கணணியில் காணப்படும் கிருமிகளை அழிப்பதற்க்கு பயன்படுத்தப்படும் கிருமி கொல்லிகள் Avg, Avira, Kaspersky போன்றன, கிருமிகொல்லிகள் இல்லாமல் அதே உத்வேகத்துடன் கணணியை இயக்குவது என்பது இயலாத காரியம் எனனில் எதோ ஒரு வகையில் கிருமிகள் கணணியை தாக்கி செயல் இழக்கச் செய்து விடும் ஆகவே, கணணிகளில் கிருமிகொல்லிகள் அத்தியாவசியமானவை எனவே கணணி செயல் இழக்காமல் தொடர்ந்து அதே உத்வேகத்துடன் இயங்க வேண்டுமானால் கிருமி கொல்லிகளை நமது கணணியில் செலுத்தி தினமும் அதை UPDATE செய்ய வேண்டும் அப்போழுது நமது கணணி செயல் இழக்காமல் தொடர்ந்து அதே வேகத்துடன் தொடர்ந்து இயங்கும் இதே போன்று நமது உடலில் காணப்படும் கடவுள் விரும்பாத அல்லது விருப்பபடாத கிருமிகளை ( களவு, பொய்சொல்லுதல், புறம்கூறுதல், கடவுளுடைய கற்ப்பனைகளுக்கு விரோதமாக நடத்தல் ) அழிப்பதற்க்கு தேவன் தந்த கிருமி கொல்லி பரிசுத்த வேதாகமம்
இது எவ்வாறு கிருமிகளை அழிக்கிறது
முதலாவது நாம் பரிசுத்த வேதாகமத்தை நம் உடலில் செலுத்த வேண்டும் எப்படி செலுத்துவது அதை முழுமையாக வாசிக்கிற போது படிப்படியாக நம் உடலில் உட்சென்று அது கிரிகை செய்ய ஆரம்பிக்கும் படிப்படியாக நம் உடலில் காணப்படும் வேண்டாத அல்லது கடவுள் விருப்பபடாத செயல் இருக்குமானால் உடனே சுட்டிக்காட்டும் நாம் உடனே அதனை Delete செய்ய வேண்டும் அல்லது இல்லாதொழிக்க வேண்டும் தினமும் இவ்வேலையை செய்வோமானால் நம் வாழ்வு மிகவும் சந்தோஷமாக இருக்கும் அதுமட்டுமல்லாமல் நீங்கள் படிப்படியாக கிருமிகளை உடல் அல்லது உள்ளத்திலிருந்து அழித்து முற்றிலுமாக கிருமிகளை அழித்து விடும் போது நீங்கள் சுத்தமானவர்களாக மாறுகின்றீர்கள். நான் சுத்தமாக மாறிவிட்டேன் என எண்ணிக்கொண்டு வேதாகமத்தை வாசிக்காமல் இருக்க கூடாது அதை தினமும் UPDATE செய்ய வேண்டும் நீங்கள் அவ்வாறு செய்யாவிடில் வேதாகமம் மறந்துவிடும் பிறகு உங்கள் உடலில் காணப்படும் கிருமிகளை அழிப்பதற்க்கு சக்தி இல்லாமல் போய்விடும் எனவே நீங்கள் இவ்வாறு தொடர்ந்து செய்யும் போது இறைவன் உங்களில் செயல்படுவார் உங்களில் செயலாற்றுவார் நீங்கள் வேண்டிக்கொள்வது நிறைவேறும் உங்களில் இறைவன் அசைவாடுவதை அனேகர் கண்டு கொள்வார்கள். எனவே, பயனுள்ள பரிசுத்த வேதாகமத்தை பயன்படுத்தாமல் இருக்காமல் பயன்படுத்தி மேற்க்கண்ட நன்மைகளை அனுபவியுங்கள்.
No comments:
Post a Comment