வைக்கின்றேன்.

1. எல்லா உயிரினங்களையும் இறைவனே படைத்தார். ஆனால் மனிதனை விஷேசித்த விதமாக தமது சாயலாக படைத்தார் ஆகவே அவர் நல்லவர் அவனை சிந்திக்கும் படியாக சிறந்தவற்றை தெரிவு செய்யும் படியாக நிறைவான ஆற்றலை அவனுக்கு கொடுத்தார். ஆகவே அவர் நல்லவர். அதுமட்டுமல்லாது இப்பூமியில் உனக்கு எற்படும் அசாதாரணமான சூழ்நிலையின் போது நான் நல்லவரா? என சோதித்தறிவதை விட்டு விட்டு என்னை நோக்கி கூப்பிடு நான் உனக்கு மறு உத்தரவு கொடுப்பேன் எனக்கூறியிருக்கின்றாரே (அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான். நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன். ஆபத்தில் நானே அவனோடிருந்து அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன். சங் 91 : 15 )

ஆகவே அவர் நல்லவர். இவை எல்லாவற்றுக்கும் மேலாக தம் ஜீவனை நமக்காக தந்து பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து நம்மை மீட்டெடுத்து நம்மோடு நித்தமும் உறவாட காத்திருக்கிறாரே… ஆகவே அவர் மிகவும் மிகவும் நல்லவர்

ஆகவே நமக்கு நம்முடைய வாழ்வில் எப்பேற்பட்ட காரியமாக இருந்தாலும் இறைவன் நல்லவர் என்பதை நம் நினைவில் நிறுத்தி வாழக்கற்றுக்கொண்டால் அவர் நமக்கு எப்பொழுதும் மிகவும் மிகவும் நல்லவர்.
ஆகவே கர்த்தரை துதியுங்கள் அவர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது.

கடவுள் தந்த Anti Virus


கணணியில் காணப்படும் கிருமிகளை அழிப்பதற்க்கு பயன்படுத்தப்படும் கிருமி கொல்லிகள் Avg, Avira, Kaspersky போன்றன, கிருமிகொல்லிகள் இல்லாமல் அதே உத்வேகத்துடன் கணணியை இயக்குவது என்பது இயலாத காரியம் எனனில் எதோ ஒரு வகையில் கிருமிகள் கணணியை தாக்கி செயல் இழக்கச் செய்து விடும் ஆகவே, கணணிகளில் கிருமிகொல்லிகள் அத்தியாவசியமானவை எனவே கணணி செயல் இழக்காமல் தொடர்ந்து அதே உத்வேகத்துடன் இயங்க வேண்டுமானால் கிருமி கொல்லிகளை நமது கணணியில் செலுத்தி தினமும் அதை UPDATE செய்ய வேண்டும் அப்போழுது நமது கணணி செயல் இழக்காமல் தொடர்ந்து அதே வேகத்துடன் தொடர்ந்து இயங்கும் இதே போன்று நமது உடலில் காணப்படும் கடவுள் விரும்பாத அல்லது விருப்பபடாத கிருமிகளை ( களவு, பொய்சொல்லுதல், புறம்கூறுதல், கடவுளுடைய கற்ப்பனைகளுக்கு விரோதமாக நடத்தல் ) அழிப்பதற்க்கு தேவன் தந்த கிருமி கொல்லி பரிசுத்த வேதாகமம் 

இது எவ்வாறு கிருமிகளை அழிக்கிறது 

முதலாவது நாம் பரிசுத்த வேதாகமத்தை நம் உடலில் செலுத்த வேண்டும் எப்படி செலுத்துவது அதை முழுமையாக வாசிக்கிற போது படிப்படியாக நம் உடலில் உட்சென்று அது கிரிகை செய்ய ஆரம்பிக்கும் படிப்படியாக நம் உடலில் காணப்படும் வேண்டாத அல்லது கடவுள் விருப்பபடாத செயல் இருக்குமானால் உடனே சுட்டிக்காட்டும் நாம் உடனே அதனை Delete செய்ய வேண்டும் அல்லது இல்லாதொழிக்க வேண்டும் தினமும் இவ்வேலையை செய்வோமானால் நம் வாழ்வு மிகவும் சந்தோஷமாக இருக்கும் அதுமட்டுமல்லாமல் நீங்கள் படிப்படியாக கிருமிகளை உடல் அல்லது உள்ளத்திலிருந்து அழித்து முற்றிலுமாக கிருமிகளை அழித்து விடும் போது நீங்கள் சுத்தமானவர்களாக மாறுகின்றீர்கள். நான் சுத்தமாக மாறிவிட்டேன் என எண்ணிக்கொண்டு வேதாகமத்தை வாசிக்காமல் இருக்க கூடாது அதை தினமும் UPDATE செய்ய வேண்டும் நீங்கள் அவ்வாறு செய்யாவிடில் வேதாகமம் மறந்துவிடும் பிறகு உங்கள் உடலில் காணப்படும் கிருமிகளை அழிப்பதற்க்கு சக்தி இல்லாமல் போய்விடும் எனவே நீங்கள் இவ்வாறு தொடர்ந்து செய்யும் போது இறைவன் உங்களில் செயல்படுவார் உங்களில் செயலாற்றுவார் நீங்கள் வேண்டிக்கொள்வது நிறைவேறும் உங்களில் இறைவன் அசைவாடுவதை அனேகர் கண்டு கொள்வார்கள். எனவே, பயனுள்ள பரிசுத்த வேதாகமத்தை பயன்படுத்தாமல் இருக்காமல் பயன்படுத்தி மேற்க்கண்ட நன்மைகளை அனுபவியுங்கள். 

Related Posts Plugin for WordPress, Blogger...