கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Thursday 26 December 2013

வேறு யாருக்காகவும் அல்ல....! உங்களுக்காக...

இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். என்று தேவ தூதன் இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தான். 

அதில் என்ன சந்தோஷம் இருக்கிறது….. சிந்தியுங்கள்..

நாம் நினைத்தது நமக்கு நடந்து விட்டால் அது நமக்கு சந்தோஷமான செய்தி நாம் நினைத்த தலைவர் இலக்ஷனில் ஜெயித்து விட்டால் அது அந்த ஊருக்கு சந்தோஷமான செய்தி சிறப்பான தலைவர் நாட்டுக்கு அமைந்து விட்டால் முழு நாட்டுக்குமே அது சந்தோஷமான செய்தி ஆனால்! எல்லா ஜனத்திற்கும் சந்தோஷமான செய்தி எது என்று நினைக்கீர்கள்? ஆம் சந்தோஷமா செய்தி கர்த்தராகிய கிறிஸ்து உங்களுக்காக பிறந்ததுதான். அதில் என்ன சந்தொஷம் இருக்கிறது…என்று யோசிக்க வைக்கிறதல்லவா!......

முதலாவது…………….

பரிசுத்த வேதாகமத்திலே 1 திமோத்தேயு 6 : 16,17 ம் வசனங்கள் இப்படி கூறுகின்றன.. அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும், ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர். என்று கூறுகின்றன. இந்த இறைவன்; மாம்சத்தில் வெளிப்பட்டார். என்று 1 திமோத்தேயு 3 : 16 கூறுகின்றது எதற்கு அவர் வெளிப்பட்டார் என்று ஆராய்கிற பொழுது கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார். 
ஆம் அன்பானவர்களே.. அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே. ஆகவே காணக்கூடாத இறைவன் நாம் காணும் படியாக வந்து மட்டுமல்லாமல் நாம் கண்டுபிடிக்க தக்க துரத்தில் இருக்கிறார். என்பது எவ்வளவு சந்தோஷமா செய்தி பாருங்கள்.

இரண்டாவது காரியம்……………..

நாம் பாவிகளாய் இருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே தேவன் நம்மேல் வைத்த அன்பை விளங்கப்பண்ணினார். என்று வேதாகமம் கூறுகின்றது. உண்மையிலே நாம் பிழைசெய்கின்றவர்கள். கடவுள் முன்நிற்க தகுதி அற்றவர்கள்.என்பது உண்மை இதை அறிந்த இறைவன் தம்முடைய சாயலில் படைக்கப்பட்ட எந்த பிள்ளையும் கெட்டுப்போகாமல் மனம் திரும்ப வேண்டும் என்பதற்காக தம் சொந்த குமாரன் மேல் நம் குற்றங்களை சுமத்தி நம்மை பாவம் இல்லாத புது மனிதனாக மாற்றி கடவுள் முன்னிலையில் பிழையில்லாத பிள்ளைகளாக நிலை நிறுத்துவதற்கு அவர் மனிதனாக வந்தார். இதை விட இந்த உலகில் மிகவும் சந்தோஷமான செய்தி உண்டா? 

அதுமட்டுமல்லாமல்!.........................

  • அவர் உங்களை அதிகமாக நேசிக்கிறார். ஆகவேதான் தன் உயிரையும் உங்களுக்காக தர பிறந்தார்.
  • அவர் உங்களோடு நடக்க  அவதரித்தார்.  
  • அவர் உங்களோடு பேச உறவாட அவதரித்தார்.  
  • அன்றய யூதர்கள் போல இன்று நீங்களும் உங்கள் இருதயத்தை கடினப்படுத்தி அவரை வரவேற்க்க ஆயத்தமில்லாதவர்களாய் இருக்க போகின்றீர்களா? அல்லது ஆட்டு மேய்ப்பர்கள் போல் அவரை சந்திக்க உங்களை ஆயத்தப்படுப்போகிறீர்களா?............. சிந்தியுங்கள்! 
இன்று ஆண்டவர் உங்களுக்கு அவரை தரிசிக்க அவரை சேவிக்க சந்தர்ப்பம் தருகிறார். அடுத்த வருடம் இதே சந்தர்ப்பம் கிடைக்குமா என்பது ஆண்டவருடைய கரங்களிலே தங்கி உள்ளது. ஆகவே கிடைக்கும் சந்தர்ப்பத்தை உங்களுக்கு சாதகமாக பயன்படு;த்திக்கொள்ளுங்கள். 

உங்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Tuesday 26 November 2013

அனுதினமும் காண்கிற இறைவன்.

மனுஷருடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது அவனுடைய வழிகளெல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார். -  நீதிமொழிகள். 5:21

ஒரு மனிதனும் அவருடைய சிறிய மகனும் நடமாட்டம் அதிகமில்லாத தெருவில் சென்றுக் கொண்டிருந்தார்கள். போகும்போது ஒரு தங்க செயின் தரையில் மினுமினுப்பதை அந்த மனிதர் கண்டார். முன்னால் போன யாரோ அதைத் தவறவிட்டார்கள் என்பதை அறிந்தும்,  ( தங்கம் விற்கிற விலையில் இதுக் கிடைத்ததே லாபம் என்று எண்ணினார் போலும்!) அந்த செயினை அந்த மனிதர் எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டார். சுற்றிலும் முற்றிலும் பார்த்தபோது யாரும் இல்லாததைக் கண்ட அவர் சட்டென்று அந்த செயினைத் தூக்கி தன் பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டார். 
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவருடைய மகன், 'அப்பா, நீங்க சுற்றிலும் பார்த்தீர்களே தவிர மேலே பார்க்கவில்லையே' என்றுக் கூறினான்.

அவன் சொன்னதைக் கேட்ட அந்த தந்தைக்கு ஞானம் வந்தது.  வெட்கமுற்றவராய்,
'ஆம் மகனே, நம் ஆண்டவர் பார்க்கிறார் என்பதை நான் மறந்துப் போனேன்' என்றுச் சொல்லி பக்கத்திலிருந்த போலீஸ் ஸ்டேசனில் போய் அதை ஒப்படைத்தார். 
 

வேதம் சொல்கிறது, கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து,நல்லோரையும் தீயோரையும் நோக்கிப்பார்க்கிறது என்று (நீதிமொழிகள் 15:3). அவருடைய கண்கள் நாம் செய்கிற நல்லவற்றையும் தீயவற்றையும் பார்த்துக்கொண்டே இருக்கிறது. இந்த எண்ணம் ஒன்று நம் உள்ளத்தில் இருந்தால் போதும், நாம் தவறே செய்ய மாட்டோம். அவருடைய கண்கள் மனுஷருடைய வழிகளை நோக்கியிருக்கிறது; அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார்.  அக்கிரமக்காரர் ஒளித்துக்கொள்ளத்தக்க அந்தகாரமுமில்லை, மரண இருளுமில்லை (யோபு 34:21,22).

அக்கிரமக்காரர் அவருக்கு மறைவாக ஒன்றுமே செய்ய முடியாது. நாம் செய்கிற பாவங்கள் மட்டுமல்ல, நாம் செய்கிற நன்மைகளும் அவர் தம் கணக்கில் வைத்துள்ளார். எபிரேயரில் ஒரு 
அருமையான வசனம் இருக்ல்றது 'ஏனென்றால், உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியுஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவே' 
– எபிரேயர். 6:10.

அவர் அநீதியள்ள தேவன் அல்ல. உங்கள் கிரியைகளின் பலனை அவர் நிச்சயம் உங்களுக்கு 
தருவார். ஆகவே நன்மை செய்வதில் நாம் சோர்ந்து போக வேண்டாம். தம்மைப்பற்றி உத்தமஇருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது ( 2நாளாகமம். 16:9 )  தீயவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் அவருடைய வல்லமை விளங்குவதில்லை. அவரை உத்தம இருதயத்தோடு தேடுகிறவர்களுக்கு அவர் வல்லமையை விளங்கப் பண்ணுவார். உலாவுகிற அவருடைய கண்கள், அவரை நோக்கிக் கூப்பிடுகிற தம்முடைய ஜனத்தின் தேவைகளை காண்கிறது. உடனே அவருடைய வல்லமையை அனுப்பி தேவைகளை சநதிக்கிறார். எப்படிப்பட்ட நல்ல தேவன் நம் தேவன்! 
 
அதேசமயம் அவருடைய கண்கள் தீயோரையும் பார்க்கிறது. கிறிஸ்தவர்களுக்கு இழைக்கப்படும் துன்பங்களையும் கஷ்டங்களையும் பார்த்துக் கொண்டே இருக்கிறது. ஒரு நாள் அதற்கு பதில் உண்டு. ஆகவே நாம் செய்கிற நன்மைகளையும் தீமைகளையும் பார்க்கிற தேவன் உண்டு என்பதை நாம் ஒருநாளும் மறக்கக்கூடாது. ஒருநாள் கணக்கொப்புவிக்க வேண்டிய காலம் வரும்போது நாம் வெட்கப்பட்டு நிற்க வேண்டிய நிலைமை வரும், ஆகவே நன்மையானவைகளையே செய்வோம். கர்த்தருடைய நாமத்திறகு மகிமை கொண்டு வருவோம் ஆமென். 

 

     

Monday 23 September 2013

மிகுந்த அன்புடையவர்

'ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை'. - (ஏசாயா 49:15).


இரண்டு மகன்களுக்கு ஒரு தகப்பன இருந்தான்.; அவன் மிகுந்த ஆஸ்தி உள்ளவனாக காணப்பட்டான். அவனிடம் ஏராளமான சொத்துக்கள் இருந்தன.. இதனால் அவனுடைய வாழ்க்கையில் எந்த விதமான குறைவும் காணப்படவில்லை.. இருந்தும் அவனிடம் எராளமான சொத்துக்கள் காணப்பட்ட போதும் அவனுடைய இரண்டு பிள்ளைகளையும் கட்டுக்கோப்புடன் வளர்த்து வந்தான். இப்படியாக காலங்கள் உருண்டோடின… ஒரு நாள் அவனுடைய இரண்டாவது மகன் தகப்பனுடைய கட்டுப்பாடு பிடிக்காமல்…தந்தையே உம்முடைய கட்டுப்பாடு எனக்கு பிடிக்கவில்லை.. நான் சுதந்திரமாக வாழ விரும்புகின்றேன்.. எனவே சொத்தில் எனக்கு சேர வேண்டியதை பிரித்து தாருங்கள் எனக்கேட்டான்.. 

அந்த தகப்பனோ..! மகனின் அறியாமையை நினைத்து வருந்தியவராக.. மகன் கேட்டத்தை கொடுத்தார். அவனும் பெருமையுடன் சொத்தை வேண்டி கொண்டு துர தேசத்திற்கு சென்று துன்மார்க்கமாய் பணத்தை செலவழித்து மிகவும் கஷ்டமான நிலைக்கு செல்லல் ஆனால்.. ஒரு நாள் மனம் வருந்தியவனாக தகப்பனை நோக்கி புறப்பட்டு வந்தான்.. துரத்திலே தன் மகன் வருகிறதை கண்ட தகப்பன். அவனை கட்டி அணைத்து முத்தமிட்டு அவனை தன்னோடு சேர்த்துக்கொண்டார்.. மகனோ.. அப்பா நான் உங்கள் பிள்ளை இல்லை உங்கள் கட்டுப்பாட்டை மிறி பிழையான வழியிலே நடந்து விட்டேன்.. என்னை உங்கள் மகன் என்று சொல்லாதீர்கள்.. என்று மனம் நொந்து அழுதான்.

அந்த தகப்பனோ.. மனனே நீ எப்போதும் என் மகன் தான் காரணம் என் சாயலில் நீ இருக்கிறாய்.. உன்மேல் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.. எப்போதும் நீ என்னுடையவன் தான் .என்றார்

வேதம் சொல்கிறது; 'ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல்; தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும்; நான் உன்னை மறப்பதில்லை' என்று. நம் தேவன் அந்த தாயிலும் மேலான அன்புள்ளவர். அவர் ஒருபோதும் நம்மை மறப்பதில்லை. 

அவர் நம் மேல் வைத்த அன்பு குறைவதில்லை. உலகத்தில் யார் நம்மை கைவிட்டாலும் நம்மை கைவிடாத தேவன் ஒருவர் உண்டு. நான் உங்களை திக்கற்றவர்களாய் விடேன் என்று வாக்குதத்தம் செய்தவர் நம்மை ஒரு நாளும் திக்கற்றவர்களாய் விடவே மாட்டார். தாயினும் தந்தையினும் நம் மேல் அதிகமாய் அன்பு கூர்ந்து; நம்மை அணைத்து கொள்வார். நம் கண்ணீரை துடைப்பார். என் தகப்பன் எங்களைவிட்டு மரித்து போனபோதும்; என் தாய் என்னை விட்டு கடந்து போன போதிலும்; என் தேவன் என்னை கைவிடாமல்; என் வாஞ்சைகளை அறிந்து; என் தேவைகளை சந்தித்து; என்னை கரம் பிடித்து என்னை வழிநடத்தின தேவன் இன்றும் மாறாதவராயிருக்கிறார். திக்கற்ற பிள்ளைகளுக்கு அவரே தகப்பன் என்ற வசனத்தின்படி அவரே தகப்பனாக தாயாக இருந்து வழிநடத்தி வருகிறார்.
.
ஒருவேளை நீங்கள் நினைக்கிறீர்களோ; எனக்கு யாரும் இல்லை; என் தகப்பனும் என் தாயும் என்னை கைவிட்டார்கள் என்று? 'என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும்; கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்'(சங்கீதம் 27:10) என்று தாவீது சொல்வது போல நம் நம்பியிருக்கிற அனைவரும் நம்மை கைவிட்டாலும் நம் தேவன் நம்மை கைவிடமாட்டார். அவர் நம்மை சேர்த்து கொள்வார். மனம் தளர்ந்து போகாதிருங்கள். யாருமே எனக்கு இல்லையே என்ற அங்கலாய்ப்பு வேண்டாம். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின சர்வவல்லமையுள்ள தேவன் உங்களுக்கு தகப்பனாக இருந்து உங்களை தாங்குவார்; உங்களை தேற்றுவார்; உங்களை ஆற்றுவார்; உங்களை விசாரிப்பார். என்னை தேற்றி வழிநடத்தின தேவன் உங்களையும் தேற்றி; உங்கள் கண்ணீரையும் துடைப்பார். அவருடைய அன்பில் மூழ்கி; அவரை நாமும் நேசிப்போமா? அவர் நம்மை அன்புகூர்ந்தபடி நாமும் அவரில் அன்புகூருவோமா?

Tuesday 6 August 2013

செயலிலும் இயேசுவை காட்டுதல்

...நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு. - (1தீமோத்தேயு 4:12).

ஒரு கிறிஸ்தவ மனிதர் வழமையாக அன்றய நாளுக்கான சமயலுக்கு தேவையான பொருட்களை வேண்டுவதற்காக சந்தைக்கு சென்றார். ஆங்கு சென்ற போது தனக்கு தெரிந்த இன்னுமொரு கிறிஸ்த நண்பரை சந்திக்க நேர்ந்தது அப்பொழுது இருவரும் தங்களுடைய கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். இவ்வாறு கருத்துக்களை பரிமாறிக்கொண்டிருக்கும்போது கடவுளின் அன்பைக்குறித்தும் பேசினார்கள். அச்சந்தர்ப்பத்தில் திடிர் என ஒரு வாகன விபத்து நேரிட்டது. இதை கண்ட அவ் கிறிஸ்தவ நண்பர் ஒடிச்சென்று விபத்துக்குள்ளான மனிதர்களை வைத்தியசாலைக்கு ஏற்றும் வேலைகளில் மும்முரமாக இடுபட்டார். இதை அவதானிக்கொண்டிருந்த கிறிஸ்த மனிதர் அவ் கிறிஸ்தவ நண்பரை பார்த்து உமக்கு ஏன் இந்த தலை வலி என்று கேட்டார். அதற்கு அவ் கிறிஸ்தவ நண்பர் கிறிஸ்துவின் அன்பை பேச்சில் அல்ல செயலில் காட்ட வேண்டும் என கடிந்து கொண்டார். இதை கேட்டவுடன் அவ் கிறிஸ்தவ மனிதர் தன் பிழையை உணர்ந்து கொண்டார். 

அநேக கிறிஸ்தவர்கள் அவர்களை பேச சொன்னாலும். ஜெபிக்க சொன்னாலும் உலகமே அதிசயிக்கும் வண்ணம் பேசுவார்கள். ஜெபிப்பார்கள். ஆனால் அவர்களுடைய வாழ்க்கையை பார்க்கும்போது, அவர்கள் சொல்வதற்கும். ஜெபிப்பதற்கும் அவர்களுடைய வாழ்க்கைக்கும் சம்பந்தமே இருக்காது.
.
கிறிஸ்துவை நாம் பிரதிபலிக்காதவரை நாம் மற்றவர்களுக்கு கிறிஸ்துவைப் பற்றி சொல்கிற காரியங்கள் எல்லாம் வீணாகவே இருக்கும். மற்றவர்கள் 'எப்படி பேசினான் பார், ஆனால் மற்றவர்களை மன்னிக்க முடியவில்லை, மற்றவர்களுக்கு சிறிய உதவிக்கூட செய்ய முடியவில்லை' என்று பேசுவார்கள்.
.
'மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது' (மத்தேயு 5:16) என்று இயேசுகிறிஸ்து கூறினார். ஆனால் அநேகர் நமககுள் இருக்கிற கிறிஸ்துவாகிய ஒளியை காண்பிப்பதற்கு பதிலாக நம்மையே அல்லது நம்முடைய ஜென்ம சுபாவத்தையே காண்பித்து கொண்டிருக்கிறோம்.
.
'ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புது சிருஷ்டியாயிருக்கிறான். பழையவை ஒழிந்து போயின எல்லாம் புதிதாயின' என்று வேதம் கூறுகிறது. ஆனாலும் நாம் நம்முடைய பழைய சுபாவங்களையே வெளிப்படுத்திக் கொண்டிருந்தால் கிறிஸ்து நமக்குள் இல்லை என்பதே அர்த்தமாகும்.
.
கிறிஸ்தவர் ஒவ்வொருவருமே மற்றவர்கள் வாசிக்கும் வேதம் என்று கூறுவார்கள். நாம் எப்படி செயல்படுகிறோம் என்பதை பொறுத்தே மற்றவர்கள் இவர்கள் கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவை உடையவர்கள் என்று தீர்மானிப்பார்கள்.

Thursday 4 April 2013

தேவன் நம் நிழலாயிருக்கிறார்


உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான். ( சங்கீதம் 91 : 01 )

ஒரு நாள் காலையில் தாயும் மகனுமாக சந்தைக்கு போனார்கள். சந்தையில் தங்கள் அனுவல்கள் எல்லாம் முடித்து விட்டு திரும்பும் போது சந்தையின் அருகில் பெருங்கூட்டம் நிற்பதை கண்டு என்னவென்று பார்ப்பதற்காக கூட்டத்தினுள் நுாளைந்தனர்.

அப்பொழுது அங்கே மகுடியை வைத்துக்கொண்டு ஒரு மனிதர் ஊதிக்கொண்டிருந்தார். அவ் மகுடியின் சத்தத்திற்கு ஏற்ப அங்கே ஒரு பாம்பு தலையசைத்து ஆடிக்கொண்டிருந்தது. அவ் மனிதர் அவ் மகுடி ஊதுவதை நிறுத்தியதும் அப்பாம்பு சீறி அவர் மேல் பாய எத்தணிக்கும் அவர் சற்றும் பயமில்லாமல் அவ்பாம்மை அவ்மகுடியால் தட்டி விட்டு மீண்டும் ஊதுவார். சற்று நேரம் கழிந்த பின்னர். அங்கே நின்ற அச்சிறுவன் ”இப்பாம்பு சீறி உங்களை கொத்த பாக்குதே ஜயா உங்களுக்கு பயம் இல்லாயா? ” என்று கேட்டான். அதற்கு அவ் பாம்பாட்டி அச்சிறுவனிடம் இப்பாம்பு பல்லு பிடுங்கபட்டு விட்டது. நாம் இதை பார்த்து பயப்படத் தேவையில்லை. என்று கூறினான்.

அப்படித்தான் நம் வாழ்விலும் பிசாசு வந்து சிலவேளைகளில் பயமுறுத்திப் பார்க்கிறான். ஆனால் அவன் தலையை கிறிஸ்து இயேசு சிலுவையில் நசுக்கி விட்டார். அவன் தோற்றுப் போனவன். 'தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள், ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்' - யாக்கோபு. 5:8 என்றுப் பார்க்கிறோம். எந்த சிங்கமாவது விழுங்குவதைப் பார்த்திருக்கிறீர்களா? சிங்கம் என்றால் கடித்துச் சாப்பிடுமே ஒழிய விழுங்காது. பிசாசானவன் விழுங்கலாமோ என்று சுற்றித்திரிகிறான் ஏனென்றால்; அவன் பல் பிடுங்கப்பட்ட சிங்கம். அவன் தலையை நம் இயேசுகிறிஸ்து சிலுவையிலே நசுக்கிவிட்டார். அவன் கெர்ச்சித்து பயமுறுத்துவானே ஒழிய அவனால் ஒன்றும் செய்ய முடியாது.

அவன் உங்கள் வாழ்க்கையில் கெர்சிக்கிற சிங்கத்தைப் போல பயமுறுத்தலாம், ஆனால் அதைக் கண்டு பயந்து விடாதீர்கள். உங்கள் வேலை இடத்தில், உங்கள் அனுதின வாழ்க்கையில், அவன் பல தந்திர வேலைகளைச் செய்யலாம். ஆனால் பயப்படாதிருங்கள். உங்களுக்கு விரோதமாக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகும். நீங்கள் கர்த்தரை சார்ந்து ஜீவிப்பீர்களானால், உங்களுக்கு எதிராக கூட்டங் கூடினவர்கள் உங்கள் பட்சத்தில் வருவார்கள். தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாய் நிற்பவன் யார்?உங்கள் வேலையிடங்களில், உண்மையாய் வேலை செய்யுங்கள், கடினமாய் உழையுங்கள். உங்கள் அதிகாரிகள் பார்க்க வேண்டும் என்று வேலை செய்யாமல் கர்த்தர் பார்க்கிறார் என்று வேலை செய்யுங்கள். கர்த்தர் உங்கள் பட்சத்தில் இருப்பதைக் காண்பீர்கள். 

ஜெபம்: 

எங்களை நேசிக்கும் நல்ல தகப்பனே, சத்துரு எங்களை விழுங்க வகைத்தேடும்போது எங்களை உம்முடைய மறைவிடத்தில் வைத்து காப்பவரே உம்மை துதிக்கிறோம். நீர் எங்கள் பட்சத்தில் இருக்கும்போது எங்களுக்கு விரோதமாய் இருப்பவன் யார் ஆண்டவரே! உங்களை தொடுபவன் என் கண் மணியைத் தொடுகிறான் என்றுச் சொல்லி எங்களை உம்முடைய கண்ணின் மணிப்போல காப்பவரே உம்மைத் துதிக்கிறோம். எங்கள் துதிகளை உம்முடைய நாமத்திற்கே ஏறெடுக்கிறோம் நல்ல தகப்பனே. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.


Sunday 31 March 2013

அவசரம் வேண்டாம்!... காத்திருங்கள்

'நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்'

(நீதிமொழிகள் 13:12)


ஒரு நாள் கி‌ராம சேவகர் மரநடுகை தினத்தை முன்னிட்டு அக்கிராம மக்கள் அனைவரையும் அழைத்து ஒவ்வொருக்கும் ஒருமரக்கன்று கொடுத்தார். அதை வீட்டில் நட்டு தினமும் அதை பராமரிக்குமாறும் கூறினார். ராஜா குடும்பத்திற்க்கும் ஒரு மாங்கன்று கொடுக்கப்பட்டது. அதை அவர்கள் வீட்டிற்கு பின்னாலுள்ள தோட்டத்தில் கவனமாக நாட்டினார்கள். வாரம் ஒரு முறை உரம் போட்டார்கள். தினமும் தவறாமல் தண்ணீர் ஊற்றினார்கள். காலை எழுந்தவுடன் அம்மரக்கன்று இலை விட்டுள்ளதா என தினமும் ஆராய்ச்சி செய்வார்கள்.மாதங்கள் உருண்டோடின. செடியில் பெரிதான மாற்றங்கள் காணாததினால் மிகவும் விரக்தி அடைந்தார்கள்.

நாம் எவ்வளவு கவனமாக வளர்த்தோம் அதை நட்டு எவ்வளவு மாதமாகி விட்டது. ஆனால் இந்த மாமரம் காய்க்கவே இல்லையே, இனி நான் இதற்கு தண்ணீர் ஊற்றப்போவதுமில்லை, உரம் போடப்போவதுமில்லை என்று புலம்பினார்கள்.

அப்போது அந்த வழியாக வந்த கிராம சேவகர் இவர்கள் கவலை அறிந்து விசாரித்தார். அவர்கள் தங்கள் நிலமையை எடுத்துக் கூறினார்கள் அப்பொழுது.  அவ் கிராம சேவகர் அவர்களை நோக்கி 'மாமரம் காய் காய்க்க பத்திலிருந்து பன்னிரெண்டு வருடம் ஆகும் ஆகவே, அதுவரை நாம் பொறுத்திருக்கத்தான் வேண்டும். ஒவ்வொன்றிற்கும் ஒரு காலமுண்டு' என கூறினார். அப்பொழுதான் அவர்களின் நிலை புரிந்தது.

நாமும் அநேக நேரங்களில் இவர்களைபோலவே எந்த ஒரு காரியத்திற்கும் பொறுத்திருக்க முடியாமல் அவசரப்படுகிறோம். நான் ஒழுங்காக வேதம் வாசிக்கிறேன், ஆலயம் செல்கிறேன், கர்த்தருக்கு பிரியமான வாழ்வு வாழ்கிறேன், ஆனால் இன்னும் என் ஜெபத்திற்கு பதில் வரவில்லையே, என அநேக நேரங்களில் அங்கலாய்க்கிறோம். இனி நான் ஜெபிக்க போவதே இல்லை, என்று கூட விரக்தியில் சொல்லலாம்.

ஆனால் வேதம் என்ன சொல்லுகின்றதென்று பாருங்கள், 'நீதிமானுக்காக வெளிச்சமும், மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது'. ஆம் தேவன் உங்களுக்குரிய நன்மைகளை முன்குறித்து விட்டார். அவற்றை நமக்கென்று விதைத்து விட்டார். அதை எவரும் தடை செய்ய முடியாது, ஆனால் அந்த மகிழ்சசி என்னும் விதை நமக்கு பலன் தரும் வரை நாம் பொறுமையோடு காத்திருக்க வேண்டும். வாக்குதத்தத்தின் பிள்ளையை பெற வாக்குதத்தம் பெற்ற பிறகும், ஆபிரகாம் 25வருடம் பொறுமையோடு காத்திருக்கவில்லையா? 'நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்' (நீதிமொழிகள் 13:12) என்று வேதம் கூறுகிறது. ஆம், நீங்கள் நெடுங்காலமாய் காத்திருக்கிறீர்கள் என்பதை தேவன் அறிவார். அதை அவர் ஏற்ற வேளையில் கொடுக்கும்போது நிச்சயமாகவே அது ஜீவ விருட்சத்தை போல நல்ல பலனை கொடுப்பதாக இருக்கும். அல்லேலூயா!
.
அப்படி காத்திருக்கும் காலம் நமக்கு விலையேறப்பெற்ற காலமாகும். அதில் நாம் தேவன் மேல் வைத்துள்ள அன்பின் ஆழத்தை அவர் கண்டு கொள்ள ஏதுவாகும். காத்திருக்கும் நாட்களில் சாத்தானுக்கு இடம் கொடுத்தோமானால் அவன் நம்மை இதை காரணம் காட்டியே தேவனை விட்டு பிரித்து விடுவான். ஆகவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
.
பிரியமானவர்களே, எவ்வளவு காலம் காத்திருப்பது என சோர்ந்து போகாதீர்கள், உங்களது ஜெபத்திற்கும் கண்ணீருக்கும், கிரியைக்கும் ஏற்ற காலம் வரும்போது, அத்தனை பலனையும் காண்பீர்கள். தேவ சமுகத்தில் விட்ட ஒரு சொட்டு கண்ணீரும் வீணாக போகாது. அவை சர்வ வல்ல தேவனுடைய கணக்கில் இருக்கிறது. ஆகவே இதுவரை நீதியாய் வாழ்ந்து என்ன பயன்? ஜெபித்து, கடவுளுக்கு பிரியமாய் வாழ்ந்து என்ன பயன்? என்று இருதயத்திலும் நினைக்காதீர்கள்.

நிச்சயமாகவே முடிவு உண்டு. உங்கள் நம்பிக்கை வீண் போகாது. ஆமென் அல்லேலூயா!

ஜெபம்

எங்கள் அன்பின் பரலோக தகப்பனே, இந்த நாளிலும், அநேக நாட்களாக காத்திருந்து, கர்த்தரிடத்திலிருந்து இன்னும் பதில் வரவில்லையே என்று சோர்வோடு இருக்கும் ஒவ்வொருவருக்காகவும் ஜெபிக்கிறோம் நிச்சயமாகவே ஒரு நாள் எங்கள் தேவன் எங்களுக்கு ஏற்ற பதிலை கொடுக்க போகிற தயவிற்காக நன்றி. எங்கள் நம்பிக்கையே நீர் தானையா, அந்த நம்பிக்கையை நாங்கள் இழந்து போகாதபடி, சீக்கிரமாய் நல்ல பதிலை கொடுத்து எங்களை ஆதரிக்கும்படியாக உம்மிடத்தில் மன்றாடுகிறோம். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Sunday 24 March 2013

நன்றியுள்ள இருதயம்

அப்பொழுது இயேசு: சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே? தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று சொல்லி, அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். - (லூக்கா 17: 17-19).
வியட்நாமில் நடந்த போரில், ஒரு இராணுவத்தலைவன் தன் கீழ் வேலைப் பார்த்த ஒரு சாதாரண போர் வீரனை காப்பாற்ற முயற்சிக்கும்போது, அவனை காப்பாற்றிவிட்டு, ஆனால் தான் காயப்பட்டு, அதன் காயங்களினால் அந்த இடத்திலேயே மரிக்க நேரிட்டது, அதைக் குறித்து அவருடைய பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டு, அவர்கள் அவரது நினைவாக ஒரு கூட்டத்தை ஆயத்தப்படுத்தி இருந்தார்கள். அப்போது அந்த கூட்டத்திற்கு அந்த போர்வீரனையும் அழைத்திருந்தார்கள்.
அந்த கூட்டத்திற்கு அந்த போர் வீரன் மிகவும் தாமதமாக வந்ததுமன்றி, நன்கு குடித்துவிட்டு வந்திருந்தான். அங்கிருந்த உணவு பொருட்களை அநாயசமாக சாப்பிட்டதுமன்றி, தன்னை காப்பாற்றிய அந்த தலைவனுக்கு தன் சார்பாக ஒரு நன்றியைக் கூட தெரிவிக்கவில்லை. மட்டுமல்ல, சாப்பிட்டு முடித்தவுடன், தன்னை அழைத்திருந்த அந்தக குடும்பத்திற்கு ஒரு நன்றியைக் கூட தெரிவிக்காமல், பேசாமல் போய் விட்டான். அவன் போனவுடனே, அந்த தலைவனின் தாயார் கதறி அழுது, ‘இந்த நன்றியில்லாத மனிதனுக்காகவா என் மகன் தன் ஜீவனைக் கொடுத்தான்’ என்று கதறினார்கள்.


இன்று நம்மில் எத்தனைப் பேர் அப்படி நன்றியில்லதவர்களாக இருக்கிறோம்? தேவன் நமக்கு பாராட்டிய கிருபைகள்தான் எத்தனை? அதை ஒரு முறையாவது நாம் நினைத்து அவரை துதிக்கிறோமா? பத்து குஷ்டரோகிகள் சுத்தமானாலும் ஒருவன் தான் திரும்ப வந்து அவருக்கு நன்றி சொன்னான். சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே?
தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பி வரக்காணோமே என்று இயேசுகிறிஸ்து சொன்னாரல்லவா?


தேவன் செய்த நன்மைகளை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிருப்போம். அவருக்கு நன்றியறிதலுள்ளவர்களாய் இருப்போம். நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தாரே! நாம் வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் அதிகமாய் நம்மை ஆசீர்வதித்திருக்கிறாரே! அவருக்கு நாம் எத்தனையாய் நன்றி சொல்ல வேண்டும்! ஒரு நிமிடம் ஒரு தாளை எடுத்து கர்த்தர் செய்த பத்து காரியங்களை எழுதி, அப்பா உமக்கு ஸ்தோத்திரம். எனக்கு இப்படி கிருபை பாராட்டினீரே என்று கூறுவோமானால், அவர் எத்தனை மகிழ்வார்?


நாம் யாருக்காவது ஒரு நன்மை செய்யும்போது அவர்கள் நமக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயற்கையானது. ஆனால் அவர்கள் நன்றி எதுவும் சொல்லாமல் போய் விட்டால், நாம் இந்த மனிதனுக்கு போய் செய்தோமே என்று நினைப்போமில்லையா? அதுப் போலத்தான் கர்த்தர் நமக்கு செய்த நன்மைகளுக்கு நாம் நன்றி சொல்லாமல் போனால், அவரும் அது போலத்தான் நினைப்பார். மற்ற நன்மைகளை அவர் தருவார் என்று நாம் எதிர்ப்பார்ப்பது எப்படி? நாம் அவரிடமிருந்து என்ன பெற்று கொண்டாலும் அதற்கு நன்றி சொல்ல பழகிக் கொள்வோம். இன்று, நாம் தேவன் செய்த நன்மைகளை மறப்பதினால்தான், வீண் பெருமை, அகந்தை நம்மை ஆட்கொள்கிறது. நாம் இருந்த நிலைமையிலேயே நாம் இன்று இல்லை. கர்த்தர் நம்மை நிச்சயமாக உயர்த்தியிருக்கிறார். நாம் இருந்த பழைய நிலைமையை மறக்கும்போதுதான், மற்றவர்களை காட்டிலும் நான் உயர்ந்தவன் என்று நம் மனம் பெருமை கொள்கிறது. ஆகையால் நாம் ஜெபிக்கும்போது, அப்பா, நீர் செய்த நன்மைகளை மறவாதிருக்கும் நன்றியுள்ள இருதயத்தை எனக்கு என்றும் தாரும் என்று ஜெபிக்க வேண்டும்.


நம்மோடு வேலை செய்கிற சகோதர சகோதரிகளுக்கு, ‘உங்களோடு நான் வேலை செய்வது எனக்கு சந்தோஷம், நன்றி’ என்று சொல்லிப் பாருங்கள், உங்கள் மேல் அவர்கள் வைத்திருக்கும் மதிப்பு உயரும். உங்கள் கணவர் அல்லது மனைவி செய்யும் காரியங்களுக்கு, என்மேல் கரிசனையாக செய்தாயே நன்றி’ என்றுச் சொல்லுங்கள். ‘இன்று சாப்பாடு பிரமாதமாக இருந்தது ‘Thank you’ என்று சொல்லுங்கள், அவர்கள் இன்னும் நன்றாக சமைத்து கொடுப்பார்கள். நன்றி என்று சொல்லுவோம். கர்த்தர் செய்த நன்மைகளை மறவாதிருப்போம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்;.


ஜெபம்: 
எங்களை நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, உம்மைத் துதிக்கிறோம். அப்பா நீர் செய்த நன்மைகளை மறவாதிருக்கும் நன்றி மறவா இருதயத்தை எங்களுக்கு எப்போதும் தாரும். நீர் எங்களுக்கு செய்த நன்மைகள் கோடா கோடி தகப்பனே, எப்படி நன்றி சொல்லுவோம்? உமக்கு நன்றி என்று இருதயத்தின் ஆழத்திலிருந்து சொல்கிறோம். எங்கள் வாழ்வில் ஒவ்வொரு நிமிடமும் நாங்கள் மூச்சு விடுவதுக் கூட உமது கிருபைதான் என்று உணர்ந்து, உமக்கு நன்றியாய் ஜீவிக்க உதவி செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Tuesday 19 March 2013

போதும் என்ற மனம்

என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை; ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்பதியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன். - (பிலிப்பியர் 4:11-12).

.ஒரு சிற்பி, ஒரு பெரிய கல்லை எடுத்து, அதில் உருவத்தை செதுக்க ஆரம்பித்தார். தலைக்கு மேலே சூரிய வெப்பம் அவரை தாக்கவே, 'சே, இது என்ன வாழ்க்கை, எப்போது பார்த்தாலும், இந்த வெயிலில் நின்று இந்த உளியை கையில் வைத்து செதுக்கி கொண்டே இருக்கிறேனே! எனக்கு வேறு நல்ல வேலையும், எளிதாக அதிகமாக சம்பளமும் கிடைத்தால் நன்றாக இருக்குமே' என்று நினைத்தார். அப்போது அந்த வழியாக அந்த நாட்டு ராஜா குதிரையில் வருவதை கண்டார். ஆ, இந்த ராஜாவை போல் தானிருந்தால் எத்தனை நலமாயிருக்கும் என்று எண்ணினார், என்ன ஆச்சரியம், உடனே அவர் ராஜாவாக மாறினார். அவர் குதிரையில் பயணித்து கொண்டிருந்தபோது, சூரிய வெப்பம் அவர் மேல் அதிகமாக பாய்ந்தபோது, இந்த சூரியன் தான் இந்த ராஜாவை விட பெரியது என்று நினைத்த மாத்திரத்தில், உடனே சூரியனாக மாறினார். அப்படி சூரியனாக பிரகாசித்து கொண்டிருந்தபோது, ஒரு மேகம் தோன்றி, பூமியின்மேல் மழையை பொழிந்தது. தண்ணீரை அடித்து கொண்டு போகிறபோது, ஒரு பெரிய கல்லை தவிர வேறு எல்லாவற்றையும் அது போகிற வழியில் அடித்து கொண்டு சென்றது. உடனே அந்த சிற்பி, ஆ, அந்த கல்தான் மிகவும் உறுதியானது, என்னவந்தாலும் அசையவில்லையே என்று நினைத்த மாத்திரத்தில் உடனே ஒரு பெரிய கல்லாக மாறினார்.

. அப்போது ஒரு சிற்பி, ஒரு உளியையும், சுத்தியலையும் கொண்டு வந்து, அந்த கல்லை செதுக்க ஆரம்பித்த போதுதான், அந்த சிற்பிக்கு தன்னுடைய நிலைமையும், தான் எவ்வளவு வல்லமையுள்ளவரென்பதும் தெரிய வந்தது. நம்மில் அநேகர் நமக்கு இருக்கிற வசதிகளையும், தேவன் நமக்கு கொடுத்திருக்கிற ஆசீர்வாதங்களையும் கண்டு, திருப்தி அடைவதில்லை. மற்றவர்களை பார்த்து, அவர்களை போல எனக்கு இல்லையே என்று அதிருப்திபடுகிறவர்களாகவும், அப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று முறையிடுகிறவர்களாகவும் காணப்படுகிறோம்.  நாம் இருக்கிற நிலைமை நினைத்து திருப்தி அடைவதேயில்லை! எவ்வளவு தான் சம்பளம் உயரட்டும், இன்னும் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று எதிர்ப்பார்ப்பது மனிதனின் இயல்பாக மாறிவிட்டது. அந்த சம்பளத்திற்கு ஏற்ற வேலை செய்கிறோமா என்று பார்த்தால், நிச்சயமாக இல்லை.

.பவுல் சொல்கிறார், 'என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை; ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்பதியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்' என்று. நாம் எந்த நிலைமையில் இருந்தாலும், நாம் மனரம்மியமாக இருக்க கற்று கொள்ளும்போது, தேவன் அதில் மகிழ்ந்து, நம்மை இன்னும் அதிகமாக ஆசீர்வதிக்கிறார். தேவன் நம்முடைய பெலவீனங்களை அறிந்திருக்கிறபடியால், நம்மை ஒருபோதும் கைவிடாதவராக நம்மை தாங்கி வழிநடத்த வல்லவர். அவரே நம் தேவைகளில் அவைகளை சந்தித்து, நம்மை அதிசயமாய் வழிநடத்துவார்.

.எகிப்திலிருந்து கானானுக்கு சென்ற இஸ்ரவேலர் கர்த்தரையே சார்ந்து ஜீவித்தபடியால், நாற்பது வருடங்கள் அவர்கள் வனாந்தரத்திலே இருந்தபோதும், அவர்களுக்கு ஒரு குறையையும் தேவன் வைக்கவில்லை.
ஆனால் சிறுபிள்ளைகள் வளர்ந்தபோது, அவர்கள் துணிகளும் அதற்கேற்றாற்போல பெரிதானது. செருப்புகளும் பெரிதானது. அவர்களுக்கு சாப்பிட மாம்சம் வேண்டும் என்று கேட்ட போது, கீழ்காற்று சிவந்த சமுத்திரத்திலிருந்து, காடைகளை கொண்டுவந்து போட்டது. மாராவின் கசந்த தண்ணீர் மதுரமாக மாறியது. ஒருவரும் வியாதிபடுக்கையில் படுக்கவில்லை. கர்த்தர் அதிசயவிதமாக சந்தித்தார். அதே தேவன் நம் தேவனாய் மாறாதவராய் இருக்கிறபடியால் நாம் அவரை சார்ந்து கொள்கிறபோது, நம் தேவைகளை அதிசயமாய் சந்திப்பார். நாம் மற்றவர்கள் போல இல்லையே என்று முறுமுறுக்க தேவையில்லை, கர்த்தர் அதினதின் நேரத்தில் நம் தேவைகளை சந்தித்து அதிசயமாய் நடத்துவார். நாம் கர்த்தரையே சார்ந்து கொள்கிறபோது இந்த அற்புதங்கள் நம் வாழ்விலும் நிச்சயமாய் நடக்கும். ஆமென்

அல்லேலூயா!

. ஜெபம்

எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, நீர் எங்களுக்கு கொடுத்திருக்கிறவைகளில் நாங்கள் திருப்தியாக வாழ எங்களுக்கு கற்று தாரும். நீர் எங்கள் தேவைகளை சந்திக்கிற தேவனாக எங்களோடு என்றும் இருக்கிறபடியால் எதை குறித்தும் நாங்கள் கவலைபடாதபடி, உம்மையே சார்ந்து ஜீவிக்க கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே

ஆமென்.

Monday 18 March 2013

லேசான உபத்திரவம்

மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது'. - (2 கொரிந்தியர் 4:17).

.
இரண்டாம் உலகப்போரின் வெற்றியில்,அமெரிக்க இராணுவ தளபதி ஜெனரல் ஐசன் ஹோவர் முக்கிய பங்கு வகித்தார். அவர் முதன் முதலாக இராணுவ பயிற்சியில் சேர்ந்தபோது தான் அங்கு படும் கஷ்டங்களை தினமும் தன் தந்தைக்கு கடிதமாக எழுதுவது வழக்கம். அதில் 'அதிகாலை 4 மணிக்கு எழும்ப வேண்டும். ஒரு நாளைக்கு 20 கி.மீ ஓட வேண்டும். மூன்று கி.மீ முள்வேலியினால் ஆன வலையில் முழங்கால் மற்றும் கைளினால் தவழ்ந்து சென்று கடக்க வேண்டும். சுமார் 40-45 டிகிரி வெப்பமுள்ள பாலைவனப்பகுதியில் பயிற்சி எடுக்கும்போது கிடைக்கும் ஆகாரம் 100 மில்லி பால் மட்டுமே'. இவ்வாறு தான் அனுபவிக்கின்ற கஷ்டங்களை கடிதமாக எழுதி அனுப்பினாலும் தந்தையிடமிருந்து ஒரு பதிலும் வரவில்லை. மூன்று மாதங்களில் அலுத்துப் போன ஐசன் நூறாவது கடிதத்தை 25 பக்கமுள்ள நீண்ட கடிதமாக எழுதினார். 'நீங்கள் இன்னும் இதற்கும் பதில் எழுதாவிட்டால், அல்லது இங்கிருந்து என்னை அழைத்து செல்லாவிட்டால், இதுவே என் கடைசி கடிதம். நான் என்னை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டு சவப்பெட்டியில் வந்து சேர்வேன்' என்று எழுதி முடித்தார்.

.
இந்த நூறு கடிதங்களுக்கும் பதிலளிக்க அவரின் தந்தை ஒரு போஸ்ட் கார்டில் ஒரு சம்பவத்தை எழுதினார், 'இரண்டு பேர் சிறையிலடைக்கப்பட்டனர். ஒருவன் தன்னுடைய பரிதாப நிலையைக் கண்டு கண்ணீர் வடித்து தலை கவிழ்ந்வாறே அவ்வறையின் மணலை பார்த்தே துக்கத்துடன் தன் நாட்களை கழித்தான். மற்றவனோ துருப்பிடித்த ஜன்னல் வழியாக ஆகாயத்து நட்சத்திரங்களைப் பார்த்து அவற்றின் அழகினையும், வெளிச்சத்தையும் கண்டு, சந்தோஷத்துடன் காலத்தை கழித்தான். நீ யாரைப் போலிருக்க போகிறாய்?' என்று எழுதி கையெழுத்திட்டு மகனுக்கு அனுப்பி வைத்தார், இந்த கடிதத்தை படித்த ஐசன் உற்சாகமடைந்து, சந்தோஷத்துடன் இராணுவ பயிற்சியை முடித்து இருபதாம் நூற்றாண்டின் யுத்த வரலாற்றில் ஒரு நாயகனாக தன்னை மாற்றிக் கொண்டார். அமெரிக்க தேசத்தின் 34ஆவது ஜனாதிபதியாகவும் மாறினார்.

.
பிரியமானவர்களே, அப்போஸ்தலனாகிய பவுல் பட்ட பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல. எத்தனையோ பாடுகளின் வழியாக அவர் கடந்து சென்றாலும் கிறிஸ்துவுக்காக அத்தனை பாடுகளையும் பொறுமையாக சகித்தார். அந்த பாடுகளை குறித்து அவர் சோர்ந்து போகாமல், கிறிஸ்து தன்னை அழைத்த அழைப்பில் உண்மையாக இருந்தபடியால், தான் பட்ட பாடுகளை, 'இக்காலத்து இலேசான பாடுகள்' என்று ஆச்சரியவிதமாக கூறுகிறார். மட்டுமல்ல, அந்த உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது என விசுவாசித்தார்.நாமும் ஒருவேளை அநேக பாடுகளினூடே கடந்து சென்று கொண்டிருக்கலாம். பாடுகளையே நாம் நோக்கி பார்த்துக் கொண்டிருந்தால் அது பெரியதாகத்தான் தோன்றும். சிறையில் இருந்த கைதி மணலை பார்த்தபடியே தன் வாழ்நாளை கழித்தது போன்று, துக்கத்திலேயே நம் வாழ்நாளை கழித்து விடும்படியாகவே நேரிடலாம். நாம் படும் பாடுகள் எதுவும் நிலையானதல்ல, ஒரு நாள் அவை நம்மை விட்டு கடந்து போகத்தான் செய்யும். ஆனால் இப்படி ஆயிற்றே என்று நாம் துக்கத்தில் மூழ்கிப் போனால் யாராலும் நமக்கு உதவ முடியாது.ஆனால் ஆகாயத்து நட்சத்திரங்களை பார்த்து, தன் துக்கத்தை மறந்து வெளியே வந்த கைதியை போல, நாம் கர்த்தரையே நோக்கி பார்த்து லேசான பாடுகள் என்று அவைகளை விட்டு நாம் வெளியே வரவேண்டும். அதிலேயே மூழ்கிப் போய்விடக்கூடாது. 'அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்' (2 தீமோத்தேயு 2:12) என்ற வார்த்தையின்படி, பாடுகளை சகித்தோமானால், அவரோடேக்கூட ஆளுகையும் செய்வோம் என்ற நம்பிக்கையோடே 'இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்' (ரோமர்8:18)  என்று பவுல் எழுதியபடி வரப்போகும் மகிமையை நினைத்து, இப்போது படும் பாடுகளை 'அதி சீக்கிரத்தில் நீங்கி விடும் லேசான உபத்திரவங்கள்' என்று எண்ணத்தில் வைத்து, அவற்றை மகிழ்ச்சியோடே எதிர்கொண்டு, சகித்து, கிறிஸ்துவோடேக்கூட ஆளுகை செய்ய நம்மை தகுதிப்படுத்துவோமாக! ஆமென் அல்லேலூயா!

அதி சீக்கிரத்தில் நீங்கி விடும் 
இந்த லேசான உபத்திரவம் 
சோர்ந்து போகாதே நீ 
சோர்ந்து போகாதே 
ஈடு இணையில்லா மகிமை 
இதனால் நமக்கு வந்திடுமே

ஜெபம் 
எங்கள்அன்பின் பரலோக தகப்பனே, எங்களுக்கு வரும் பாடுகளில் நாங்கள் அதை பொறுமையோடே சகித்து, அதி சீக்கிரத்தில் இந்த பாடுகள் எங்களை விட்டு நீங்கி போய் விடும் என்று விசுவாசித்து, பாடுகளை பொறுமையோடே சகிக்கும்படி கிருபை செய்யும். என் கிருபை உனக்கு போதும் என்று சொன்ன கர்த்தரின் வார்த்தைகளை நினைவில் வைத்து, உம்முடைய கிருபையை சார்ந்து ஜீவிக்க உதவி செய்யும். பாடுகளை சகித்தோமானால் தேவன் எங்களுக்காக வைத்திருக்கிற மகிமையையும், கிறிஸ்துவுடனேக்கூட ஆளுகை செய்யவும் நாங்கள் கண்டு உம்மை மகிமைப்படுத்த எங்களை தகுதிப்படுத்துவீராக.எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Wednesday 13 March 2013

உதாசீனம் செய்ய வேண்டாம் - எச்சரிப்பு..... ( அவதானம் மிக முக்கியம் )

அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார் (யோவான் 1:12).


அமெரிக்க அதிபராக திரு. ஆண்ட்ரூ ஜேக்சன் அவர்கள் இருந்தபோது, ஒரு மனிதனுக்கு அவன் செய்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. எந்த நாட்டிலும் ஜனாதிபதி தலையிட்டு, அவனுடைய குற்றத்தை மன்னித்தால் அது அவனுக்கு மன்னிக்கப்படும். அப்படி அதிபர் ஆண்ட்ரூ அவனுக்கு மன்னித்து மரண தண்டனையை ரத்து செய்தார். ஆனால் ஆச்சரியவிதமாக அந்த மனிதன் அந்த மன்னிப்பை நிராகரித்தான்.. 

நீதிமன்னறத்தில் உள்ள வக்கீல்களும், மற்றவர்களும் அவனை அந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்ளும்படி எத்தனையோ சொன்னாலும் அவன் உறுதியாக அந்த மன்னிப்பை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டான்..

நீதிமன்றத்தின் நீதிபதிகளும், வக்கீல்களும் அவனிடம் அந்த மன்னிப்பை ஏற்க மறுத்தால் அவனுடைய உயிர் போவது மட்டுமன்றி, அந்த மன்னிப்பை வழங்கிய ஜனாதிபதியை கேவலப்படுத்துவது போல ஆகும் என்றும் அவனிடம் கூறினர். ஆனால் அவனோ உறுதியாக மறுத்து விட்டான். ஆகவே அவர்கள் சுப்ரீம் கோர்ட்டிற்கு அதை கொண்டு சென்றனர். சுப்ரீம் கோர்ட் ஒரு மனிதன் அதை ஏற்றுக்கொண்டாலொழிய சட்டமும் எதுவும் செய்ய முடியாது என்று கூறிவிட்டது. என்ன ஒரு பரிதாபம்!. தேவனின் இரட்சிப்பும் இதுப்போன்றதுதான். பாவிகளாகிய நமக்காக தம்முடைய ஒரே பேறான குமாரனை உலகத்திற்கு அனுப்பி அவர் சிலுவையில் அறையப்பட்டு, இரத்தத்தை சிந்தியதால் உலகத்திற்கு இரட்சிப்பை தேவன் அளித்து விட்டார்.

யார் யார் அதை விசுவாசித்து ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களுக்கு பாவ மன்னிப்பும், இரட்சிப்பும் தேவனால் இலவசமாக கொடுக்கப்படுகிறது. எத்தனை பெரிய கிருபை!. நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் நம் பாவங்களை அறிக்கையிட்டு பாவ மன்னிப்பை பெற்று இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டாலொழிய தேவ நியாயத்தீர்ப்புக்கு யாரும் தப்ப முடியாது. 'அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று' (யோவான் 3:18) என்று வேதம் திட்டவட்டமாக கூறுகிறது.

இரட்சிப்பு கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல, உலகத்தில் வந்த எந்த மனிதனுக்கும் உரியது. 'அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்' (அப்போஸ்தலர் 4:12) என்று வேதம் கூறுகிறது. இப்படியிருக்க அநத நாமத்தை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் நம்முடைய கரத்தில் தான் இருக்கிறது.



Salivation is free but you must receive it




'அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்' எத்தனைப்பேர் என்று ஒரு கணக்கு இல்லை. உலகத்தின் அத்தனை ஜனங்களும் ஏற்றுக் கொண்டாலும் அத்தனைப்பேரும் தேவனுடைய பிள்ளைகளாக நிச்சயமாக முடியும். ஆனால் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைப் பேர்? இயேசுகிறிஸ்து ஒரு சாராருக்கு மட்டும்தான் வந்தார் என்று நினைத்து அவருடைய இரட்சிப்பை தள்ளிவிடுபவர்கள் எத்தனையோ கோடி கோடியான பேர்கள்! அவர் அருளும் பாவ மன்னிப்பை புறக்கணித்து தங்களுடைய வைராக்கியத்தில் வாழ்பவர்கள் கோடி கோடியானோர்!. அத்தனைப்பேரும் கர்த்தரை ஏற்றுக் கொள்ளும்படி அவர்களுக்காக மன்றாடுவோமா? கர்த்தருடைய வசனம் சொல்லப்படும்போது அவர்கள் அதை உணர்ந்து அறிந்து கொள்ளும்படி அவர்களுக்கு உணர்வுள்ள இருதயம் அருளும்படி ஜெபிப்போமா? இரட்சிப்பு இலவசம், ஆனால் அதை ஏற்றுக் கொள்பவர்களுக்கே! 

Sunday 10 March 2013

எக்காள சத்தம்

எக்காளம் தொனிக்கும். அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம். அழிவுள்ளதாகிய இதுஅழியாமையையும். சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும். சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும். - (1கொரிந்தியர் 15:52-54).

தேயிலை தொழிற்சாலையில் ஒருவர் வேலை செய்து கொண்டிருந்தார். அவருக்கு பகல் வேலையும், இரவு வேலையும் மாறி மாறி வரும். ஒவ்வொருமுறை வேலை ஆரம்பிக்கும் போதும் அந்த தேயிலை தொழிற்சாலையில் சங்கு முழங்கும். சில வேளைகளில் அவர், மனைவி பிள்ளைகளோடு அயர்ந்து தூங்கி கொண்டு இருப்பார். அதிகாலை நேர வேலைக்காக சங்கு ஊதும் சத்தம் கேட்டு, எழுந்திருந்து முகத்தை கழுவிவிட்டு வேலைக்கு செல்வார். அந்த வீட்டில் தூங்கும் பலர் அந்த சத்தத்ததை பொருட்படுத்துவதில்லை. அவரும் அவருடைய மனைவியும் மட்டுமே அந்த சத்தத்தை கேட்டு எழும்புவார்கள். மனைவி வேகமாக, காப்பி போட்டு கொடுக்க அவர் தன் வேலைக்கு செல்லுவார். மற்றவர்களோ அயர்ந்து தூங்கி கொண்டிருப்பார்கள்.

பாருங்கள், அவருக்கு மட்டும் அந்த சங்கின் சத்தம் கேட்கிறது. காரணம் அவருடைய உள்ளத்தை ஆயத்தப்படுத்தி வைத்திருந்தபடியினால்தான். வேலைக்கு செல்ல வேண்டுமென்ற கடமை உணர்வு இருக்கிறபடியால் அவரால் எழுந்து விட முடிகிறது. மற்றவர்கள் அதை பொருட்படுத்தாததினால் சங்கு சத்தம் அவர்கள் காதில் விழுவதும் இல்லை, எழுந்திருப்பதும் இல்லை.

இதோ போலதான் அநேக தேவனுடைய பிள்ளைகள் இரவிலே படுக்க போகுமுன், 'ஆண்டவரே என்னை அதிகாலையில் எழுப்பும்' என்று சொல்லிவிட்டு படுக்கைக்கு செல்கிறார்கள். எப்போது பொழுது விடியும்? என் நேசருடைய முகத்தை காண்பேன், மனம் திறந்து அவரிடம் பேசி உறவு கொள்வேன் என்ற ஆவலில் குறித்த நேரத்திற்கே எழும்பி விடுவார்கள். மற்றவர்களோ அயர்ந்து தூங்கி கொண்டிருப்பார்கள்.

இயேசுகிறிஸ்துவின் வருகையின் நாளில் கூட இதே காரியம்தான் சம்பவிக்க போகிறது. யாரெல்லாம் அவருடைய வருகையிலே காணப்பட வேண்டும் என்ற ஏக்கத்தோடும் வாஞ்சையோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ அவர்கள் அந்த எக்காள சத்தத்தை கேட்டவுடன் அறிந்துகொள்வார்கள் இயேசுவின் வருகை வந்துவிட்டது என்று. இமைப்பொழுதில் மறுரூபமாக்கப்பட்டு ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை சந்திப்பதற்கு மத்திய ஆகாயத்திற்கு பறந்து செல்வார்கள். மற்றவர்களுக்கு அந்த சத்தம் கேட்பதும் இல்லை, அவர்கள் எதிர்கொண்டு போவதும் இல்லை.

ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம் என (1தெசலோனிக்கேயர் 4: 16-17) ல் பார்க்கிறோம். அப்போது அழிவுள்ள இந்த சரீரம் அழியாமையை தரித்துக் கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்படும் அல்லேலூயா! அந்த பொன்னான நாளில் நாம் மறுரூபமாக்கப்படும்படி, இப்போதே ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு பரிசுத்தமாய் நம்மை காத்துக்கொள்வோம். இயேசுகிறிஸ்து சீக்கிரம் வருகிறார்!

பிரியமானவர்களே, நமக்கு எந்த ஒரு காரியத்தில் வாஞ்சையும் தாகமும் அதிகமாக இருக்கிறதோ, அது சம்பந்தமான விஷயங்களை கேட்க நம் இருதயம் எப்போதும் விழித்தே இருக்கும். அதுபோல தேவன் மேல் வாஞ்சையும் தாகமும் இருக்குமானால் அவருடைய வசனத்தை கேட்க, அவருடன் உறவுகொள்ள நம் இருதயம் ஏங்கும், எப்போது அவர் வந்தாலும் அவரை சந்திக்க ஆயத்தமாயிருக்கும். ஆயத்தமாவோமா!


அதிகாலையில் உம் திருமுகம் தேடி
அர்ப்பணித்தேன் என்னையே

ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள் 
அப்பனே உமக்குத் தந்தேன் 
ஆராதனை ஆராதனை 
அன்பர் இயேசு ராஜனுக்கே 
ஆவியான் தேவனுக்கே 

இந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும் 
உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும் 
என் வாயின் வார்த்தை எல்லாம் 
பிறர் காயம் ஆற்ற வேண்டும் 

உமக்குகந்த தூய பலியாய்

இந்த உடலை ஒப்புக் கொடுத்தேன் 
ஆட்கொண்டு என்னை நடத்தும் 
அபிஷேகத்தாலே நிரப்பும் 

ஜெபம்

எங்கள் கன்மலையும் மீட்பருமாகிய கர்த்தாவே உம்மை துதிக்கிறோம். இயேசுகிறிஸ்துவின் வருகை எப்போது நடந்தாலும் நாங்கள் அவருக்கு எதிர்கொண்டுவரும்படியாக எங்களை ஆயத்தப்படுத்தி கொள்ள கிருபை செய்யும். எக்காள சத்தம் தொனிக்கையில் நாங்கள் மறுரூபமாகக்கப்பட்டு, கர்த்தருடனே கூட என்றென்றும் இருக்கும்படியாக, அந்த சத்தத்தை கேட்கும் காதுகளையும், விழிப்புணர்வுடன் எங்களை ஆயத்தபடுத்தவும் உதவி செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Wednesday 27 February 2013

ஜெபம் கேட்கப்படாததன் ஒரு காரணம் -ஆய்வு

'..நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது'. - (ஏசாயா 1:15).

ராஜன் ஒரு உதவியை எதிர்பார்த்து தன் நண்பனுக்கு போன் செய்தான். அநத நண்பர் காவல் துறையிலே உயர்ந்த பதவியில் இருந்தார். ராஜன் தொலைபேசியை எடுத்தான். எண்களை சுழற்றினான். நண்பர் இன்னும் போனை எடுக்கவில்லை. மணி அடித்து கொண்டேயிருந்தது. ராஜன் தனது தேவையை மளமளவென்று சொன்னான். போனை வைத்து விட்டான். மறுநாள் 'ஐயோ நான் அவரிடம் கேட்டேனே அவர் எனக்கு ஒன்றும் செய்யவில்லையே' என்று புலம்பினான். ஆனால் அவனோ அவரிடம் பேசவே இல்லை. அவர் மறுமுனையில் போனை எடுக்கவே இல்லை. ஆம் நம்மில் அநேகருடைய ஜெபமும் இப்படித்தான் இருக்கிறது, 'ஆண்டவரே இதுதான் என்னுடைய வேண்டுதல். இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென்'. ஆண்டவர் அந்த முனையில் போனை எடுக்ககூட இல்லை. இப்பொழுது நீங்கள் தேவனிடம் ஜெபிக்கவில்லை. உங்களிடமே ஜெபித்திருக்கிறீர்கள். 'நான் ஜெபித்து விட்டேன், தேவன் எனக்கு பதில் கொடுப்பார்' என எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம். ஆனால் நாம் செய்யும் ஜெபங்கள் கேட்க கூடாதபடி சில தடைகள் நம் வாழ்வில் காணப்படுமேயானால், அதை திருத்தி கொள்ள முயற்சிக்க வேண்டும்.

லூக்கா 18:9-14 வரை உள்ள இயேசுகிறிஸ்து கூறியுள்ள உவமையிலே பரிசேயன் தன்னிடத்தில் தானே ஜெபித்தான். இதை குறித்து ஆங்கில வேதாகமத்திலே மிக தெளிவாக போடப்பட்டிருக்கிறது, He pray to himself என்று. உங்களுக்கு நீங்களே பேசி கொள்வதை போல இன்றும் அநேகர் தேவனை நோக்கி ஜெபிக்கிறேன் என எண்ணுகிறார்கள். ஆனால் தேவன் அந்த ஜெபத்தை கேட்கவில்லை. காரணம் அவர்களின் மனசாட்சி தூய்மையாக இல்லை. பரிசேயனை போல மற்றவர்களை காட்டிலும் நான் நல்லவன் என எண்ணி கொணடிருக்கிறார்கள். இந்த பூமியில் நாம் அற்பமாய் எண்ணும் ஒரு மனிதன் இருந்தால் கூட தேவன் மறுமுனையில் போனை எடுக்க மாட்டார். பிறரை அற்பமாய் எண்ணுகிற நம் ஜெபத்திற்கு தேவன் செவி கொடார். நம் சபையிலுள்ள ஒரு நபரை பார்த்து, 'ஆண்டவரே உமக்கு நன்றி, நான் இந்த ஆளைப்போல இல்லை' என்போமானால் தேவன் நம் ஜெபத்தை கேட்க மாட்டார். ஆனால் ஆயக்காரனோ, ' தேவனே பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்' என்றான். அந்த ஒரே வாக்கியத்தினாலே அவன் தேவனுக்கு முன்பாக பரிசுத்தமாக்கப்பட்டவனாக வீட்டிற்கு சென்றான். ஏன்? அவன் எல்லாரை காட்டிலும் நான்தான் மோசமானவன் என்று உணர்ந்தான். ஆண்டவராகிய வேறு ஒருவரோடும் தன்னை ஒப்பிட்டு பார்க்க முடியாத ஒரு பாி என்று தன்னை தாழ்த்தினான். சில சமயங்களில் நாம் மற்றவர்களை அற்பமானவன் என்று காயப்படுத்தும் வார்த்தைகளால் பேசாமல் இருக்கலாம், ஆனால் நம்முடைய நடத்தையால், மனப்பான்மையினால் அவர்களை சிறியவன் என உணர செய்வோமானால் நம் ஜெபம் கேட்டப்படாது. நான் ஒன்றுமே தவறு செய்யவில்லையே, ஒரு கடின வார்த்தை கூட பேசவில்லையே என நீங்கள் நினைக்கலாம். ஆனால் நம் நடத்தையும், மனப்பான்மையும் நம்முடன் இருக்கும் கணவரையோ, மனைவியையோ, சகோதரனையோ, சக விசுவாசியையோ, குடும்ப அங்கத்தினரையோ சிறியவர்கள் என உணர செய்து விட்டால், அது நம் ஜெபத்தை தேவன் ஏற்று கொள்ளாதபடி தடை செய்து விடும். அந்த பரிசேயன் ஆயக்காரனை அற்பமாய் எண்ணினான். அதுவே தேவன் அவனை ஏற்றுகொள்ளாதபடி செய்து விட்டது. அதே போலத்தான் நாமும் நம்முடைய எண்ணத்திலே தான் நினைக்கிறோம். அதுவே நம்முடைய ஜெபத்தையும் தேவன் கேளாதபடி தடை செய்து விடுமே!

மனந்திரும்புவோமா? நாம் பரிசேயனாய் மாறாதபடிக்கு தேவனுடைய கிருபையை மாத்திரம் சார்ந்து கொண்டு ' கிருபையால் நிலைநிற்கிறோம்' என்பதை உணர்ந்து மனத்தாழ்மையோடு வாழ தேவன் தாமே நம் ஒவ்வொருவருக்கும் உதவி செய்வாராக! ஆமென் அல்லேலூயா!

தாழ்மையுள்ளவரிடம் தங்கிடுதே கிருபை
வாழ்நாளெல்லாம் அது போதுமே
சுகமுடன் தம் பெலமுடன் 
சேவை செய்யக் கிருபை தாருமே

தம் கிருபை பெரிதல்லோ எம் ஜீவனிலும் அதே
இம்மட்டும் காத்ததுவே இன்னும் தேவை கிருபை தாருமே

ஜெபம்:
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, எங்களுடைய ஜெபங்கள் கேட்க கூடாதபடி இருக்கிற தடைகளில் ஒன்றாக நாங்கள் மற்றவர்களை அற்பமாய் எண்ணுகிற காரியம் உணடென்று உணர்த்திய தயவிற்காக நன்றி. அந்த காரியம் எங்களிலே காணப்பட்டதுண்டானால் தயவாய் மன்னித்து எங்களை ஏற்று கொள்ளும். எங்கள் ஜெபத்தை கேட்டருளும். பதிலை கொடுத்தருளும். தாழ்மையை நாங்கள் தரித்து கொள்ளவும், பெருமை கொள்ளாதபடி எங்களை காத்தருளும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Monday 18 February 2013

இறைவனோடு ஒப்புரவாகுதல்


'முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள். எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி. பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி, பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாகத் தேவனுக்கு ஒப்புரவாக்கினார்' - (எபேசியர்2:13-16).

ஒரு ஊரில் இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள். இருவருக்கும் பக்கத்து பக்கத்தில் வீடு இருந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் அன்புடன் பழகி வந்தனர். 40 வருடங்களாக அவர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் பொருட்களை பகிர்ந்து, அமைதியாக வாழ்க்கை நடத்தி வந்தனர். ஒரு நாள் இருவருக்கும் இடையில் ஏதோ தகறாறு வந்து, இருவரும் ஒருவரை ஒருவர் வெறுக்க ஆரம்பித்தனர். ஒருவரோடொருவர் பேசி கொள்வதையே நிறுத்தினர்.

ஒரு நாள் மூத்த சகோதரனுடைய வீட்டுக்கதவை யாரோ தட்டினார்கள். கதவை திறந்தபோது, ஒரு தச்சன் நின்று கொண்டிருந்தார். அவர் அந்த சகோதரனிடம், ``எனக்கு இங்கு ஏதாவது வேலை கிடைக்குமா?' என்று கேட்டார்.

மூத்தசகோதரன் அவரிடம், 'இப்போது எதுவும் வேலை இல்லை, ஆனால் என் இளையசகோதரன் பக்கத்தில் இருக்கிறானே, அவன், என்னோடு சண்டையிட்டு, எங்கள் இருவருக்கும் இடையில் இருந்த பசும்புல்வெளியை புல்டோசர் கொண்டு வந்து இடித்து, இடையில் தண்ணீரை விட்டு, இப்போது எங்கள் இருவருக்கும் இடையில் ஒரு ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. அவன் எனக்கு இளையவன், அவனே அப்படி செய்வானானால், அவனுக்கு மேலாக நான் செய்ய வேண்டும். ஆகவே நீ எட்டு அடி உயரமுள்ள ஒரு பெரிய வேலியை கட்டு. அப்போது நான் அவனை எட்டிக்கூட பார்க்க முடியாதபடி இருக்கும். அதுதான் இப்போதைய முதல் வேலை' என்று கூறினார். வேலை செய்ய சொல்லிவிட்டு, அந்த மூத்த சகோதரனும் வயலில் வேலை செய்ய போய்விட்டார். அந்த தச்சனும், சரி என்று சொல்லிவிட்டு வேலையை ஆரம்பித்தார்.

மூத்தசகோதரன் சாயங்காலத்தில் வீட்டிற்கு வந்தபோது, அப்படியே அவர் வாயடைத்து போய் விட்டார். ஏனெனில், அங்கு வேலிக்கு பதிலாக, இடையில் ஓடின ஆற்றுக்கு மேலாக அழகிய பாலம் ஒன்று கட்டப்பட்டிருந்தது, அந்த பாலத்தின் வழியாக இளைய சகோதரன் வருவதை கண்டார். அருகில் வந்த இளைய சகோதரன், 'நான் உங்களை மோசமாய் பேசி, இடையில் ஆற்றை விட்டிருந்தாலும், நீர் எவ்வளவாய் என்னை நேசித்து நம் இருவருக்கும் இடையில் பாலத்தை கட்டினீர்கள், அண்ணா! என்னை மன்னித்து விடுங்கள்' எனக் கூறி அவருடைய கரத்தை பிடித்து கண்ணீர் விட்டான். அதை கண்ட தச்சன், திரும்பி செல்ல ஆரம்பித்தபோது, மூத்த சகோதரன், 'நில்லுங்கள், இன்னும் அதிகமான வேலை உங்களுக்கு உண்டு' என்று கூற, அவரோ 'நான் இன்னும் எத்தனையோ பாலங்களை கட்ட வேண்டியிருக்கிறது' என்று சொல்லிவிட்டு செல்ல ஆரம்பித்தார்.

நம்மை தேவனோடு ஒப்புரவாக்கும்படி இயேசுகிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்தார். ஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வாசமாயிருக்கிற சர்வ வல்லமையுள்ள தேவனோடுகூட நம்மை ஒப்புரவாக்க வல்லவர் இயேசுகிறிஸ்து மாத்திரமே! வேறு யாரும் தேவனிடத்தில் நம்மை குறித்து பரிந்து பேசவோ, ஒப்புரவாக்கவோ முடியாது. இயேசுகிறிஸ்து புறஜாதியார் என்று அழைக்கப்பட்ட நம்மையும், தேவன் தம்முடைய சொந்த ஜனங்களாக தெரிந்து கொண்ட யூதர்களையும், பகையாக நின்ற பிரிவினையை தகர்த்து, சமாதானம் செய்தார். எப்படியென்றால், "பகையை சிலுவையினால் அவர் கொன்றார்" என்று வாசிக்கிறோம். நமக்கும் தேவனுக்கும் இடையில் பாவம் தடையாக நின்றது. நாம் ஒரு பக்கம், தேவன் ஒரு பக்கம், ஒருவரை யொருவர் நெருங்காதபடிக்கு நடுவில் பெரிய பள்ளம். சிலுவை நம் இருவருக்கும் நடுவில் ஒரு பாலமாக வைக்கப்பட்டு, நம் பாவங்கள் சிலுவையில் கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்டு, இப்போது நாம் தேவனை கிட்டி சேரும்படியாகவும், கிறிஸ்துவின் சிலுவை, நாம் தேவனை அப்பா பிதாவே என்று கூப்பிடும்படியான பாலமாகவும் நம்மை தேவனோடு ஒப்புரவாக்கிற்று.

அவர் சிலுவையில் தம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தை சிந்தினபடியால், "யூதர்களுக்கு மாத்திரம் தேவன்" என்ற நிலைமாறி, அவர் புறஜாதிகளுக்கும் தகப்பனாக இருக்கும்படியாக, இயேசுகிறிஸ்துவின் இரத்தம் நம்மை தேவனோடு ஒப்புரவாக்கிற்று. நாமும் ஆவிக்குரிய இஸ்ரவேலர் என்னும் பெயரை பெற்று கொள்ளும்படியாக, தேவனுக்கு சொந்த ஜனமாக நம்மையும் கிறிஸ்து மாற்றினார். நம் இருவரையும் ஒரே புதிய மனுஷனாக சிருஷ்டித்து, பகையை சிலுவையிலே கொன்று போட்டார். சிலுவை நம்மை தேவனோடுகூட ஒப்புரவாக்கிற்று. அதனால் நாமும் அப்பா பிதாவே என்று தேவனை நோக்கி கூப்பிடும் புத்திர சுவிகாரத்தை கிறிஸ்துவால் பெற்று கொண்டோம்.

கிறிஸ்துவின் சிலுவை மரணம் இல்லாதிருந்தால், தேவன் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு என்று மட்டும் இருந்திருப்பார். ஆனால் கிறிஸ்து நமக்கும் யூதருக்கும் இடையில் இருந்த பிரிவினையை சிலுவையினாலே மாற்றி, நம் இருவரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார். எவ்வளவு பெரிய பாக்கியம் இது! கிறிஸ்து வந்திராவிட்டால், நமக்காக தமது இரத்தத்தை சிந்தியிராவிட்டால், நாம் நித்திய அழிவிற்கு நேராக சென்றிருப்போம், நரகத்திற்கு பாத்திரவான்களாக இருந்திருப்போம். ஆனால் தேவன் நம்மேல் வைத்த அன்பினால், கிறிஸ்துவை உலகத்திற்கு அனுப்பி, அவர்மேல் விசுவாசம் வைக்கிற எவரும் கெட்டுபோகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு கிருபை செய்தார். அவருடைய அன்பு எவ்வளவு பெரியது!

நம்மையும் தேவன் தெரிந்து கொண்டாரே, நித்திய ஜீவனுக்கு பாத்திரவான்களாக மாற்றினாரே, நரக ஆக்கினையினின்று நம் ஆத்துமாவை மீட்டெடுத்தாரே அவருக்கே நித்திய மகிமை உண்டாவதாக! ஆமென் அல்லேலூயா!

தெரிந்து கொண்டார் தெரிந்து கொண்டார்
மகனாக மகளாக தெரிந்து கொண்டார்
நான் இயேசுவின் பிள்ளை
பயமே இல்லை
எந்நாளும் சந்தோஷமே


ஜெபம்
எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே, கிறிஸ்துவின் சிலுவையினால் உம்மோடுகூட நாங்கள் ஒப்புரவாக கிருபை செய்தீரே உமக்கு நன்றி. முன்னே தூரமாயிருந்த நாங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள், கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமாக, இரக்கம் பாராட்டினீரே உமக்கு ஸ்தோத்திரம். அதனால் நாங்கள் பரலோகத்திற்கு உரியவர்களாகவும் நித்திய ஜீவனையும் பெற்று கொள்ளவும் கிருபை செய்கிறதற்காக உமக்கு நன்றி. புறஜாதியான எங்களையும் உமக்கென்று தெரிந்து கொண்டதற்காக உமக்கு கோடி கோடி ஸ்தோத்திரங்களை இயேசுகிறிஸ்துவின் மூலம் உமக்கே ஏறெடுக்கிறோம் எங்கள் நல்ல தகப்பனே ஆமென்.

Tuesday 12 February 2013

பலவீனத்திலும் பெலன்

‘என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்’

தண்ணீர் சுமந்து ஒவ்வொரு வீட்டிற்கும் கொடுக்கும் ஒருவர், இரண்டு பானைகளை ஒரு கம்பில் கட்டி, அதை தன் தோளின் மேல் சுமந்து, அந்த பானைகள் நிறைய தண்ணீர் எடுத்து கொண்டு வந்து, மேடான இடத்தில் இருந்த ஒரு வீட்டிற்கு கொடுப்பது வழக்கம். அதில் ஒரு பானையில் கீறல் விழுந்து இருந்தது. அதனால் அவர் கொண்டு வரும் தண்ணீர், வீடு வந்து சேரும்போது அந்த பானையில் பாதிதான் இருக்கும். மற்றொரு பானை பழுதில்லாமல் இருந்ததால் அதில் தண்ணீர் முழுவதுமாக வீடு வந்து சேரும்.
இப்படி இரண்டு வருடங்களாக அந்த தண்ணீர் கொண்டுவருபவர் ஒன்றறை பானைதான் தண்ணீர் தான் கொண்டு வர முடிந்தது. ஒருநாள் கீறல் இல்லாத பானை மிகவும் பெருமையுடன், ‘நீ இருந்தென்ன, பாதி பானைதான் தண்ணீர் கொண்டு வருகிறாய். நான் பார், முழு பானை தண்ணீர் கொடுக்கிறேன்’ என்று பெருமிதத்துடன் சொல்லி கொண்டது. அதை கேட்ட கீறல் விழுந்த பானைக்கு துக்கம் தாள முடியவில்லை. தண்ணீர் மொள்பவர் தண்ணீரை எடுக்கும் போது, அவரிடம், ‘ஐயா, என்னால் உங்களுக்கு எந்த பிரயோஜனமுமில்லை, நான் கீறல் விழுந்த பானை, தண்ணீரை சரியாக வைக்க முடியவில்லை. வழியெல்லாம் தண்ணீரை சிந்தி பாதி தண்ணீர்தான் தினமும் என்னால் வைக்க முடிகிறது. என்னால் உங்களுக்கு மிகுந்த கஷ்டம்’ என்று வருத்தப்பட்டது.

அதற்கு அந்த தண்ணீர் சுமப்பவர், ‘நாம் போகும் பாதையின் ஓரத்தில் உன் பக்கம் மாத்திரம் பூக்கள் பூத்து குலுங்குவதை பார்த்தாயா?’ ! மற்ற பக்கம் பூக்கள் இல்லாததை பார்த்தாயா? நீ கீறல் விழுந்த பானை என்று எனக்கு தெரியும், அதை எனக்கு சாதகமாக பயன்படுத்தி நல்ல பூக்களை கொடுக்கும் விதைகளை அந்த பாதையில் நட்டேன். அப்போது உன்னிலிருந்த வழியும் தண்ணீர் அதற்கு போதுமானதாக இருந்து, நல்ல பூக்களை கொடுத்தது, இப்போது பார், அந்த பூக்கள், எஜமானருடைய மேஜையில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டு அந்த இடத்தையே அழகு படுத்துவதை!’ என்றார்.

நாம் அனைவரும் கூட ஏதாவது ஒரு வகையில் குறைவுபட்டவர்கள்தான். அதனால் நான் குறைவுபட்டவன் என்னால் என்ன செய்ய முடியும்? என்று நினைத்து உட்கார்ந்திருந்தால் அப்படியே உட்கார்ந்திருக்க வேண்டியதுதான். ஆனால் குறைவுபட்டிருந்தாலும் குயவனாகிய நம் தேவனின் கரத்தில் நம்மை அர்ப்ணித்து ‘அப்பா என்னை உபயோகியும்’ என்று அவரிடம் ஜெபிக்கும்போது, அந்த தண்ணீரை சுமப்பவரை போல நம் தேவன் நம் குறைவுகளிலும், அருமையாக நம்மை உபயோகப்படுத்தி எஜனமானனுடைய மேஜையை அலங்கரிக்க வைப்பார்.

கிதியோன் மீதியானியருக்கு பயந்து, ஆலைக்கு சமீபமாக போரடித்து கொண்டு இருந்தபோதுதான் கர்த்தர் அவனை தம்முடைய ஊழியத்திற்கு அழைத்தார். அவர் அவனை ‘அட கோழையே’ என்று அழைக்கவில்லை, அவர் அவனை "பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார்" என்று தான் அழைத்தார் (நியாயாதிபதிகள் 6:12) அவன் பயந்துதான் இருந்தான். ஆனால் கர்த்தர் அவனை பராக்கிரமசாலியாகவே பார்த்தார். ஆம், நாம் குறைவுள்ளவர்கள்தான் ஆனால் கர்;த்தர் நம்மை குறைவுள்ளவர்களாக பார்க்காமல், நம்மை ஜெயங்கொள்கிறவர்களாக, பராக்கிரமசாலிகளாக, விசுவாச போர் வீரர்களாகவே காண்கிறார்.

நம்முடைய குறைகளிலும் பெலவீனத்திலும் அதையே நினைத்து கொண்டு இருந்தால், அதனால் யாருக்கும் பிரயோஜனமில்லை. அதையெல்லாம் விட்டுவிட்டு தூசியை விட்டு எழுந்து, ‘அப்பா என்னை உபயோகியும்’ என்று அவருடைய பாதத்தை பிடித்துக்கொண்டால், நிச்சயமாக நம்மை உபயோகிப்பார்.

Monday 11 February 2013

இலவசமான கிடைக்கும் இரட்சிப்பு


எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள். - (ரோமர் 3:23,24).

இங்கிலாந்து தேசத்தில் அநேக வீடுகளுக்கு சொந்தக்காரரான செல்வந்தர் ஒருவர், புதிதாய் இரட்சிக்கப்பட்டிருந்தார், எனவே தன் வீடுகளில் வாடகைக்கு தங்கியிருக்கும், குடிமக்களுக்கு, தேவனுடைய கிருபையின் இரட்சிப்பு எப்படிப்பட்டது என்பதை வெளிப்படுத்த விரும்பினார், அதன்படி தனக்கு சொந்தமான வீடு மற்றும் சுவற்றில், ஒரு பெரிய போஸ்டர் ஒட்டி, குறிப்பிட்ட நாளில் காலை 10 மணியிலிருந்து, 12 மணிவரை, யார்யார் தன்னிடம் கடன் பட்டிருக்கிறார்களோ, அவர்கள் வந்து தங்களுடைய கடன் பத்திரங்களை காட்டினால் அவர்களுக்கு அது மன்னிக்கப்படும் என்றும் எழுதி அந்த இடங்களில் ஒட்டியிருந்தார்.

அநேகர் அந்த போஸ்டரை பார்த்தார்கள். ஆனாலும் அவர்களுக்கு நம்பிக்கை வரவில்லை. குறிப்பிட்ட அந்த நாள் வந்த போது, அவருடைய வீட்டின் முன் ஒரு பெரிய கூட்டம் கூடி இருந்தது. கதவு சாத்தப்பட்டிருந்தது. கதவுக்கு வெளியே ஓவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை தெரிவித்து கொண்டு வெளியே நின்றிருந்தார்கள். ''இதுப்போல முட்டாள் தனமாக யாராவது செய்வார்களா'' ''இதில் ஏதோ தந்திரம் இருப்பதாக தெரிகிறது'' ''நிச்சயமாகவே அவர் நம்முடைய கடன்களை மன்னித்து விடுவாரா? ஒருவளை நாம் உள்ளே போனால் நம்மை அவர் முட்டாள் என்று நினைத்து தள்ளிவிடுவாரா?'' என்று அவர்கள் ஒருவரோடொருவர் பேசி கொண்டார்கள்.

''நான் முதலில் போக மாட்டேன், வேறு யாராவது போகட்டும், பின் நான் போகிறேன் என்று நின்றிருந்தார்களே ஒழிய யாரும் முதலில் போக துணியவில்லை. நேரம் கழிந்து கொண்டிருந்தது. கடைசியில் 12 மணி ஆகப்போகும் நேரம், வயதான ஒரு தம்பதியினர், அங்கு வந்தார்கள். அவர்கள் தங்களுடைய கடன் பத்திரங்களை கையில் வைத்து கொண்டு, அங்கிருந்த கூட்டத்திடம் ''வீட்டு சொந்தகாரர் உள்ளே இருக்கிறாரா?'' என்று கேட்டனர், "ஆம் இருக்கிறார்" ஆனால் இதுவரை யாருக்கும் கடன் மன்னிக்கப்படவில்லை'' என்று கூறினர். அப்போது அந்த தம்பதியினர் கண்ணீருடன், ''அவர் ஒட்டிய போஸ்டர்களை பார்த்து தொலை தூரத்திலிருந்து நாங்கள் வருகிறோம், இது உண்மையா பொய்யா என்று எங்களுக்கு தெரியாது ஆனாலும் நம்பிக்கையுடன் செல்கிறோம்'' என்று கூறி உள்ளே சென்றனர். அங்கு முன்னே அமர்ந்திருந்த காரியதரிசி, அவர்களுடைய பேப்பர்களை வாங்கி சற்று அமருமாறு கூறி உள்ளே சென்று, மீண்டும் திரும்பி வந்து, அவர்களுடைய கடனை எஜமானர் அடைத்து விட்டதாக கூறி அவருடைய கையொப்பம் இட்ட பத்திரத்தை எடுத்து கொண்டு வந்து அவர்களிடம் கொடுத்தார்.

சரியாக 12 மணியானதும் கதவுகள் திறக்கப்பட. அந்த வயதான தம்பதியினர் வெளியே வந்தனர். உடனே, வெளியே இருந்த கூட்டம் அவர்களிடம், ''என்ன உங்கள் கடன்களை அவர் மன்னித்தாரா, தன்னுடைய வார்த்தையை அவர் காப்பாற்றினாரா'' என்று மாறி மாறி கேள்விகள் கேட்டனர். அந்த தம்பதியினர், ஆம் என்றனர். சில விநாடிகளில், வீட்டு சொந்தக்காரரும் வெளியே வந்தனர். மற்றவர்கள், தங்கள் பத்திரங்களை கையில் பிடித்து கொண்டு ‘ஐயா எங்களுக்கும் மன்னியும்’ என்று கதறினர். அப்போது அந்த எஜமானர், ‘இப்போது நேரமாகிவிட்டது, உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டது, ஆனால் நீங்கள் அதை பயன்படுத்திக்கொள்வில்லை, நீங்கள் உள்ளே வந்திருந்தால் நான் உங்கள் கடன்களை முழுவதுமாக மன்னித்திருப்பேன். ஆனால் நீங்கள் என்னை நம்பவில்லை'' என்று கூறினார்.

''எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமை இழந்த நிலையில் உள்ளனர். ஆனாலும் இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள். (ரோமர் 3:23:24) என்று வேதவசனம் கூறுகிறது. அதை விசுவாசித்து பற்றி கொள்ளுகிறவர்கள் மன்னிக்கபடுகிறார்கள். அதை விசுவாசியாமல் அந்த கூட்டத்தாரைப்போல அவிசுவாசமாய் வாக்குவாதம்பண்ணிக் கொண்டிருப்பவர்கள், இலவசமாய் கிடைக்கும் இரட்சிப்பை இழந்துபோகிறார்கள்.

இலவச கலர் டிவி தருகிறர்கள் என்றால் அந்த இடத்தில் கூட்டம் அலைமோதும். ஒருரையொருவர் நெருக்கியடித்து, இடியும், மிதியும்பட்டு, எப்படியாவது அந்த டிவி கிடைக்க வேண்டும் என்று எந்த வேதனைகளையும் பொருட்படுத்தாத அதே மக்கள், விலையேறபெற்ற இரட்சிப்பை இலவசமாய் பெற்று கொள்ளுங்கள் என்றால் அதற்கு தயாராக இல்லை.

''கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல' என்று எபேசியர் 2:8-9 -ல் வேதம் தெளிவாக நமக்கு சொல்கிறது. அது தேவனுடைய மிகப்பெரிய ஈவு. நம்முடைய எந்த கிரியைகளினாலும் அதை சம்பாதிக்க முடியாது. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிறதினாலேயே அந்த விலையேறப்பெற்ற இரட்சிப்பு பாவிகளாகிய நமக்கு கிடைக்கிறது. இலவசமாய் கிடைக்கிற அந்த இரட்சிப்பை இன்றே விசுவாசத்தோடு பெற்று கொள்வோமாக. இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள் (2 கொரிந்தியர் 6:2) கிருபையின் காலத்தில் அநுக்கிரக காலத்தில் இருக்கும்போதே நாம் அந்த இரட்சிப்பை பெற்றுக் கொள்ள கர்த்தர் கிருபை செய்வாராக!

நியாய தீர்ப்பின் நாள் நெருங்குதே

நேசர் வர காலமாகுதே

மாய லோகம் நம்பி மாண்டிடும்

மானிடரை மீட்க மாட்டீரோ

ஜெபம்: எங்களை அளவில்லாமல் நேசிக்கும் நல்ல தகப்பனே, எங்களுடைய எந்த கிரியைகளும் சம்பாதிக்க முடியாத விலையேறப்பெற்ற இரட்சிப்பை நீர் எங்களுக்கு இலவசமாய் கொடுத்த தயவிற்காக உமக்கு கோடானுகோடி ஸ்தோத்திரம். அதை விசுவாசத்தோடு பெற்று கொள்ள எங்கள் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்யும். நாட்கள் கொடியதாய் இருக்கிறபடியால், இப்போதே கிருபையின் காலத்தில் ஒவ்வொருவரும் மிகப்பெரிய ஈவாகிய இரட்சிப்பை பெற்று கொள்ள கிருபை செய்யும். எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

Wednesday 6 February 2013

பில்லி பிரே (Billy Bray)

அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம். - (எபிரேயர் 13:15).

தேவன் சில சமயங்களில் பலவீனமான பாண்டங்களை மிகவும் ஆச்சரியமான முறையில் உயயோகிக்கிறார். அப்படி உபயோப்படுத்தப்பட்டவர்களில் கார்னிஷ் பட்டணத்தில் சுரங்க தொழிலாளராக பணிபுரிந்த பில்லி பிரேவும் (Billy Bray) ஒருவர். இரட்சிக்கப்படும் முன் அவர் பயங்கர குடிகாரனாகவும், விபச்சாரக்காரனாகவும், இருந்தார். ஒவ்வொரு இரவும், அவரது மனைவி, சாராயக்கடைக்கு சென்று அவரை அழைத்து. வருவார்களாம். ஆனால் இயேசுவின் மெய் சீடனாக மாறிய பின் இங்கிலாந்தில் ஒரு முனை துவங்கி மறுமுனை ம்ட்டும் அவரை அறியாதவர்கள் எவருமிருக்க முடியாது. அவரது வாழ்வில் நடந்த சில நிகழ்வுகள் நம் ஆவிக்குரிய வாழ்வை நிச்சயம் உற்சாகப்படுத்தும்.
.
பில்லி பிரே, ஆண்டவரின் அன்பு தன் இருதயத்தில் நிரம்பி வழிந்தோடுவதை உணர்ந்தார். எனவே அடிக்கடி ஆனந்த கண்ணீர் வடித்து சந்தோஷத்துடன் நடனமாடுவார். 'நான் தெருவில் நடந்து செல்லும்போது, ஒரு காலை தூக்கினவுடன் ஆண்டவருக்கு மகிமை என்றும் அடுத்த காலை தூக்கும்போது ஆமென் என்றும் என்னால் சொல்லாமல் இருக்க முடிவில்லை' என்பார். 'ஒரு பீப்பாவில் அடைத்து போட்டாலும் அதின் துவாரத்தின் வழியாக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று சத்தமிடுவேன்' என்று கூறுவார். ஒரு சமயம் ஹக்னில் என்ற இடத்தில் நடந்த கூட்டத்தில் 'ஒரு அம்மையார் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என சத்தமிட்டு கொண்டே மரித்தார்கள்' என சொல்லப்பட்டது. உடனே பில்லி சந்தோஷமடைந்து, மரிக்கும் ஒருவர் அவ்விதம் துதிக்க கூடுமானால் உயிருடன் இருக்கும் நாம் தேவனை துதிக்க எவ்வளவாய் கடமைப்படடிருக்கிறோம்' என்றார். இவ்வாறு எப்போதும் தேவனை துதித்து கொண்டும் நடனமாடி கொண்டும் இருப்பதை கண்டு பைத்தியம் பிடித்தவன் என்று பலர் பரியாசம் பண்ணினார்கள். நான் பைத்தியம் பிடித்தவனில்லை என்றும் சந்தோஷத்தில் மூழ்கினவனென்றும் கூறுவார்.

ஒருமுறை பிளேசி என்ற இடத்திலுள்ள ஆலயத்திற்கு அவர் சென்ற போது அங்குள்ள சபையார் தங்கள் கஷ்டங்களையும், பாடுகளையும் அவரிடம் கூறினார்கள். அவர் புன்முறுவலோடு எழுந்து கைகளை தட்டிக்கொண்டு, 'நண்பர்களே நான் காடியை ருசித்திருக்கிறேன். காடியை தேவன் எனககு மிக கொஞ்சமாகவும், தேனை மிக அதிகமாகவும் கொடுத்திருக்கிறார். எப்படியென்றால் நான் துக்கப்பட முடியாத அளவிற்கு தேவன் என்னை சந்தோஷப்படுத்தி விட்டார்' என்றார். உபத்திரவங்கள் தேவன் காட்டும் தயவின் அடையாளங்கள் என்றும் அவற்றை குறித்து கிறிஸ்தவர்கள் களிகூற வேண்டுமெனறும் கூறுவார். 
.
பில்லி ஒருவரை சந்தித்த மாத்திரத்தில் அவருடைய ஆத்துமாவை குறித்து விசாரிப்பார். இரட்சிப்படைந்து விட்டதாக கேள்விப்பட்டால், உடனே குதித்தெழும்புவார், அந்நபரை பிடித்து கொண்டு நடனமாடி அப்படியே அவரை தூக்கி சுமந்து செல்வார்.
.
ஓவ்வொரு நாள் காலையிலும் சுரங்க வேலை ஆரம்பிக்குமுன் அவர் 'ஆண்டவரே இன்று யாராவது சுரங்கத்தில் மரிப்பது உமது சித்தமாயிருந்தால் அது நானாக இருக்கட்டும், அவர்களில் யாரும் மரிக்க வேண்டாம். அவர்கள் ஆயத்தமாயிருக்கவில்லை, நான் ஆயத்தமாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறேன். நான் மரித்தால் உடனே உம்மிடம் வந்து விடுவேன்' என்று ஜெபிப்பார்.

Monday 14 January 2013

ஜான் பென்னி குக்

நன்மை செய்ய சந்தர்ப்பம் கிடைத்தும் நன்மை செய்யாமல் இருப்பது பாவம்

ஜன.15... ஜான் பென்னி குக் எனும் அற்புத மனிதர் பிறந்த நாள். இதே நாளில் 1841 இல் புனேவில் பிறந்தார் இவர். எத்தியோப்பியாவில் ஆங்கிலேய அரசுக்கு பணி செய்துவிட்டு பொதுப்பணி துறை பொறியியல் வல்லுனராக மதுரையில் பணியாற்றினார். பசியும், வறுமையும் தென்பகுதி மக்களை வாட்டுவதை கண்டார். பலபேர் கொள்ளையடிப்பில் ஈடுபடுவதையும் கண்டார். வெறுமனே வைகை நதியை மட்டும் நம்பி வானம் பார்த்த பூமியாக இருந்த இவற்றை எப்படி பசுமையாக்குவது என யோசித்தார்.

அப்பொழுது தான் அவர் கண்களில் முல்லைப்பெரியார் அணை பட்டது. மேற்கு நோக்கி பாய்ந்து அரபிக்கடலில் வீணாக கலக்கும் அந்நதியை திசை திருப்பி கிழக்கு நோக்கி பாயவிட்டால் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை முதலிய பகுதிகளை பசுமை போர்த்திய பூமியாக மாற்றிவிடலாம் என உணர்ந்து ஆங்கிலேய அரசிடம் அனுமதி கேட்டார்.

அரசு யோசித்து. பல லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறும்; வரி வசூல் செய்யலாம் என அவர் சொன்னதும் அனுமதி கொடுத்தது அரசு. பணிகள் தொடங்கி வேகவேகமாக நடந்துகொண்டு இருக்கும்பொழுதே காட்டாற்று வெள்ளம் எல்லாவற்றையும் அடித்துக்கொண்டு போயிற்று. ஆனால், பென்னி குக்கின் நம்பிக்கையை அது அசைக்கவில்லை. அரசிடம் உதவி கேட்டார். அரசு மறுத்தது. தானே களத்தில் இறங்கினார். மக்களை திரட்டி வேலைகளை செய்தார். பணத்திற்காக தன் சொத்துகளை முழுக்க விற்றார். 

எந்த அளவுக்கு வறுமை அவரை ஆட்க்கொண்டது என்றால், எப்படி தமிழர்களுக்கு தாலியோ அதுபோல ஆங்கிலேயர்களுக்கு அவர்கள் படுக்கும் கட்டில்... அதையே விற்று செலவுச் செய்கிற அளவுக்கு எதுவுமே இல்லாத நிலைக்கு வந்தார். ஆனாலும் முல்லைப்பெரியாறு அணையை கட்டி முடித்தார். எட்டு வருட உழைப்பில் உருவாகியது முல்லை பெரியாறு அணை. பென்னி குக்கின் நிலை அப்பொழுது எப்படி இருந்திருக்கும் என சொல்லவேண்டாம் - அவரே சொல்கிற வரிகள் இவை...

"இந்த உலகத்தில் இருக்கப்போவது ஒரே முறை; எனக்கு செய்ய கிடைத்த நல்ல செயலை நான் அலட்சியப்படுத்தவோ, தள்ளிப்போடவோ கூடாது!"என்றார். 

2.23 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பை இன்றைக்கு காத்து நிற்கும் முல்லைப்பெரியாறு அணையை கட்டிய  அவரின் பிறந்த தினம் இன்று. அவரின் மணிமண்டபம் இன்றைக்கு முதல்வரால் திறந்து வைக்கப்பட உள்ளது.

Wednesday 9 January 2013

கருத்துள்ள ஜெபம்

எலியா என்பவன் நம்மைப்போலப்பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்றுவருஷமும் ஆறுமாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை -(யாக்கோபு 5:17).

மார்ட்டின் லூத்தர் அதிகாலை 4-6 மணி வரை ஜெபிக்கும் பழக்கமுடையவர். இதைக் குறித்து அவர் கூறும்போது, 'நான்அதிகாலை ஜெபம் செய்யாவிட்டால் அந்நாளை என் வாழ்வில் இழந்து விட்டதாக உணருகிறேன்' என்றார். ஒருமுறை அவருடைய வாழ்வில் நடைபெற்ற வேடிக்கையான சம்பவம் மூலம் இன்னும் கருத்தாய் ஜெபிக்கும் பழக்கத்தை கற்றுக் கொண்டார். ஒரு நாள் அவர் மதிய உணவு சாப்பிட்டு கொண்டிருக்கும்போது அவரது வளர்ப்பு நாய் அருகில் வந்து படுத்துக் கொண்டது. சாப்பாட்டின் நடுவில் எசேத்சையாக தனது நாயைப் பார்த்தார். அது அவர் தட்டிலிருந்து வறுத்த கறியையே உற்றுப்பர்த்து கொண்டிருந்தது.
.
அதன் கவனத்தை திருப்பும் வண்ணமாக அதன் காதை இழுத்தார். உடம்பை தட்டினார். ஆனால் அதன பார்வையெல்லாம், ஏக்கமெல்லாம், நோக்கமெல்லாம், குறியெல்லாம் அந்த வறுத்த கறியின் மீதே இருந்தது. என்ன செய்தாலும் அதன் கவனம் திரும்பவில்லை. உடனே அவர் அந்த கறித்துண்டை எடுத்து நாய்க்கு போட்டார். அதை போட்டவுடன் அது வாலை ஆட்டிக்கொண்டு குதித்தெழுந்து மகிழ்ச்சியோடு அதை சாப்பிட்டது. மார்டின் லூத்தர் இதை தனது டைரியில் எழுதும்போது 'என்னுடைய நாயைப்போல என் நினைவெல்லாம், ஏக்கமெல்லாம், நோக்கமெல்லாம், குறியெல்லாம், பார்வையெல்லாம் நான் ஜெபிக்கும் காரியத்தின் மீது ஒருமுகப்படுத்தி ஜெபிப்பேனானால் நான் ஜெபிக்கிற எல்லா ஜெபங்களுக்கும் பதில் கிடைப்பது நிச்சயம் என கண்டு கொண்டேன்' என எழுதி முடித்தார்;.
.
பிரியமானவர்களே, நாம் ஒவ்வொருவரும் ஜெபிக்கிறவர்கள்தான். ஆனால் நம்முடைய ஜெபம் எப்படிப்பட்டதாய் இருக்கிறது என சிந்தித்து பார்க்க வேண்டும். நாம் ஜெபிக்கும் காரியத்திற்கான பதிலை தேவனிடமிருந்து பெற்றுக் கொள்வோம் என்ற விசுவாசம் நம்மிடம உண்டா,? அல்லது சாதகமற்ற சூழ்நிலைகளை கண்டும் முழு நம்பிக்கையை தேவன் மேல் வைக்க கூடாத அளவிற்கு நம்மை வழிவிலகச் செய்யும் மனித நம்பிக்கைகளை கண்டும் ஜெபத்திலே பின்னடைகிறோமா? மாறாக நமது நோக்கம், நினைவு, ஏக்கம், பார்வையெல்லாம் தேவன் மேல் மாத்திரம்வைத்து, ஜெபத்திலே உறுதியாய் தரித்திருப்போமானால் தேவனிடமிருந்து நிச்சயமாய் பதிலை பெற்று கொள்வோம்.
மார்டின் லூத்தர் நான் அதிகாலையில் ஜெபிக்காவிட்டால் அந்த நாளை இழந்து விட்டதை போல உணருகிறேன் என்றார். நம்மைக் குறித்தும் நம் ஜெபத்தைக் குறித்தும் என்ன சொல்லுவோம்? ஜெபிக்காமல் நிர்விசாரமாயிருந்தும் ஐயோ ஜெபிக்கவில்லையே என்று உணர்வற்றிருக்கிறோமா? அல்லது ஜெபித்தும் விசுவாசமில்லாமல் கடமைக்காக ஜெபிக்கிறோமா? சிந்திப்போம்.
.
'எலியா என்பவன் நம்மைப்போலப்பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்றுவருஷமும் ஆறுமாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை' என்று வேதம் கூறுகிறது. எலியா தீர்க்கதரிசி நம்மைப் போல சாதாரண மனிதனாக இருந்த போதிலும், அவர் ஜெபித்தபோது, மூன்றுவருஷமும் ஆறுமாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை என்று பார்க்கிறோம். அவர் பக்கம் பக்கமாக ஜெபிக்கவில்லை. அவருடைய ஜெபம் சுருக்கமாக இருந்தாலும், அதை கருத்தாக ஜெபித்தார். தேவன் அந்த ஜெபத்தை கேட்டு பதில் கொடுத்தார்.
.
'அந்திப்பலி செலுத்தும் நேரத்திலே, தீர்க்கதரிசியாகிய எலியா வந்து: ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலிலே நீர் தேவன் என்றும், நான் உம்முடைய ஊழியக்காரன் என்றும், நான் இந்தக் காரியங்களையெல்லாம் உம்முடைய வார்த்தையின்படியே செய்தேன் என்றும் இன்றைக்கு விளங்கப்பண்ணும். கர்த்தாவே, நீர் தேவனாகிய கர்த்தர் என்றும், தேவரீர் தங்கள் இருதயத்தை மறுபடியும் திருப்பினீர் என்றும் இந்த ஜனங்கள் அறியும்படிக்கு, என்னைக் கேட்டருளும், என்னைக் கேட்டருளும் என்றான்' (1 இராஜாக்கள் 18:36-37).
.
பாகாலின் நானூற்று ஐம்பது தீர்க்கதரிசிகளுக்கு முன்பாக ஒரே மனிதனாக எலியா தீர்க்கதரிசி கர்த்தரே தேவன் என்பதை நிரூபிக்கும்படி ஒரு சிறிய ஜெபத்தைத்தான் செய்தார். ஆனால் அது கருத்துள்ள ஜெபமாக இருந்தது. அவர் அப்படி ஜெபித்து முடித்தவுடன் 'அப்பொழுது: கர்த்தரிடத்தில் இருந்து அக்கினி இறங்கி, அந்தச் சர்வாங்க தகனபலியையும், விறகுகளையும், கற்களையும், மண்ணையும் பட்சித்து, வாய்க்காலிலிருந்த தண்ணீரையும் நக்கிப்போட்டது' (38ம் வசனம்).

Sunday 6 January 2013

நியாயாசனத்தின் முன்

ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையம்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும். - (2 கொரிந்தியர் 5:10).


இவ்வுலக வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு கிரியையும் தேவனால் கவனிக்கப்ப்ட்டு வருகிறது. அந்த எல்லா கிரியைக்கும் தக்க பலன் உண்டு. அந்த நாள் நியாயத்தீர்ப்பின் நாள் ஆகும். அன்று சர்வத்திற்கும் நியாதிபதியாம் இயேசுகிறிஸ்து கெம்பீரமாய் நியாசனத்தில் அமர்ந்து நம் ஒவ்வொருவரிடமும் 'உன் உக்கிராண கணக்கை ஒப்புவி' என்று கட்டளையிட்டால் எவ்வாறு இருக்கும் என்று காண்போம்.



நான் உன் கையில் ஒப்புவித்த உலக பொருட்களை நீ எவ்வாறு உபயோகித்தாய், நீ உன் வீட்டையும், நான் உனக்கு தந்த அநேக ஐசுவரியங்களையும் என்னுடைய மகிமைக்காக மாத்திரம் உபயோகித்தாயா? அல்லது அவைகளை உன்னுடைய புகழ்ச்சிக்காகவும், உன்னையே பிரியப்படுத்தி கொள்வதற்காகவும் பயன்படுத்தி கொண்டாயா?



நான் உனக்கு தந்ந உடைகளை நீ எவ்வாறு உபயோகித்தாய்? அவைகளை பெருமைக்கும் மாயைக்கும், பிறரை பாவத்திற்கு ஏதுவாய் தூண்டுகிறவிதமாக கவர்ச்சியாகவும் உடுத்தினாயா? அல்லது தகுதியான வஸ்திரத்தினால் உன்னை ஒழுக்கமாய் மூடுவதற்கும், சீதோஷண நிலையிலிருந்து உனனை காத்து கொள்வதற்காகவும் உடைகளை உடுத்தினாயா?



உன் பணத்தை நீ எவ்வாறு உபயோகித்தாய்? உன் மாம்சத்தின் இச்சைகளையும் உன் கண்களின் இச்சைகளையும் அவ்வுலக ஜீவனத்தின் பெருமைகளையும் பூர்த்தி செய்வதற்கென உபயோகித்தாயோ? அல்லது வீணாக செலவு செய்து உன் பணத்தை சிதறடித்தாயோ? இப்படி இல்லாமல் பணத்தை உனக்கும், உன் குடும்பத்திற்கும் தேவையானதை உபயோகித்து விட்டு, மீதியாய் இருப்பவைகளை வாங்கி கொள்ளும்படி நான் நியமித்த ஏழைகளின் மூலம் எனக்கு திருப்பி தந்தாயா?



நான் உனக்கு ஒப்புவித்த சரீரத்தை எப்படி உபயோகித்தாய்? நீ எனக்கு துதி செலுத்தும்படியே நாவை உனக்கு தந்தேன். அதை தீமை பேசுவதற்கும் பிரயோஜனமற்ற வீண் சம்பாஷணைக்கும் பாய்னபடுத்தினாயா? அல்லது கேட்பவர்களின் செவியை கிருபை பொருந்திய வார்த்தைகளால் நிரப்பினாயா? மேலும் நான் உனக்கு நியமித்த கிரியைகளை நீ செய்து முடிக்கும்படி உனக்கு கரங்களையும் கால்களையும் இன்னும் பல உறுப்புகளையும் வழங்கியிருந்தேன். நீ அவைகளை பயன்படுத்தி, உன்னை பூமிக்கு அனுப்பினவரின் சித்தத்தை செய்த முடித்தாயா? அல்லது உன் மாம்சத்தின் விருப்பத்தையும், உன் உணர்ச்சியும் நடத்திய பாதைகளுக்கு எலலாம் உன் அவயவங்களை ஈனமாய் ஒப்புக்கொடுத்து விட்டாயா?

Wednesday 2 January 2013

உலகின் ஒளி

'நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல்வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்' - (மத்தேயு 5:14-15.

திடீரென்று வீட்டில் கரண்ட் கட் ஆனது. மெழுகுவர்த்தி வைத்த இடத்தை நோக்கி தட்டுதடுமாறி போய் மெழுகுவர்த்திகளை எடுத்து கொண்டு திரும்புகையில், 'அங்கேயே நில்' என்ற சத்தம் கேட்டது. யார் என்று தேடும்போது, 'நான்தான், உன் கையில் இருந்துதான் பேசுகிறேன்' என்று குரல் கேட்டது, பார்த்தால் கையிலிருந்த மெழுகுவர்த்தி! அது என்னிடம், 'என்னை இங்கிருந்து எடுத்து கொண்டு போகாதே' என்று கூறினது. நான் 'என்ன!' என்று ஆச்சரியத்துடன் கேட்ட போது, அது என்னிடம், 'என்னை இந்த அறையிலிருந்து எடுத்து கொண்டு போகாதே' என்று சொன்னது. நான் அதனிடம், 'நீ என்ன சொல்கிறாய்? நீ மெழுகுவர்த்தி, உன்னுடைய வேலை இருளான இடத்தில் ஒளியை கொடுப்பதுதான்!' என்று கூறினேன். அதற்கு அந்த மெழுகுவர்த்தி, 'நான் இன்னும் தயாராகவில்லை, என்னை இந்த இடத்திலிருந்து எடுத்து கொண்டு போகாதே' என்று மீண்டும் என்னிடம் கூறினது. 'நான் இன்னும் ஆயத்தமாகவில்லை, நான் ஒளியை எப்படி கொடுப்பது என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன், அது முடிந்த பிறகு என்னை கொண்டு போ' என்று கேட்டு கொண்டது. எனக்கு ஆச்சரியமாயிருந்தது. 'சரி, நீ மட்டும் தான் இந்த அலமாரியில் இல்லை, உன்னை அணைத்து விட்டு, நான் மற்ற மெழுகுவர்த்திகளை கொண்டு போகிறேன்' என்று கூறினபோது, மற்ற மெழுகுவர்த்திகளும் 'நாங்களும் உன்னுடன் வரமாட்டோம்' என்று முரண்டு பண்ணின. இது என்னடா வம்பாயிருக்கிறது என்று நான் அவைகளிடம், 'வெளியே ஒரே இருட்டாக இருக்கிறது நீங்கள் யாரும் வரவல்லை என்றால், யார் ஒளியை கொடுக்க முடியும்' என்று கேட்டதற்கு, ஒரு மெழுகுவர்த்தி, 'ஒளியை கொடுப்பது எத்தனை முக்கியமானது என்று மற்றவர்களுக்கு விளக்கி கொண்டிருக்கிறேன், நீயும் வேண்டுமானால் கலந்து கொள்' என்று கூறினது. எல்லாம் ஒளியின் முக்கியத்துவத்தை குறித்து ஆராய்ந்து கொண்டும் பேசி கொண்டும் இருந்தனவே அன்றி, இறுதி வரை எந்த மெழுகுவர்த்தியும் தன் ஒளியை எடுத்து கொண்டு வெளியே வர விரும்பவில்லை. அதற்குள் கரண்டும் வந்து விட்டது.

'நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்' என்று இயேசுகிறிஸ்து கூறினார். நாம் யாருக்காவது கிறிஸ்துவின் அன்பை குறித்து கூறியிருக்கிறோமா? உலகத்தில் வந்த எந்த மனிதனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியாகிய கிறிஸ்துவை குறித்து நாம் யாருக்காவது வெளிப்படுத்தியிருக்கிறோமா? உலகம் முழுவதும் இருளுக்குள் மூழ்கி, வழி தெரியாமல் தத்தளித்து கொண்டு இருக்கிறார்கள். நாமோ ஒளியை எப்படி கொடுப்பது என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோமே தவிர, எத்தனையோ பிரசங்கங்களை கேட்டு கொண்டுதான் இருக்கிறோமே தவிர எழுந்து பிரகாசிக்க இதுவரை முன்வராமல், விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைத்து கொண்டிருக்கிறோம். 'விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல்வைப்பார்கள். அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்' என்று இயேசுகிறிஸ்து கூறினார். நாமோ நான் இன்னும் தயாராகவில்லை, நான் சொன்னால் யார் கேட்பார்கள் என்று நம்மை குறித்தே தாழ்வாக நினைத்து ஒளி வீசாமல் மரக்காலால் மூடி வைத்து கொண்டிருக்கிறோம். நாம் தயாராவதற்குள் கர்த்தரின் வருகையும் நடந்து விடும்.
Related Posts Plugin for WordPress, Blogger...