கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Sunday 26 August 2012

உனக்காக மரித்தார்.

ஆபிரகாம்லிங்கன் அமெரிக்க ஜக்கிய நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது நீக்ரோக்களை அதிகமாக நேசித்து அவர்கள் மீதிருந்த அடிமைதனத்தின் நுகத்தை முறிப்பதற்க்கு பாடுபட்டார். அடிமை வியாபாரத்தை ஒழிக்கும்படி அவர் சட்டத்தையும் இயற்றினார். இதனால் அவருக்கு என்ன நடந்தது தெரியுமா? ஒரு தீயவனின் துப்பாக்கி குண்டுக்கு பலியானார். குண்டு பாய்ந்த அவர் உயிரற்ற சடலம் அவரின் சொந்த ஊரான எலினா என்னுமிடத்திற்;கு திறந்த வண்டி மூலம் கொண்டு வரப்பட்டது. ஆயிரம் ஆயிரமாம் மக்கள் தங்கள் தலைவனுக்கு கடைசி அஞ்சலி செலுத்தினார்கள். அப்பொழுது ஒரு நீக்ரோ மாது, ஆபிரகாம்லிங்கனின் இறுதிக் கிரிகைகளை காண அவ்விடத்திற்க்கு விரைந்து வந்தாள். ஆனால் ஜனக்கூட்டமோ மிக அதிகமாய் நெருங்கிக் கொண்டிருந்தது.

அப்பொழுது அவள் தன் மகனைக் கையினால் பிடித்து ஜனக்கூட்டத்திற்க்கு மேலாக உயர்த்தி “ மகனே பார் நன்றாக பார் அவர் உனக்காக மரித்தார்” என்று கதறிக்கொண்டு.



“நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே தேவன் நம்மேல் வைத்த அன்பை விளங்கப்பண்ணினார்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...