கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும். உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

Friday 24 August 2012

இழக்கக்கூடாத புத்தகம்

ஸ்டேன்லி என்பார் ஆபிரிக்கா கண்டத்தினூடாக ஒரு பிரயாணத்தை மேற்கொள்ளும்போது 180 இறாத்தல் நிறையுடைய 73 புத்தகங்களை தன்னுடன் எடுத்துச் சென்றார். 300 மைல்கள் பிரயாணம் செய்தபின்னர், தனது புத்தகப் பொதிகளைச் சுமந்து வந்தவர்களின் தேகநிலை காரணமாகப் புத்தகங்களை வீசிவிட வேண்டியிருந்தது.
ஸ்டேன்லியின் பிரயாணத்தின்போது அவரது புத்தகங்கள் ஒவ்வொன்றாகக் குறைந்து கொண்டே சென்றது. கடைசியில் ஒரே ஒரு புத்தகம் மட்டுமே எஞ்சியிருந்தது. அது அவருடைய வேதப்புத்தகம். அதை அவர் இழக்கத் தயாராக இருக்கவில்லை. அவர் தனது பிரயாணத்தின்போது மூன்று தடவைகள் அவ்வேதப் புத்தகத்தை முழுமையாக வாசித்துள்ளார்.
உண்மையில், நாம் வாழ்வில் எதை இழந்தாலும் நமது வேதப்புத்தகத்தை மட்டும் இழந்துவிடக்கூடாது. ஒரு தடவை லண்டனிலுள்ள பிரபலமான பத்திரிகை ஒன்றின் ஆசிரியர், முக்கியமான நூறு பேருக்கு வினாத்தாள் ஒன்றை அனுப்பினார். அதில் நீங்கள் மூன்று வருட காலம் சிறைத்தணடனை அனுபவிக்க வேண்டி வரும் என வைத்துக் கொள்ளுங்கள். அப்போது மூன்று புத்தகங்களை மட்டுமே உங்களுடன் எடுத்துச் செல்ல முடியும். நீங்கள் எந்தப் பத்தகங்களை எடுத்துச் செல்வீர்கள்? முக்கியத்துவத்தின் அடிப்படையில் அவற்றை நிரற்படுத்துக.“ என்று கேட்கப்பட்டிருந்தது.
பத்திரிகை ஆசிரியருக்குப் பதிலளித்தவர்களின் 98 பேர் முதலில் வேதாகமத்தின் பெயரையே எழுதியிருந்தனர். இவர்கள் ஒரு சிலர் மட்டுமே மார்க்க விடயங்களில் ஆர்வம் மிக்கவர்கள். பெரும்பாலானவர்கள் நாத்திகர்களும், கடவுளைப்பற்றிய சிந்தனையற்றவர்களுமாவார். அப்படியிருந்தும் அவர்கள், தாம் வேதப்புத்தகத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை உணர்ந்திருந்தனர். வேதப்புத்தகம் மட்டுமே நெருக்கடியான சூழ்நிலைகளில் உற்ற நண்பனாயிருக்கும். எனவே நாம் ஒருபோதும் வேதப்புத்தகத்தை மட்டும் இழந்துவி்டக்கூடாது.
கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது (சங். 19:7)
நன்றி – சில சம்பவங்களில் சில சத்தியங்கள்

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...