கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Sunday 16 September 2012

வேதாகமமும் – அலைப்பேசியும்

செல்லிடைப்பேசிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம், நமது வேதாகமத்துக்கு கொடுக்கிறோமா? இதோ சில ஆலோசனைகள்:

நாம் செல்லுமிடமெங்கும் அதை எமது கைப்பையில் அல்லது சட்டைப்பையில் எடுத்துச்சென்றால் என்ன?

ஒரு நாளில் அதிக தடவை அதை உபயோகித்தால் என்ன?

அது இன்றி வாழமுடியாது என்ற நிலையை ஏற்படுத்திக்கொண்டால் என்ன?

மற்றவர்களுக்கு அதைப் பரிசாகக்கொடுத்தால் என்ன?

பிரயாணம் பண்ணும்போது அதை பாவித்தால் என்ன?

ஆபத்தானதும் அவசரமுமமான நேரத்தில் எப்படிப் பாவிப்பதென்று கற்றுக் கொடுத்தால் என்ன?

எம் அயலவருக்கு அதை எப்படிப் பாவிப்பதென்று கற்றுக்கொடுத்தால் என்ன?

சரி, இன்னொரு விஷயம்,

செல்லிடைப்பேசியை பாவித்து, அதற்கு உரிய கட்டணத்தை செலுத்தாவிட்டால் தொடர்பு துண்டிக்கப்படும். ஆனால் வேதாகமத்தை அதிகமாக பாவிப்பதினால், நமக்கும் நமது ஆண்டவருக்கும் இடையே உள்ள உறவு அதிகரிக்கும்.

அது சரிதான், உங்களுடைய பரிசுத்த வேதாகமம்தான் எங்கே?

நன்றி: சத்திய வசனம்

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...