கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Tuesday 3 March 2015

அந்நியரை உபசரிப்போம்.

அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள், அதினாலே சிலர் அறியாமல் தேவதுதரையும் உபசரித்ததுண்டு – ( எபிரேயர் 13 :23 )

அன்று கடும் குளிரான இரவு, ஜெர்மன் தேசத்தில் வாழ்ந்த கன்ராடும் அவர் மனைவி உருசுலாவும் தங்களது ஒரே மகன் மரித்தினால் மிகவும் துக்கத்தோடு அந்த குளிரான அரவைக் கழித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அந்த இரவின் அமைதியைக் கிழித்துகொண்டு ஒரு சிறுவன் பாடும் குரல் கேட்டது.  அந்த கடும் குளிரையும் பொருட்படுத்தாது அவன் பாட்டுப் பாடி பிச்சையெடுத்துக்கொண்டிருந்தான். அவன் பாடுவதை கேட்ட அந்தத்தம்பதியினர், அந்த அழகிய குரலைக் கொண்ட ஒரு சிறுவன், இக்கடும் குளிரில் பாடிக்கொண்டு செல்கின்றானே என பரிதாபப்பட்டு கதவை திறந்தனர். அவன் குளிரில் நடுங்குவதைக் கண்டு, அச்சிறுவனை தங்கள் வீட்டிற்குள் அழைத்தனர். கந்தைகளையும் அழுக்குத் துணிகளையும் அணிந்து, குளிரில் நடுங்குவதைக் கண்டு, அச்சிறுவனை தங்கள் வீட்டிற்குள் அழைத்தனர். கந்தைகளையும் அழுக்குத் துணிகளையும் அணிந்து, குளிரில் நடுங்கியபடி இருந்த அவனை அனலான இடத்தில் கொண்டுவந்து, தங்கள் மரித்த மகனின் உடைகளை அணியச் செய்து, சாப்பிட ஆகாரமும் கொடுத்தார்கள்.

சாப்பிடும்போது அச்சிறுவன், தனது தந்தை மிகவும் வறுமையில் வாடுவதாக கூறினான். ஒரு உடையையோ உணவையோ கொடுக்க இயலாத நிலையில் அவரது பெற்றோர் இருந்தனர். இதைக் கேட்ட அந்த அந்த தம்பதியினரின் இருதயம் நெகிழ்த்தது. தங்கள் மகனின் படுக்கையில் படுக்க வைத்தனர். அவன் துங்கிய பிறகு அவர்கள் தங்களது மரித்த மகனுக்கு பதிலாக அச்சிறுவனை தத்தெடுப்பது என்று முடிவு செய்தனர்.

அடுத்த நாள் காலையில் அச்சிறுவன் எழுந்தபோது, தங்கள் விருப்பத்தை தெருவித்தனர். அந்தச் சிறுவன் மிகவும் சந்தோப்ஷபட்டு சம்மதித்து, அவர்களோடேயே தங்கினான். அவனை படிக்க வைத்தனர். அவன் பின் நாட்களில் ஒரு மிகப்பெரிய போதகராக மாறினான். அவர் வேறு யாருமில்லை, சீர்திருத்தவாதியாக உலகத்தையே கலக்கிய மார்ட்டின் லுத்தரே ஆவார்.

பசியாயிருந்தேன்; எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள். தாகமாயிருந்தேன்; என் தாகத்தைத் தீர்த்தீர்கள். அந்நியனாயிருந்தேன்; என்னைச் சேர்த்துக் கொண்டீர்கள். மிகவும் சிறியவராகிய என் சகோதரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். என இயேசு சுவாமி கூறியுள்ளார் ( மத்தேயு 25 : 35 – 40 )

இன்று நமக்கு செய்ய திராணியிருக்கம்போது செய்யத்தக்கவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்யவேண்டும். அதுதான் கர்த்தருடைய பார்வையில் பிரியமாயிருக்கும். பரலோகத்தில் உரிய பலன் கிடைக்கும். பிறரின் அத்தியாவசிய தேவைகளில் நாம் அவர்களுக்கு உதவி செய்யும் போது, அவர்களின் இருதயம் நன்றியுடன் தேவனை துதிக்கும். அப்பொழுது அதன் ஆசீர்வாதம் என்றென்றும் நிலைத்து நிற்கும்.  

Related Posts Plugin for WordPress, Blogger...